Wednesday, April 30, 2008

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி: பேரவையில் பாராட்டு

சென்னை, ஏப். 29: 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண் ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு சட்டப் பேரவை யில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதா வது:

இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி9 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உலக சாதனைப் படைத்துள்ளனர்.இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் விஞ்ஞானிக ளுக்கு முதல்வர் சார்பிலும், எனது சார்பிலும், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அனைத் துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

முதல்வர் மீதான உரிமை மீறல் ஆய்வில் உள்ளது: ஆவுடையப்பன்

சென்னை, ஏப். 29: முதல்வர் மீது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் கொடுத்துள்ள உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் மீது உரிமை மீறல் கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.செங்கோட்டையன் கொடுத்த உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலை வர் தெரிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடை பெற்ற விவாதம் குறித்து வெளியில் அறிக்கை விட்டத தற்காக செங்கோட்டையன் மீது அமைச்சர் துரைமுரு கன், திங்கள்கிழமை (ஏப். 28) உரிமை மீறல் கொண்டு வந்தார்.அதனை ஏற்று செங்கோட்டையன் மீதான பிரச் னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப பேரவைத் தலைவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் திருப்பணி: நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும்

சென்னை, ஏப். 29: கோயில்களில் திருப்பணி செய்வதற்குத் தேவை யான நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பெரியகருப்பன் வேண்டு கோள் விடுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

டாக்டர் க. நெடுஞ்செழியன் (பாமக):

நாமக்கல் மாவட்டம் பர மத்தி ஊராட்சி ஒன்றியம் குன்ன மலை வல்லீஸ்வரர் ஆலயம் 13-ம் நூற்றாண்டில் வல்வில் ஓரியால் கட்டப்பட்ட பழமையான கோயி லாகும். எனவே அங்கு திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

பழமையும், தொன் மையும் வாய்ந்த குன்னமலை வல் லீஸ்வரர் கோயில் 300 அடி உயர மலைக் குன்றின் மேல் உள்ளது. இந் தக் கோயிலுக்கு சொந்தமாக நிலங் கள் எதுவும் இல்லை. இந்தக் கோயிலில் உண்டியலும் வைக்கப் படவில்லை. மலையில் படிக்கட்டு கள் கட்டி திருப்பணி செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரு மளவில் நிதி திரட்ட உறுப்பினர் உதவி செய்தால் விரைவாக திருப் பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ராஜேந்திரன் (திமுக):

சேலம் அயோத்தியாபட்டினத்தில் திரு மலை நாயக்கரால் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் உள் ளது. இந்தக் கோயிலில் திருப்பணி செய்ய அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உரிய காலத்தில் திருப்பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள் ளார். எல்லாக் கோயில்களிலும் ஒரே நேரத்தில் திருப்பணி செய் வது சாத்தியமல்ல.அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். கோயில்களில் திருப்பணி செய்ய அரசு முழுமை யாக நிதி ஒதுக்குவதில்லை. திருப் பணிக்குத் தேவையான நிதியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையை உபயதாரர்களிடம் இருந்து உறுப்பினர்கள் வசூலித்து தந்தால் உடனடியாக திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

ஆறுமுகம் (பாமக):

விலை யேற்றம் காரணமாக திருத்தேர்கள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வரு வதில்லை. எனவே விலையேற்றத் துக்கு ஏற்ப மதிப்பீடு செய்து கூடு தல் நிதி வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் 250 திருத்தேர்கள் செய்யும் பணி நடந்து வருகிறது.தேர் செய்யும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவில்தான் இருக் கிறார்கள் என்பதாலும், விலை யேற்றம் காரணமாகவும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நியாயமான தொகை அவர்களுக்கு வழங்கப்ப டும்.

டி.யசோதா (காங்கிரஸ்):

தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் கோயில் கட்ட அரசு ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது. இது வரை எத்தனைக் கோயில்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள் ளது?

அமைச்சர் பெரியகருப்பன்:

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 16 ஆயிரம் கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயி ரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

பத்திரப் பதிவு அமைச்சர் தகவலுக்கு ஆதாரத்துடன் மார்க்சிஸ்ட் மறுப்பு

சென்னை, ஏப். 29: பத்திர பதிவுக் கான நிலத்தின் மதிப்பு உயர்ந்துள் ளது சம்பந்தமாக பத்திரப் பதிவு அமைச்சர் அளித்த பதிலை சட் டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சி.கோவிந்தசாமி ஆதாரத்துடன் மறுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும் சி. கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு அறிவிப்புக்கு பதில் அளித்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசிய தாவது:

பத்திரப் பதிவுத் துறையில் வழி காட்டி மதிப்புகள் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை கிராமப் புறங்க ளுக்கும், ஆண்டுதோறும் நகர்பு றங்களுக்கும் திருத்தி அமைக்கப் பட்டு வந்தன. ஆனால் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வழிகாட்டி மதிப்புகள் திருத்தி அமைக்கப்படவில்லை.

இதனால் வழிகாட்டி மதிப்பு கள் வெளிச்சந்தையில் நிலவும் மதிப்பினை பிரதிபலிக்காமல், ஒரு சில நிலங்களுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் நிர்ண யம் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.வெளிச்சந்தையில் நிலவும் மதிப் பிற்கு ஏற்றவாறு அறிவியல் ரீதி யாக வழிகாட்டி மதிப்புகளை திருத்தி அமைக்க, மைய மதிப்பீட் டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழு ஆகியவை 2005-ம் ஆண்டு மே 8-ம் தேதி அமைக்கப்பட்டன.

அதன்படி நிர்ணயம் செய்யப் பட்ட மதிப்புகள் பதிவுத் துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகங்களிலும் பார் வைக்கு வைக்கப்பட்டன.2007-ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் நடைமு றைக்கு வந்தன.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மதிப்புகள், கிராமங்களைப் பொறுத்தவரை 1-4-2003 வழி காட்டி மதிப்பிலிருந்து சராசரி யாக 91.68 சதவீதமும், நகர்புறங்க ளைப் பொறுத்தவரை 80.79 சதவீ தம் மட்டுமே உயர்ந்துள்ளன. அந் தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற வாறு சரியான மதிப்புகள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் பாதிப்படையும் வகையில் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்ப டவில்லை.அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் இந்த மதிப்புகளை ஆராய்ந்து அங்கீகா ரம் செய்துள்ள நிலையில் குறை பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.குறைகள் இருப்பதாக பொதுமக்க ளிடம் இருந்து முறையீடுகள் வந் தால் அவை மாவட்ட குழுவில் வைத்து சரிசெய்ய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுரேஷ் ராஜன்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவலகம் 1-க்குப்பட்ட நெரிபெ ரிச்சல் ஊராட்சியில் பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு 2003-ம் ஆண்டு ரூ. 1,31,000 ஆக இருந்தது.தற்போது திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்புகளின் படி நிலத்தின் மதிப்பு ரூ. 69,32,400 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,292 சதவீதம் பத்திரப் பதிவுக் கான நில மதிப்பு உயர்ந்துள்ளது.

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவ லகம் 2-க்குட்பட்ட 15. வேலம்பா ளையம் மூன்றாம் நிலை நகராட்சி யில் 2003-ம் ஆண்டு பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ. 1,84,000 ஆக இருந்தது. திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்பின்படி நிலத்தின் மதிப்பு ரூ. 65 லட்சமாக அதாவது 3,554 சதவீதம் உயர்ந் துள்ளது.

இதனால் ஏழை மக்கள் 4 சென்ட் நிலம் வாங்கினால்கூட ரூ. 70,000 வரை பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக நிலத்தின் மதிப்பை அதிகமாக பதிவு செய்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பத்திரப் பதிவு கட்டணம் அதிகமாகி உள்ளது. இதனை எதிர்த்து அப் பீல் செய்தாலும் 5 சதவீதம் மட் டுமே குறைக்கப்படுகிறது. சுமார் 5,000 சதவீதம் உயர்ந்துள்ளபோது 5 சதவீதம் குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எனவே அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் கோவிந்தசாமி

செந்தில் பாலாஜி (அதிமுக):

கரூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப் படு வதில்லை. இடைப்பட்ட காலத் தில் பதிவு செய்யப்பட்ட கட்ட ணங்களே இப்போதும் நடைமு றையில் உள்ளது.

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

திருத்தி அமைக்கப்பட்ட வழி காட்டி மதிப்பின்படிதான் பத்தி ரப் பதிவு நடைபெற்று வருகிறது.ஆனாலும் உறுப்பினர் தெரிவித்த தகவல் குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு குடியரசில் வேலை

சென்னை, ஏப். 29: ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், ஐக் கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பா னிய நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித் துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவம் பெற்ற பைப் பிட்டர் கள், ஏர் கண்டிசன் பைப்பினை பொருத்த அனுபவம் பெற்ற பிட்டர்கள், ஏர் கண்டி சன் மற்றும் டக் இன்சுலேஷன் பிரிவில் அனுபவம் பெற்ற இன்சுலேட்டர்கள், டிப் ளமோ தேர்ச்சி பெற்று எச்.வி.ஏ.சி. பைப் லைன் மற்றும் டக்ட் இன்சுலேஷன் பிரி வில் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டு நிறுவனத்துக்கு உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச விமா னப் பயணச் சீட்டு மற்றும் இதர சலுகை கள் வழங்கப்படும்.இந்தப் பணிகளுக்கு தகுதி பெற்றவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் மே 2 மற்றும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அடை யாறில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேர்முக தேர் வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

மேலும் விவரங்களுக்கு: 044 2446 4268, 2446 4269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் 21 வாரிசுகளுக்கு வேலை

சென்னை, ஏப். 29: கருணை அடிப்படையில் பால்வளத் துறை மற்றும் ஆவின் நிறு வன ஊழியர்களின் 21 வாரி சுகளுக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது.இது குறித்து செவ்வாய்க் கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால்வளத் துறை ஊழி யர்களின் 9 வாரிசுகளுக்கும், ஆவின் நிறுவன ஊழியர்க ளின் 12 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை அவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அவர்களில் இளநிலை உதவியாளர்களாக நான்கு பேரும், கால அளவை மஸ் தூர்களாக 5 பேரும், ஆவின் சென்னை நிறுவ னத்தில் தொழிற்சாலை உத வியாளர்களாக 12 பேரும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.

பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயர், பால்வள மேம்பாட்டு ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை

சென்னை, ஏப். 28: முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்றும் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை என்று முதல்வர் கரு ணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.""கொடநாடு எஸ்டேட்டில் எவ்வளவு சம்ப ளம் என்று கேட்கும் கோவை தங்கம், கருணா நிதியின் குடும்பத்தினர் வாங்கியுள்ள எஸ் டேட்டுகள் பற்றி கேட்பாரா?'' என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங் கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் சட்டப் பேர வையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவையிலோ, அறிக்கையிலோ விளக்கம ளிக்க வேண்டிய செங்கோட்டையன் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத் துள்ளார். அவருக்கு நான் பதிலளிக்க விரும் பவில்லை.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட் டையன் மீது 1996-ம் ஆண்டு ஊழல் வழக்கு கள் குவிந்தன. அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடல் கொள்ளையர் போல்...:

""முன் னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோ டியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல் இருந்திருக்கக் கூடாது. பஸ்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் செங்கோட்டையன் பெருமள வில் ஊழல் செய்திருப்பதாக ஊழல் ஒழிப் புத் துறையினர் கூறியுள்ளனர். அவர் வாங் கிய சொத்துகளுக்காக முத்திரைக் கட்ட ணம் மட்டும் ரூ. 2.5 கோடி கட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. உயர் பதவியில் உள் ளவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்கா மல் போய்விட்டது. இதனால் சமூக முன் னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதி ராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நீதிமன்றங்கள் தடுக்கக் கூடாது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப் பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது'' என்று நீதிபதி சிவப்பா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த வழக்குகள் அதிமுக ஆட் சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப் புகள் வேறுவிதமாக வந்த போதிலும் நீதிபதி சிவப்பாவால் இந்த அளவுக்கு பாராட்டு பெற் றவர்தான் செங்கோட்டையன். அப்படிப்பட் டவர், நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்ப தைப் போல அறிக்கை விடுத்துள் ளார். முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்னமும் நான் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்க வில்லை என்று கருணாநிதி கூறி யுள்ளார்.

அரசு விழா அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏக்கள் பெயர்

சென்னை, ஏப். 28: அரசு விழா அழைப்பிதழ்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று அ.தி.மு.க., ம.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டிய தால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மானி யக் கோரிக்கை மீதான விவாத் தில் பேசிய மதிமுக எம்.எல்.ஏ.வீர இளவரசன்,

""மார்ச் 26-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங் கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், விமான நிலைய விரிவாக்கம், தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட அந்த விழாவுக்கான அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ.வான எனது பெயர் இல்லை.இது குறித்து ஏப்ரல் 25-ம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கடி தம் கொடுத்திருந்தேன். அது கண்டு கொள்ளப்படவில்லை.இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. ஜனநாயகத் துக்கு இழைக்கப்பட்ட அவமா னம்'' என்றார்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

வேண்டும் என்றே அரசு அவ்வாறு செய்யவில்லை. அரசு விழாக்களில் சில நேரங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் கலந்து கொள்வ தில்லை. எம்.எல்.ஏ.க்கள் விரும் பினால் அவர்களின் அனுமதி பெற்று எதிர்காலத்தில் அழைப் பிதழில் பெயர் அச்சிடப்படும்.

அமைச்சர் எ.வ. வேலு:

அதி முக ஆட்சியில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசு விழா அழைப்பிதழில் இடம் பெற்றதே இல்லை. தற் போது அரசு விழா அழைப்பிதழ் களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்க ளின் பெயர்கள் அச்சிடப்படுகி றது.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுமே அழைப்பிதழில் பெயர் இடம் பெறும் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சொல்கி றார். எம்.எல்.ஏக்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றே விதிமுறைகளில் உள்ளது. விழா வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் எம்.எல்.ஏ.க்க ளின் உரிமை. விதிமுறைகளுக்கு மாறாக அமைச்சர் பேசக் கூடாது.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

விதிமுறைகளின்படிதான் எம்.எல்.ஏக்களின் பெயர்களை அழைப்பிதழில் போடுகிறோம்.ஆனால் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில்லை. அத னால் அரசுக்குதான் அவமானம் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவை யில் நான் கலந்து கொண்ட விழா வில் அழைப்பிதழில் பெயர் இருந்தும் அதிமுக எம்.எல்.ஏக் கள் கலந்து கொள்ளவில்லை.இனி அரசு விழா அழைப்பிதழ்க ளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்க ளின் பெயர் இடம்பெறும்.அவர்கள் கலந்து கொண்டா லும், இல்லாவிட்டாலும் எங்க ளுக்கு கவலை இல்லை.

வைகோவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை, ஏப். 28: சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் பிரதமருக்கு நான் கடி தம் எழுதியதை நிரூ பித்தால்.. என்று விடுத்த சவால் என்ன ஆனது என்று மதி முக பொதுச் செயலா ளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.இது குறித்து கேள்வி- பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடை பெறுவதாக வைகோ கூறியுள்ளார்.பொடா சட்டத்தில், வெளியே வரமுடி யாமல் அவர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார் அல்லவா? சிறையில் உள்ளவ ரைக்கூட நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளது அல்லவா? அதனால் "மினி எமர்ஜென்சி' என்று வைகோ சொல்லத் தான் செய்வார்.

சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதை நிரூபித்தால்... என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல் லுங்கள். பிறகு மெகா எமர்ஜென்சி, மினி எமர்ஜென்சி பற்றி பேசலாம்.விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக் கையின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சலுகை விலையில் சமையல் எண்ணெய் விற்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது.

2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரேஷன் கடைகள் மூலம் சமையல் எண் ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை, அரிசி போன்ற பொருள்களையும் சலுகை விலையில் வழங்கி வருகிறோம். சமீபத்தில் தலை மைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக ளுடன் நீண்ட நேரம் ஆலோசித்து விலைவாசியைக் குறைக்க சில நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.

உ.வே.சா. நினைவு இல்லம்: உ.வே.சா. நினைவு நாளான ஞாயிற்றுக் கிழமை திருவாரூர் மாவட்டம் உத்தமதா னபுரத்தில் அவரது நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை தனி மனிதராக இருந்து நிறைவாக செய்தவர் உ.வே.சாமி நாத அய்யர். அவர் முயற்சி செய்யாவிட் டால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.ஒருவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் அவர் செய்த நல்ல காரியங்களைப் போற்றக் கூடிய அரசு, திமுக அரசு என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கிராம சுகாதார செவிலியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை, ஏப். 27: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறந்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிராம சுகாதார செவிலியரின் சஸ்பெண்ட் உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா ஞாயிற்றுக்கி ழமை வெளியிட்ட அறிக்கை:

தட்டம்மை தடுப்பூசி போடுவது ஒரு குழுப் பொறுப்பு. இந்நிலையில் கிராம சுகாதார செவிலியரை சஸ்பெண்ட் செய்திருப்பது வருந்தத்தக்கது.தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்ட விதத்திலும், போடப்பட்ட முறையி லும் தவறில்லை என்று இது குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதனை ஏற்று சஸ் பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி மருந்துகளைப் பாரம ரிக்க குளர் சாதனப் பெட்டி இருப்பது போல, மற்ற ஊசி மருந்துகளையும் பராமரிக்க தனியாக குளிர் சாதனப் பெட்டி வழங்க வேண்டும்.அத்தியாவசியப் பணியில் முழுமை யாக கவனம் செலுத்த வேண்டியிருப்ப தால், உணவு மேளா, வீடுவீடாகச் சென்று கர்ப்பிணிகளைப் பரிசோதிப் பது போன்ற பணிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களை விடு விக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறார் கருணாநிதி

சென்னை, ஏப். 27: ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கரு ணாநிதி தூண்டிவிடுகிறார் என்று அதிமுக தலைமை நிலையச் செயலா ளர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஞாயிற்றுக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும், அதனை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தி வரும் அதிமுக பொதுச்செய லாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கருணாநிதி தூண்டிவிடுகிறார்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற தொழிலா ளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம், "1997-ல் வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் தினக் கூலி ரூ. 77 ஆக இருந்தது என் றும், 2001-ம் ஆண்டு ஐந்து ரூபாய் குறைப்பதற்கு அதிமுக ஆதரவாக இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட கூலி உயர்த்தப்பட வில்லை என்றும்' தெரிவித்தார்.

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 100 வழங்க வேண்டும் என்று அதி முக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குறிப் பிட்டு, முன்னாள் முதல்வருக்கு சொந் தமான கொடநாடு எஸ்டேட்டில் ரூ.100 தினக் கூலி தரப்படுகிறதா?' என்று கோவை தங்கம் கேள்வி எழுப்பினார்.தேயிலைக்கு நியாயமான விலை கேட்டு போராட்டம் நடத்திய விவசா யிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு பொய்வழக்கு போட்டது. அதிமுக ஆட்சியில் அந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.ஊதியத்தைக் குறைக்க ஒப்பந்தம்: 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், 25 ஏக்கருக்கு குறைவாக உள்ள தேயி லைத் தோட்ட விவசாயிகளுக்கு ரூ.2,800 மானியம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அனைத்துத் தோட்ட தொழிலாளர் சங்கத்துக்கும், தோட் டத் தொழிலதிபர்கள் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த் தையில் தொழிலாளர்களின் ஊதி யத்தை குறைக்க தொழில் தகராறு சட் டம் 18 (1)-ன் கீழ் ஒப்பந்தம் ஏற்பட் டது.இந் ஒப்பந்தத்துக்கும் அதிமுக அர சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் பதை கோவை தங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த உடன்படிக்கையின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம் அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்க ளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொடநாடு எஸ்டேட்டில் தினக்கூலியாக ரூ. 90 வழங்கப்படுகி றது. பொதுவாக நிரந்தரத் தொழிலா ளர்களுக்கு மட்டுமே ரூ. 90 வழங்கப்ப டும். ஆனால் கொடநாடு எஸ்டேட் டில் தாற்காலிக தொழிலாளர்களுக் கும் ரூ. 90 வழங்கப்படுகிறது. அதனால் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிய தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.சட்டத்தில் கூறப்பட்டதைவிட அதி கமாக கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிபவர்களுக்கு போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.

எனவே கொடநாடு எஸ்டேட் தொழி லாளர்கள் பற்றி கோவை தங்கம் கவ லைப்பட வேண்டிய அவசியம் இல்லை.தைரியம் உண்டா?: கொடநாடு பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு, கரு ணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பி னர்களுக்கும், திமுகவினருக்கும் எத் தனை எஸ்டேட்டுகள், நிறுவனங்கள் உள்ளன? அதில் என்ன சம்பளம் வழங் கப்படுகிறது என்று கேட்கும் தைரியம் கோவை தங்கத்துக்கு உண்டா?

தமிழ் பற்றி வாய்கிழிய பேசும் கரு ணாநிதியின் குடும்பத்தில் எத்தனை பேர் தமிழ் வழியில் படிக்கின்றனர்? எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்? கரு ணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள்? அவர்களின் வருமானம் எவ்வளவு? கோடானு கோடி சொத்துக்களை கரு ணாநிதியின் குடும்பத்தினர் எப்படி சம்பாதித்தனர்? மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு செய்த ஊழல் என்ன? தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று பேர் மரணமடைய யார் கார ணம்? முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் எப்படி கொல்லப்பட் டார்? என்பதைப் பற்றியெல்லாம் கோவை தங்கம் கேள்வி எழுப்ப தயாரா? தத்துவம் பேசுவதா? "

"கொடநாடு எஸ்டேட்டில் ரூ. 100 சம்பளம் தருகி றீர்களா? என்று கேட்டால் ஆமாம் அல்லது இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்'' என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசி னார்.தமிழகத்தில் மின்சார வெட்டு உண்டா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசு வது வேடிக்கையாக உள்ளது.

இது போன்ற தேவையற்ற விவகா ரங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு, மின்சார விநியோகம் பற்றி தீவி ரமாக சிந்திக்க வேண்டும் என்று அவ ரைக் கேட்டுக் கொள்கிறேன்.முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் மனம்போன போக்கில் பேசுவதை கோவை தங்கம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.ஏ. செங்கோட்டையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈரோட்டுக்கு புதிய ஆட்சியர்

சென்னை, ஏப். 27: ஈரோடு மாவட்ட ஆட்சியராக மகேசன் காசிராஜன் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத் தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல ரும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, ஞாயிற் றுக்கிழமை பிறப்பித்தார்.இடமாற்றம் செய்துள்ள அதிகாரிக ளின் விவரம்: (ஏற்கெனவே வகித்த பொறுப்பு அடைப்புக் குறிக்குள்)

மகேசன் காசிராஜன், ஈரோடு மாவட்ட ஆட்சியர். (முதல்வர் அலுவ லக கண்காணிப்பு பிரிவு துணை செய லாளர்). டாக்டர் அனுராதா காத்தி ராஜீவன், மாநில திட்டக் குழு உறுப்பி னர் செயலாளர். (விடுமுறையில் இருந் தவர்).

