சென்னை, ஏப். 20: யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு வராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கேள்வி - பதில் வடிவில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக ரூ. 1,300 கோடியை ஏன் ஜப்பானிடம் வாங்க வேண்டும்? அரசியல் கட்சிகளுக்கு பணம் சப்ளை செய்வதற்காக இங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகுதான் இதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் கூறியிருக்கிறார். அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கும் எனக்கு அந்த இரண்டு நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது. அப்படியே தெரிந்தாலும், யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக் கம் எனக்கு வராது. அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில் இது போன்று பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது.
ஒளிந்து கொள்வது எங்கே?
தமிழக உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை புலனாய்வுத் துறை ஒட்டுக் கேட்டதாகக் கூறி, ஒரு சி.டி.யை அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் தூக்கிக் காட்டிய காட்சி புகைப்படமாக வந்திருக்கிறது. அவர்களின் அந்த மிரட்டலுக்கெல்லாம் யார் பயப்படுவார்கள்? அவர்கள் சி.டியை காட்டுவது இருக்கட்டும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்த அவர்களின் கையெழுத்தோடு கூடிய கோப்புகளை தூக்கிக் காட்டினால் எங்கே போய் ஒளிந்து கொள்வார்கள்?
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொழியாக தமிழைக் கொண்டுவர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று மத்திய சட்ட அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் கூறியுள் ளார்.அவர் அளித்த உறுதி மொழியின் படி விரைவில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று நம்புகிறேன்.
மரண தண்டனை...:
உலகளவில் மரண தண்டனையே கூடாது என்ப துதான் எனது கொள்கை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக வேண்டுகோள் விடுத்து, பாகிஸ்தானின் லாகூர் சிறையில் வாடும் இந்தி யரான சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
சவால் விடுவதா?
தமிழ்நாடு, கர்நாடக மக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு ஒத்திவைத்ததற்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று துள்ளிக் குதிக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் இருந்த போது வாய்மூடி மெüனமாக இருந்தவர்கள் தி.மு.க. அரசு தானாக முன்வந்து, தூங்கிக் கொண்டிருந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து நிறைவேற்ற முன்வந்துள்ள நிலையில் சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, April 24, 2008
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு ஏன்?
சென்னை, ஏப். 20: மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள வரைவு சாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லியில் நடை பெறும் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார் பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி தமிழகத்தி லிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்துள்ளது.
அதில், "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்த வரைவு சாசனம் நிறைவேற்றப்பட்டு பிரதமரி டம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
பிரதமருக்குக் கடிதம்:
இதுகுறித்து மார்ச் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிராக இந்த வரைவு சாசனம் அமைந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மாநில அரசுகளை பலவீனப் படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற் சிகளை ஏற்க முடியாது.
ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று அந்தக் கடிதத் தில் கருணாநிதி கூறியிருந்தார். முதல்வரின் கடிதத்தில் உள்ளபடி ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படவில்லை. எனவே தில்லி மாநாட்டில் கலந்து கொள்வ தில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது மேற்கு வங்க அரசும், மத்திய அரசின் வரைவு சாசனத்தை எதிர்த்து மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகா ரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி வழங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழக அரசு முன்னணியில் உள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்ட்டு அவற்றின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மாநில அரசு தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து தான் வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார் பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி தமிழகத்தி லிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்துள்ளது.
அதில், "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்த வரைவு சாசனம் நிறைவேற்றப்பட்டு பிரதமரி டம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
பிரதமருக்குக் கடிதம்:
இதுகுறித்து மார்ச் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிராக இந்த வரைவு சாசனம் அமைந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மாநில அரசுகளை பலவீனப் படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற் சிகளை ஏற்க முடியாது.
ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று அந்தக் கடிதத் தில் கருணாநிதி கூறியிருந்தார். முதல்வரின் கடிதத்தில் உள்ளபடி ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படவில்லை. எனவே தில்லி மாநாட்டில் கலந்து கொள்வ தில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது மேற்கு வங்க அரசும், மத்திய அரசின் வரைவு சாசனத்தை எதிர்த்து மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகா ரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி வழங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழக அரசு முன்னணியில் உள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்ட்டு அவற்றின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மாநில அரசு தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து தான் வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
மனநோயாளிக்கு பின்னால் உள்ள நோயாளிகளை கண்டறிய வேண்டும்:
மார்க்சிஸ்ட் சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை அவமதித்த மனநோயா ளிக்கு பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன் அரசைக் கேட்டுக் கொண்டார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, மர்ம நபர்களால் ஏப்ரல் 21-ம் தேதி அவமதிக் கப்பட்டது. இது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை மனநோயாளியால் அவமதிக்கப்பட்டது வேதனையைத் தருகிறது. இந்த மனநோயாளிக்குப் பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் தியாக வாழ்வு வாழ்ந்த தேசியத் தலைவர். அவரை வைத்து தன் நலனை வளர்த்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது.
துரைராஜ் (அதிமுக):
மதுரை யில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒரு மனநோயாளியை கைது செய்திருப்பது போலீஸôர் திட்டமிட்டு நடத்திய நாடகம். உசிலம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சிலைகளைப் பற்றி இந்த அரசு எங்கே கவலைப்படப் போகிறது? தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உ. மூர்த்தி (திமுக):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதிதான் உருவாக்கினார். திமுக ஆட்சியில்தான் மூன்று கல்லூரிகள் அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சி யில்தான் தேவர் சமுதாயதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தேவர் சிலையை அவமதித்த மனநோயாளியை போலீஸôர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.
ராஜேந்திரன் (காங்கிரஸ்):
மதுரை கோரிப்பாளையத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தேவர் சிலையை அவமதித்த மனநோளி கைது செய்யப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
திமுக எம்.எல்.ஏ மூர்த்தியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திரனும் தவறான தகவலைத் தந்துள்ளனர்.பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையா தேவர்தான் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை உருவாக்கினார். கருணா நிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்த சிலையை வி.வி.கிரி திறந்து வைத்தார்.
ஜி.கே. மணி (பாமக):
கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வேதனையைத் தரு கிறது. கைது செய்யப்பட்ட மன நோயாளிதான் உண்மையான குற் றவாளியா? அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும்.
வீர இளவரசன் (மதிமுக):
வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகள் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு இருந்த நிலங்களை எல்லாம் தலித் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அப்படிப்பட்ட தேவர் திருமகனாரின் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். வேறு எந்த தலைவரின் சிலைக் கும் இதுபோன்ற அவமதிப்பு நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, மர்ம நபர்களால் ஏப்ரல் 21-ம் தேதி அவமதிக் கப்பட்டது. இது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை மனநோயாளியால் அவமதிக்கப்பட்டது வேதனையைத் தருகிறது. இந்த மனநோயாளிக்குப் பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் தியாக வாழ்வு வாழ்ந்த தேசியத் தலைவர். அவரை வைத்து தன் நலனை வளர்த்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது.
துரைராஜ் (அதிமுக):
மதுரை யில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒரு மனநோயாளியை கைது செய்திருப்பது போலீஸôர் திட்டமிட்டு நடத்திய நாடகம். உசிலம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சிலைகளைப் பற்றி இந்த அரசு எங்கே கவலைப்படப் போகிறது? தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உ. மூர்த்தி (திமுக):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதிதான் உருவாக்கினார். திமுக ஆட்சியில்தான் மூன்று கல்லூரிகள் அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சி யில்தான் தேவர் சமுதாயதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தேவர் சிலையை அவமதித்த மனநோயாளியை போலீஸôர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.
ராஜேந்திரன் (காங்கிரஸ்):
மதுரை கோரிப்பாளையத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தேவர் சிலையை அவமதித்த மனநோளி கைது செய்யப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
திமுக எம்.எல்.ஏ மூர்த்தியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திரனும் தவறான தகவலைத் தந்துள்ளனர்.பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையா தேவர்தான் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை உருவாக்கினார். கருணா நிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்த சிலையை வி.வி.கிரி திறந்து வைத்தார்.
ஜி.கே. மணி (பாமக):
கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வேதனையைத் தரு கிறது. கைது செய்யப்பட்ட மன நோயாளிதான் உண்மையான குற் றவாளியா? அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும்.
வீர இளவரசன் (மதிமுக):
வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகள் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு இருந்த நிலங்களை எல்லாம் தலித் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அப்படிப்பட்ட தேவர் திருமகனாரின் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். வேறு எந்த தலைவரின் சிலைக் கும் இதுபோன்ற அவமதிப்பு நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு
சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இது குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சிலை பைத்தியக்காரரால் அவமானப்படுத்தப் பட்டுள்ளது. இனி இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்த சிலைக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். முத்துராமலிங்கத் தேவர் இன்று சிலை வடிவத்தில் இருந்தாலும் காமராஜரை உருவாக்கிய, தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தலைவர். தேவருக்கும் காமராஜருக்கும் சில அரசியல் மாறுபாடுகள் இருந்தது. ஆனாலும் தேவர் மீது காமராஜர் கொண்ட அன்பும் பாசமும் எள்ளளவும் குறைந்தது இல்லை.
தேவர் மீது அண்ணா மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர். எளிமைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர்.
வீட்டுக்குள் இருந்தே ஓட்டு:
அவரது மறைவு தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக் கியது. வீட்டுக்குள் இருந்து கொண்டு ஓட்டு வாங்கிய தலைவர் இந்தியாவில் அவர் மட்டுமே. அப்படிப்பட்ட தலைவரை இன்னும் சில காலம் பாதுகாக்க முடி யாமல் போனது, நமக்கு அவப்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தேவர் சிலை இல்லாத இடங்கள் இல்லை என்கிற அளவுக்கு பல்லாயிரக்கணக்கான சிலைகள் உள்ளன.
சிலர் தேவரின் அருமை பெருமைகளை உணராமல் அவரது சிலையை உடைத்தும், அசிங்கப்படுத்தியும் வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையை பைத்தியக்காரர் ஒருவர் அசிங்கப்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர் கருணாநிதி.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சிலை பைத்தியக்காரரால் அவமானப்படுத்தப் பட்டுள்ளது. இனி இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்த சிலைக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். முத்துராமலிங்கத் தேவர் இன்று சிலை வடிவத்தில் இருந்தாலும் காமராஜரை உருவாக்கிய, தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தலைவர். தேவருக்கும் காமராஜருக்கும் சில அரசியல் மாறுபாடுகள் இருந்தது. ஆனாலும் தேவர் மீது காமராஜர் கொண்ட அன்பும் பாசமும் எள்ளளவும் குறைந்தது இல்லை.
தேவர் மீது அண்ணா மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர். எளிமைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர்.
வீட்டுக்குள் இருந்தே ஓட்டு:
அவரது மறைவு தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக் கியது. வீட்டுக்குள் இருந்து கொண்டு ஓட்டு வாங்கிய தலைவர் இந்தியாவில் அவர் மட்டுமே. அப்படிப்பட்ட தலைவரை இன்னும் சில காலம் பாதுகாக்க முடி யாமல் போனது, நமக்கு அவப்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தேவர் சிலை இல்லாத இடங்கள் இல்லை என்கிற அளவுக்கு பல்லாயிரக்கணக்கான சிலைகள் உள்ளன.
சிலர் தேவரின் அருமை பெருமைகளை உணராமல் அவரது சிலையை உடைத்தும், அசிங்கப்படுத்தியும் வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையை பைத்தியக்காரர் ஒருவர் அசிங்கப்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர் கருணாநிதி.
தேவர் சிலையை உடைத்தது யார்?
சென்னை, ஏப். 23: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை உடைத்தது யார்? என்பது தொடர்பாக அதிமுக -கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி, "ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலை சில மாதங்களுக்கு முன் உடைக் கப்பட்டது. மணல் எடுப்பதில் மாமூல் வாங்குவது தொடர்பான பிரச்னையில் அந்தச் சிலையை உடைத்தது அதிமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மையின் மகன்' என்றார்.
உடனே அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் எழுந்து நின்று ராமசாமி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து, "அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி பேசினார். அதனை நிரூபிக்க தயாரா? அதுவரை அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றார்.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஊர் நாட்டாண்மையின் மகன்தான் அங்குள்ள தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று சிவபுண்ணியம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். அவர் அரசுக்கு வக்காலத்து வாங்கட்டும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இயக்கத்தை அவர் அவமதிக்கக் கூடாது.
முதல்வர் கருணாநிதி:
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது முத்துதேவன்பட்டியில் இப்போது மதிமுகவில் இருக்கும் ராமகிருஷ்ணனின் நிலத்தை வாங்கி எனது மகன் அழகிரிக்கு எழுதிக் கொடுத்ததாக இதே அவையில் அப்போது அமைச்சராக இருந்த குழந்தைவேலு குற்றம் சாட்டினார்.அதற்கான ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இல்லையெனில் குழந்தைவேலு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றேன். இந்த சவாலை குழந்தைவேலு ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் ஆதாரத்தைக் கொடுக்க முடிய வில்லை. நானும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அவர் ஆதாரத்தைக் கொண்டு வந்தார். அது போலி ஆதாரம் என்பதை அப்போதிருந்த பேரவைத் தலைவர் கண்டுபிடித்து எனக்கு சாதகமாக தீர்ப்பு தந்தார். ஆனாலும் குழந்தைவேலு ராஜினாமா செய்ய வில்லை. அதுபோன்ற ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள் ளது.
செங்கோட்டையன் (அதிமுக):
நிரூபிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? சங் கரலிங்கபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்ட வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. முதல்வர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.
அமைச்சர் பரிதி இளம் வழுதி:
சரக்கு இருந்தால் சவால் விட லாம். இல்லையென்றால் சலாம் போட்டு ஓடி விட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்:
குற்றம் சாட்டிய உறுப்பினர் நிரூபிக்கிறேன் என்று பொறுப்பு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபு.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
ஆளும் கட்சியினர் பிரச்னையை தீர்ப்பதற்கு முயலாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது வேதனையைத் தருகிறது.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரம் ஊர் நாட்டாண்மை வேல்முருகனின் தம்பி மாரிமுத்துதான் தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
முதல்வர் கருணாநிதி:
சிவ புண்ணியமும், செங்கோட்டையனும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை என்னிடம் கொடுத்தால் நாளை எனது முடிவை அறிவிக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி, "ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலை சில மாதங்களுக்கு முன் உடைக் கப்பட்டது. மணல் எடுப்பதில் மாமூல் வாங்குவது தொடர்பான பிரச்னையில் அந்தச் சிலையை உடைத்தது அதிமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மையின் மகன்' என்றார்.
உடனே அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் எழுந்து நின்று ராமசாமி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து, "அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி பேசினார். அதனை நிரூபிக்க தயாரா? அதுவரை அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றார்.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஊர் நாட்டாண்மையின் மகன்தான் அங்குள்ள தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று சிவபுண்ணியம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். அவர் அரசுக்கு வக்காலத்து வாங்கட்டும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இயக்கத்தை அவர் அவமதிக்கக் கூடாது.
முதல்வர் கருணாநிதி:
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது முத்துதேவன்பட்டியில் இப்போது மதிமுகவில் இருக்கும் ராமகிருஷ்ணனின் நிலத்தை வாங்கி எனது மகன் அழகிரிக்கு எழுதிக் கொடுத்ததாக இதே அவையில் அப்போது அமைச்சராக இருந்த குழந்தைவேலு குற்றம் சாட்டினார்.அதற்கான ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இல்லையெனில் குழந்தைவேலு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றேன். இந்த சவாலை குழந்தைவேலு ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் ஆதாரத்தைக் கொடுக்க முடிய வில்லை. நானும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அவர் ஆதாரத்தைக் கொண்டு வந்தார். அது போலி ஆதாரம் என்பதை அப்போதிருந்த பேரவைத் தலைவர் கண்டுபிடித்து எனக்கு சாதகமாக தீர்ப்பு தந்தார். ஆனாலும் குழந்தைவேலு ராஜினாமா செய்ய வில்லை. அதுபோன்ற ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள் ளது.
செங்கோட்டையன் (அதிமுக):
நிரூபிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? சங் கரலிங்கபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்ட வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. முதல்வர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.
அமைச்சர் பரிதி இளம் வழுதி:
சரக்கு இருந்தால் சவால் விட லாம். இல்லையென்றால் சலாம் போட்டு ஓடி விட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்:
குற்றம் சாட்டிய உறுப்பினர் நிரூபிக்கிறேன் என்று பொறுப்பு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபு.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
ஆளும் கட்சியினர் பிரச்னையை தீர்ப்பதற்கு முயலாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது வேதனையைத் தருகிறது.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரம் ஊர் நாட்டாண்மை வேல்முருகனின் தம்பி மாரிமுத்துதான் தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
முதல்வர் கருணாநிதி:
சிவ புண்ணியமும், செங்கோட்டையனும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை என்னிடம் கொடுத்தால் நாளை எனது முடிவை அறிவிக்க தயாராக இருக்கிறேன்.
முதல்வர் தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள் ஓடவில்லை
சென்னை, ஏப். 23: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள், டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. விஜயகுமார் குற்றம் சாட்டினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பல இடங்களில் டிரைவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களும் டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை. அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுவதைவிட மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
அதுபோல அரசு மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்தால்தான் ஊசி போடுவேன் என்கிறார்கள்.
ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் மாறியதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகுமார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் டிரைவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களும் டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை. அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுவதைவிட மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
அதுபோல அரசு மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்தால்தான் ஊசி போடுவேன் என்கிறார்கள்.
ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் மாறியதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகுமார்.
144 பேருக்கு பணி நிரந்தர ஆணை: கருணாநிதி வழங்கினார்
சென்னை, ஏப். 23: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தின் நேரடி கொள்முதல் நிலையங் களில் தாற்காலிகமாக பணியாற்றி வந்த 144 பேர் பணி மூப்பு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரந்தர ஆணையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
அதன் படி 144 பணியாளர்களுக்கும் கால முறை விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே.பனீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன் படி 144 பணியாளர்களுக்கும் கால முறை விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே.பனீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ. 1,500 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்
சென்னை, ஏப். 23: சென்னை தரமணியில் ரூ. 1,500 கோடியில், தக வல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முதல்வர் கருணாநிதி முன்னிû லயில் டி.எல்.எப். நிறுவனத்தடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தமிழக அரசின் சார் பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் எஸ். ரôமசுந்தரமும் , டி.எல்.எப். நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் கே.பி. சிங்கும் இந்த ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) தகவல் தொழில் நுட்ப மையமாகத் திகழ்கிறது. அங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், (டிட்கோ) கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ள டி.எல்.எப். நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.
சுமார் 26.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ளது. 45 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட உள்ளன. 2009-ம் ஆண்டு 25 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் 2011- க்குள் முடிக்கப்படும். இதன் மூலம் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரிடையாகவும், 10 ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
சென்னை தரமணியில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) தகவல் தொழில் நுட்ப மையமாகத் திகழ்கிறது. அங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், (டிட்கோ) கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ள டி.எல்.எப். நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.
சுமார் 26.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ளது. 45 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட உள்ளன. 2009-ம் ஆண்டு 25 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் 2011- க்குள் முடிக்கப்படும். இதன் மூலம் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரிடையாகவும், 10 ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம்:தமிழக கோரிக்கை ஏற்பு
சென்னை, ஏப். 22: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். பேரவையில் செவ்வாய்க்கிழமை விதி எண் 110-ன் கீழ் அமைச்சர் ஸ்டாலின் படித்த அறிக்கை:-
ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2007-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகளின் பட்டியலை தயார் செய்து கடந்த மார்ச் 20- ம் தேதி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.
