Monday, April 14, 2008

தீண்டாமையை ஒழிப்போம்: சரத்குமார்

சென்னை, ஏப். 13: தீண்டாமையை முழுமையாக ஒழிப்பதே டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். அம்பேத்கரின் 118-வது பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தீண்டாமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தாலும், தனது உழைப்பாலும், விடா முயற்சியாலும் படித்து, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகி, அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி என்னும் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது. இன்று அவரது பிறந்த நாளில் இட ஒதுக்கீடு முக்கிய பரிமாணத்தை அடைந்திருப் பது சமூக நீதிக் கொள்கையை இந்த நாடு மதிப்பதன் வெளிப்பாடாகும்.

இங்கொன்றும், அங் கொன்றுமாக நாட்டில் நிகழும் தீண்டாமைக் கொடுமையை முற்றிலும் ஒழித்து, இட ஒதுக்கீட்டின் பலன்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பெருமை சேர்க்கும்.

சாதி, சமய பேதமற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கரின் பிறந்த நாளில் சபதமேற்போம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

"கலைஞர் களஞ்சியம்': கலிபோர்னியா பல்கலை. வெளியீடு

சென்னை, ஏப். 13: முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளின் தொகுப்பான "கலைஞர் களஞ்சியம்' என்ற நூலை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு மையத்தின் "தமிழ் பீடம்' வெளியிட்டுள்ளது. இந்த நூலை சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் கருணாநிதியிடம் வழங்குகிறார்.

அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) மாலை 5 மணிக்கு இதற்கான விழா நடைபெற இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் முதல்வர் கருணாநிதி

சென்னை, ஏப். 13: சென்னை யில் உள்ள புகழ்பெற்ற டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அமைந்துள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் கதீட்ரல் சாலை யில் 1962 முதல் டிரைவ்-இன் உட் லண்ட்ஸ் ஹோட்டல் செயல் பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் முதன்முதலாக காரில் அமர்ந்தபடியே உண வருந்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில் இயற்கையான சூழலில் அமைந் துள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான இந்த இடம் தோட்டக்கலை சங் கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தோட்டக்கலை சங்கம் இந்த இடத்தை டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு உள் குத்தகைக்கு விட்டது.தற்போது இந்த இடத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ""உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் தமிழக அரசு தோட்டக்கலைக்கு சொந்தமானது'' என்ற அறிவிப்பு பலகையை தமி ழக அரசு வைத்தது.

இந்நிலையில் டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆப்கனில் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்

சென்னை, ஏப். 13: ஆப்கானிஸ் தானில் கொல்லப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தசாமி குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள் ளார். இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம் கே. திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

இந்தச் செய்தி அறிந்து முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்ததோடு, கோவிந்தசா மியை இழந்து வாடும் குடும்பத் துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பள்ளிச் சிறுவர்களுக்கு கார்ட்டூன் பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 13: ரானு கார்ட்டூன் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட் டளை 6 வயது முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு குறுகிய கால ஓவியம், கார்ட்டூன் பயிற்சி முகாமை நடத்து கிறது.

ஏப்ரல் 18 முதல் 22-ம் தேதி வரை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், ஏப்ரல் 27 முதல் மே 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கற்பகவள்ளி உயர்நிலைப் பள்ளியிலும், மே 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு மாம்பலம் எஸ்.ஆர்.எம். நைட்டிங் கேல் உயர்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறும்.

அடிப்படை ஓவியம், இயற்கை காட்சிகள், மனிதன், பறவை, விலங்கு களின் முகஅமைப்புகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கான ஓவி யம், எண்கள், எழுத்துக்களை பயன்படுத்தி ஓவியம் ஆகியவற்றை எளிமையாக வரைய இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:

044 -2464 0487, 94442 48579.

ஆசிரியர்களுக்கு இலவச சமய பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 13: ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை மே 5 முதல் 9-ம் தேதி வரை கோடைகால சமயப் பயிற்சி முகாமை நடத்துகிறது. சூர்யநமஸ்காரம், இந்து சமய நெறிகள், சைவ, வைணவ சமயக் கோட்பாடுகள், திருமுறைகள், ஆலய வழிபாடு ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இல வசம். இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களை பற்றிய விவரங்களுடன், சுய விலாசமிட்ட ரூ. 5 ஸ்டாம்ப், கவருடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

அமைப்பாளர், ஆசிரியர் சமய பயிற்சி வகுப்பு, சங்கராலயம், 65, ஸ்பர்டாங்க் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

உள்ளாட்சிப் பணியாளர் கையேடு வெளியீடு

சென்னை, ஏப். 13: மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 8 பணியமைப்புகளில் பணிபுரியும் 8,620 அலுவலர்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் அடங் கிய கையேடு வெளியிடப்பட்டது.சென்னையில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கையேட்டை வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவையின் தலைவரும், ஆலந்தூர் நகராட்சித் தலைவருமான ஆர்.எஸ். பாரதி பெற்றுக் கொண்டார்.

நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் கீழ் 7 மாநகராட்சிகளும், 150 நகராட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்க ளின் பெயர், வண்ணப் புகைப்படம், முகவரி, பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய கையேடு, 2007-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது.

அதுபோன்று தற்போது வெளியிடப்பட்டுள்ள கையேட்டில், பணியாளர்களின் பெயர், பிறந்த நாள், பணியில் சேர்ந்த நாள், பெறும் ஊதியம், தெரிந்த மொழிகள், வகித்த பதவிகள், தற் போது பணிபுரியும் இடம், ஓய்வு பெறும் நாள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் அவர்களது புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளன.