Saturday, April 19, 2008

சென்னையில் அதிமுகவினர் விளக்கேற்றி வழிபாடு

சென்னை, ஏப். 19: சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியை கொண்டாடினார்கள். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிமுகவினர் தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிடுமாறு அதிமுக பொதுச்செயளாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி சென்னையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். வடசென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில் 10 அடி உயர அகல் விளக்கை அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் ஏற்றினார். வட சென்னையில் சுமார் 2,000 பெண்கள் விளக்கேற்றினார்கள்.

தென்சென்னை:

தென் சென்னை மாவட்டத்தில் 10 வட்டங்களில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் சுமார் 5,000 பெண்கள் விளக்கேற்றினார்கள். சைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செந்தமிழன் உள்ளிட்டோர் விளக்கேற்றினார்கள்.

No comments: