Wednesday, May 14, 2008

கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமைதான் கிடைக்கிறது

சென்னை, மே 14: கூட இருந்தே குழி பறிக்கும் சிலரின் தோழமைதான் கிடைக்கிறது என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நான்கைந்து பேர் கூட்டணி சேர்ந்து நற்செயல் புரியலாம் என் றால், கூட இருந்தே குழி பறிப்பவரின் தோழமைதான் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் வேம்பாய் கசக்கிறது.

தொங்கலில் சேது சமுத்திரத் திட்டம்:

பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் வலியுறுத் தப்பட்ட, தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது.

இன்னும் எத்தனைக் காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாள்கள் ஓடிப் போய் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. தேசத்தைக் காப்பதா? தேகத்தை துளைத்துக் கூறுபோடும் குண்டு மழைக்கி டையே குழந்தை குட்டிகளோடு தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதா என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

தன்னலம் இல்லாதவர்களும், தாய்நாட்டிற்காக உயிரையும் துறப்பவர்களும் தான் என்னுடன் இருப்பவர்கள் என்ற பெருமிதம் வாய்க்கும் வரையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பூகம்பம், குண்டு வெடிப்பு: பேரவையில் இரங்கல்

சென்னை, மே 14: சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பலியானவர்க ளுக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை காலை பேரவை கூடியதும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பேசியதாவது:

சீனா நாட்டின் தென் மேற்கு மாநிலமான சிஜுவானில் மே 12-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.மே 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாகி உள்ளனர். இந்தச் செய்தி கேட்டு பேரவை அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறது. இந்த இரு சம்பவங்களிலும் பலியான அனைவருக்கும் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம்

சென்னை, மே 14: போலீஸ், தீயணைப்பு துறையினரை திசை திருப்பும் வகையில் வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது. தமிழக காவல் துறைக்கு புதிய காவல் சட் டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான சட்ட முன் வடிவை நிதி அமைச்சர் க. அன்பழகன் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி போலீஸ், தீயணைப்பு துறையினரின் பணிகளை திசை திருப்ப வதந்தி பரப்பி னாலோ, பொய்யான எச்சரிக்கை விடுத்தாலோ ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். ஒருவர் இரண்டாவது முறையாக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ரூ. 4,000 வரை அபராதம் விதிக்கப்படும். போலீஸôரின் பணி நேரம் 8 மணி நேரத்துக்கும் அதிகமா னால் அவர்களுக்குப் போதுமான வசதிகள் வழங்க வேண்டும். மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற போலீஸôர் செல்ல வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதி நிதிகளின் தகுதியின்மையை விசாரிக்க தமிழ் நாடு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

3 ஆண்டு உரிமம்:

பழைய இரும்பு வியா பாரிகள், மோட்டார் வண்டி பழுது பார்க்கும் பட்டறைகள், டிங்கர் கடை உரிமையாளர்கள் ஆகியேருக்கு ஓர் ஆண்டு உரிமம் வழங்கப் பட்டு வருகிறது. இதனை மூன்று ஆண்டாக உயர்த்த வகை செய் யும் மசோ தாவை நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார்.

தனி அலுவலர் பதவிக்காலம் நீடிப்பு:

கூட்டுறத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் கூட்டு றவுச் சங்கங்கங்களின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தாக்கல் செய்தார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் பழகுநர்களின் கால அளவைக் குறைக்க வகை செய்யும் மசோதவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார்.

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயத்துக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார். மேற்கண்ட ஆறு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

'வெட்கப்படுகிறேன்'

சென்னை, மே 14: லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் பேசியதாவது:

லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற் றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.""எனது உறவினர் ஜவஹர் மீது நடை பெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசியபோது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அதனை தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று அமைச்சர் பூங்கோதை எனக்கு எழுதியுள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா

பூங்கோதை ராஜிநாமா சென்னை, மே 14: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அது ஆய்வில் இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை யர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியுள்ளது.இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார்.இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப் பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.

தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதா கப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட் டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைப் பதா அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆபாச நடனத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

சென்னை, மே 13: இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதா னங்களில் அழகிகளின் நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஞா. செந்த மிழன் (படம்) கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனம் - சுற்றுச்சூழல் - இளை ஞர் நலன் - பொது - விளையாட்டு - தமிழ் வளர்ச்சி ஆகிய துறை களின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

20 - 20 கிரிக்கெட் போட்டி நடக் கும் மைதானங்களில் வீரர்களை உற் சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில் இளம் பெண்களை கவர்ச்சி உடை யில் நடனம் ஆட வைக்கின்றனர்.இதுபோன்ற கலாச்சார சீர்கேடுக ளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.வீடியோ கேம்ஸ் சூதாட்டம் சென் னையில் அதிகமாகி விட்டது. இத னைத் தடுக்க வேண்டும்.சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நடக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொல்கிற இடத் தில் நடக்க வேண்டும்.

234 எம்.எல்.ஏ. தொகுதிக்கும் விளை யாட்டுக் கருவிகள் வாங்க ரூ. 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு தொகுதிக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையில் தேவையான விளை யாட்டுக் கருவிகள் வாங்க முடி யாது. எனவே ரூ. 4 லட்சம் ஒதுக்க வேண்டும்.

மாவட்டம் தோறும் விளை யாட்டு விடுதிகள்:

பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் விளை யாட்டுக்கு நேரம் ஒதுக் குவதில்லை. அப்ப டியே ஒதுக்கினாலும் அந்த நேரத்தில் மற்ற பாடங்களை நடத்துகி றார்கள். பள்ளிகள் கல் லூரிகளில் காலியாக உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். மாவட்டம் தோறும் விளையாட் டுப் பள்ளிகள், விளை யாட்டு விடுதிகள் அமைக்க வேண் டும். காவல் துறையில் 14 விளை யாட்டுகள் உள்ளன. 15-வது விளை யாட்டாக கோகோ விளையாட்டை சேர்க்க வேண்டும்.

தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற் கொலை செய்து கொள்வதை தடுப்ப தற்காகவே அதிமுக ஆட்சியில் உட னடித் தேர்வு திட்டம் கொண்டு வரப் பட்டது.தமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர். இளைஞர் களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் வர வேண்டும் என்பதற்காகவே அதிமுக இளைஞர் பாசறை மற் றும் இளம் பெண்கள் பாசறை திட் டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்பிள் கஞ்சா:

தமிழகம் முழு வதும் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதாக செய்திகள் வருகின்றன.மதுரையில் இளைஞர்களையும், கல் லூரி மாணவர்களையும் சீரழிக்கிற வகையில் ஆப்பிள் கஞ்சா உலா வரு வதாக தெரிய வருகிறது. இதனை அரசு தடுத்து மாணவர்களின் நல னைக்காக்க வேண்டும் என்றார் செந் தமிழன்.

விளம்பரப் பலகை: சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை, மே 13: விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்கள் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும் மூன்று சட்ட முன் வடிவுகளை அறிமுகம் செய்தார்.

விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்களில் 75 சதவீதம் அரசின் கணக்கிலும், 25 சதவீதம் சம்பந்தப்பட்ட நகர்ப் புற உள்ளாட்சிகளின் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டு வந்தது.தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி, இந்தக் கட்டணம் முழுவ தையும் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேயருக்கு அதிக அதிகாரம்:

உள்ளாட்சிகளுக்கு அதிக அதி காரம் வழங்க ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் தலை மையில் அமைக்கப்பட்ட குழு மேயருக்கு அதிக அதிகாரம் வழங்க வும், அதற்கேற்ப சட்டங்களை திருத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

சிலைகளை அவமதித்தால் குண்டர் சட்டம்:

தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை (மே 12) அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

வாகனங்களுக்கான ஆயுள்கால வரி உயர்வு:

வாகனங்களுக் கான ஆயுள்கால வரி 6 சதவீத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்ப டும் என்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருந்தார்.அதன்படி, ஆயுள்கால வரியை உயர்த்த வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கே.என். நேரு அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப் புத் திருத்த சட்ட முன் வடிவை சட்டத் துறை அமைச்சர் துரைமுரு கன் அறிமுகம் செய்தார். 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை வணிக வரித்துறை அமைச்சர் உபயத்துல்லா தாக்கல் செய்தார்.

அதுபோல, 2008-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் அறிமுகம் செய்தார்.