கிரிஜா வைத்தியநாதன், குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு துறை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர். (மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர்).

எஸ்.கே. பிரபாகர், எரிசக்தி துறை செயலாளர். (தமிழ்நாடு தொழில் முத லீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர்)

தயானந்த் கட்டாரியா, வேளாண்மை துறை சிறப்பு செயலா ளர் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகள் திட்ட ஆணையர், (கலால் மற்றும் அம லாக்கம் துறை ஆணையர்). தற்போது இப்பொறுப்பில் இருக்கும் பிரதீப் யாதவ் மாநில அரசுப் பொறுப்புக்குச் செல்கிறார்.

யு. சகாயம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையர். (மாநில தேர்தல் ஆணைய செயலாளர்).

பி. சீதாராமன், டாஸ்மாக், நிர்வாக இயக்குநர். (காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர்).டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த மங்கத்ராம் சர்மா மத்திய அர சின் வணிகத் துறை செயலாளராக நிய மிக்கப்பட உள்ளார். எனவே மாநில அரசுப் பணியில் இருந்து அவர் விடு விக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி

சென்னை, ஏப். 27: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர் ஜென்சி நடைமுறையில் இருப்ப தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சியை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்து உரிமை மறுக்கப்ப டுகிறது. ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி காட்டுதல் என்று ஜனநா யக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை சர்வசாதாரண மாக திமுக அரசு கைது செய்து வருகிறது. ஏப்ரல் 26-ம் தேதி மதுரை வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட் டப் போவதாக அறிவித்த அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுரா மன் உள்ளிட்ட 200 பேரை ஏப்ரல் 25-ம் தேதி இரவே கைது செய்து மறுநாள் இரவு வரை மண்டபத் தில் அடைத்து வைத்துவிட்டு, கரு ணாநிதி மதுரையில் இருந்து திரும் பியதும் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது திமுக அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.

இனி எதிர்காலத்திலும் கருப்புக் கொடி காட்ட நினைத்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப் பேன் என்று கருணாநிதி மிரட்டுகி றார். கடந்த இரண்டு ஆண்டுக ளாக ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்க முற்பட்டு அடக்குமுறையை ஏவியதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.தில்லியில் தடை இல்லை: ஈழ தமிழர் பிரச்னையில் இலங்கை அர சைக் கண்டித்து தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தில்லி அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் எதிரே ஆர்ப்பாட் டம் நடத்த திமுக அரசு தடை விதிக்கிறது.

ஈழத்தில் தமிழ்ச்செல்வன் கொல் லப்பட்டதற்கு இரங்கல் தெரி வித்து ஊர்வலம் செல்ல முயன்ற பழ. நெடுமாறனும், நானும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம்.கடந்த மார்ச் 21-ம் தேதி ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த "தமிழ் ஈழ விடுதலை ஒருங்கி ணைப்புக் குழு' வைச் சேர்ந் தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது.மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்த புரட்சிகர பெண் கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப் பட்டது.

ஜனநாய உரிமைகளை அழிக்க காவல்துறையை முதல்வர் கருணாநிதி பயன்படுத்தி வருகி றார்.அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதை உணர்ந்து, ஜனநாயகத்தில் நம் பிக்கை உள்ள அனைவரும் திமுக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரை உட னடியாக விடுதலை செய்ய வேண் டும் என்று வைகோ தனது அறிக் கையில் கூறியுள்ளார்.