தோழமையுடன் வாழ வேண்டும் - பேரவையில் முதல்வர் கருணாநிதி உருக்கம்

அனைவரும் தோழமையுடன் வாழ வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல் வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந் ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், அர சுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் தனது பாராட்டுக்க ளைத் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து தோழமைக் கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேசியதாவது:

"நமது ஒற்றுமையில், தோழமை உணர்வில் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.நீங்கள் விரும்புகிறவரை நான் இல்லாமல், இடையில் பிரிந்து விட்டாலும், யாரோ ஒரு பெரியவன் இட்ட கட் டளை என்று நினைக்காமல், ஒரு சிறியவன் விடுத்த கெஞ்ச லாக ஏற்றுக் கொண்டு, தோழமையுடன் வாழ்ந்து காட்டி தமிழகத்தை, தமிழ் இனத்தை வாழ வைக்க வேண்டும்.50 வயதுக்குப் பிறகு எனக்கு நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நாட் கள் குறைவாக இருந்தால், மக்களுக்கு தொண் டாற்றக் கூடிய நாட்களும் குறைந்து விடும் என்பதால் நீண்ட காலம் வாழ ஆசைப்படுகி றேன்.

ஜம்பம் அடிக்கவில்லை:

என்னுடைய ஒரு நாள் வேலை இப்படி என்று "ஜம்பம்' அடித் துக் கொள்ளவில்லை. இப்படி வேலை செய் தால்தான் நீண்ட காலம் வாழ முடியும் என்ப தற்காக பொதுநலத்தோடு சொல்கிறேன்.மக்களுக்காக தொண்டாற்றுகிற நேரத்தில் எல்லோரோடும் தோழமையோடு பழகி னோம் என்ற திருப்தியோடு மறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

திங்கள்கிழமை (மே 12) காவல்துறை மானியக் கோரிக் கையின்போது எனது பேச்சை கவனித்திருப்பீர்கள்.யாரையும் வசியப்படுத்த வேண்டும், நம் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. எல் லோரும் இணைந்து இந்த நாட்டை, இந்தச் சமுதா யத்தை ஒற்றுமைப்படுத்தி வளம்பெறச் செய்ய வேண் டும்' என்றார் முதல்வர் கருணாநிதி.

நிரம்பி வழிந்த பார்வையாளர் மாடம்

சென்னை, மே 12: பேரவை யில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானி யக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் கரு ணாநிதி பேசினார்.

அப்போது முதல்வர் கருணா நிதியின் மனைவி தயாளு அம் மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, அவரது கண வர், மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, கவி ஞர் தமிழச்சி தங்கபாண்டியன், திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், திமுக அமைப் புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சி களை கவனித்தனர்.

நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, மே 12: தமிழகத்தில் காலியாக உள்ள 201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனு மதி அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் திங்கள்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

நீதிமன்றங்களில் அதி கமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் துரைமுருகன்:

கடந்த ஆட்சியில் வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் நீதிப திகள் யாரும் நியமனம் செய்யப்ப டவில்லை. 81 நீதிபதிகளை நியம னம் செய்ய உயர் நீதிமன்றம் அர சுக்கு கோரிக்கை வைத்தது.அதற்கு அனுமதி தரப்பட்டது.பிறகு 181 இடங்கள் காலியாக உள் ளன என்று கேட்டார்கள்; அதற் கும் அரசு அனுமதி தந்தது. 201 நீதி பதிகளை நியமனம் செய்ய அர சின் அனுமதி பெறாமல் விளம்ப ரம் வெளியிடப்பட்டது. அத னால் அது நின்றுபோனது. இப் போது 201 நீதிபதிகள் நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள் ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது முதல் வரின் பரிசீலனையில் உள்ளது.

ச. லட்சுமணன் (திமுக):

போடி நாயக்கனூரில் உள்ள நீதிமன்றத் துக்கு புதிய கட்டடம் கட்டப்ப டுமா?

அமைச்சர் துரைமுருகன்:

நீதி மன்றங்களுக்கு இடம் தேர்வு செய்வது உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு. போடியில் நீதிமன் றம் கட்ட வேளாண் துறைக்கு சொந்தமான இடத்தை கேட்ட போது மறுத்துவிட்டதாக அர சுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. வேளாண் துறையி டம் இருந்து இடத்தைப் பெற்று புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்ட அறநிலை யத் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஒரு திட்டத்துக்கு இடம் தேவைப்படும்போது அர சின் ஒரு துறையில் இருந்து மற்ற துறைக்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

எந்தத் துறையிடமிருந்து வேண்டுமா னாலும் நிலத்தை வாங்கி விட லாம். வனத் துறை மற்றும் அறநி லையத் துறையிடமிருந்து நில த்தை வாங்குவதற்குள் வைகுண் டம் போய் பாரிஜாத மலரைக் கொண்டு வந்து விடலாம்.