இதற்கிடையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்தது. அதில், ""ஊராட்சிகள்'' என்ற பொருளை மாநில அரசுப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, ஊராட்சிகள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பது போன்ற ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. "இந்த வரைவு சாசனத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை நீக்க வேண்டும். அதன் அடிப்படை யில்தான் தில்லி மாநாட்டில், தமிழ் நாட்டில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மார்ச் 29-ம் தேதி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்தது.
பிரதமர் கடிதம்:
மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கோ, இணைப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று வரைவு சாசனத்தில் உள்ள பரிந்துரையை இந்த சாசனத்தில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஏப்ரல் 21-ம் தேதி கிடைத்தது.
இந்தப் பரிந்துரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டாலும், தேசிய வளர்ச்சி மன்றம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகுதான் இறுதி செய்யப்படும் என்றும் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனாலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள மாநாட்டில் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகளை அனுப்ப கால அவகாசம் இல்லை. அதனால் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு சாசனத்தின் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக் ùகôண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2007-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகளின் பட்டியலை தயார் செய்து கடந்த மார்ச் 20- ம் தேதி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.
இதற்கிடையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்தது. அதில், ""ஊராட்சிகள்'' என்ற பொருளை மாநில அரசுப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, ஊராட்சிகள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பது போன்ற ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. "இந்த வரைவு சாசனத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை நீக்க வேண்டும். அதன் அடிப்படை யில்தான் தில்லி மாநாட்டில், தமிழ் நாட்டில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மார்ச் 29-ம் தேதி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்தது.
பிரதமர் கடிதம்:
மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கோ, இணைப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று வரைவு சாசனத்தில் உள்ள பரிந்துரையை இந்த சாசனத்தில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஏப்ரல் 21-ம் தேதி கிடைத்தது.
இந்தப் பரிந்துரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டாலும், தேசிய வளர்ச்சி மன்றம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகுதான் இறுதி செய்யப்படும் என்றும் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனாலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள மாநாட்டில் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகளை அனுப்ப கால அவகாசம் இல்லை. அதனால் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு சாசனத்தின் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக் ùகôண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊதியம்
சென்னை, ஏப். 22: இளம் வழக்க றிஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
இளம் வழக்கறிஞர்கள் ஆரம்ப காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு 3 ஆண்டுகளுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பெருநகரங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பயணப்படி வழங்க வேண்டும். தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உருவாக்க வேண்டும். ஒரத்தநாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றார்.
எம்.வி.ஆர். வீரகபிலன் (அதிமுக):
கடலில் இருந்து 1,000 மீட்டர் தொலைவில் குடியிருக்கும் மீனவர்களுக்கும் சுனாமி நிவாரணமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கும் முன் விலைவாசியை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூட்டணி பற்றிதான் கவலைப்படுகின்றன.
வீர இளவரசன் (மதிமுக):
நீதி மன்றமும், சட்டப்பேரவையும் ஒன்றையொன்று சார்ந்து இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு "தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் சூட்ட வேண்டும்' என்றார்.
இளம் வழக்கறிஞர்கள் ஆரம்ப காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு 3 ஆண்டுகளுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பெருநகரங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பயணப்படி வழங்க வேண்டும். தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உருவாக்க வேண்டும். ஒரத்தநாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றார்.
எம்.வி.ஆர். வீரகபிலன் (அதிமுக):
கடலில் இருந்து 1,000 மீட்டர் தொலைவில் குடியிருக்கும் மீனவர்களுக்கும் சுனாமி நிவாரணமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கும் முன் விலைவாசியை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூட்டணி பற்றிதான் கவலைப்படுகின்றன.
வீர இளவரசன் (மதிமுக):
நீதி மன்றமும், சட்டப்பேரவையும் ஒன்றையொன்று சார்ந்து இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு "தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் சூட்ட வேண்டும்' என்றார்.
நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது
சென்னை, ஏப். 22: மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் பீட் டர் அல்போன்ஸýக்கு சென்றுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:
முதல்வர் கருணாநிதி:
மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிவதை திமுக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தில்லியில் நடக்கும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றால் ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை ஏற்றதாகி விடும். அந்த அவமôனத்துக்கு ஆளாக வேண்டாம் என்றுதான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தோம். இந்த விஷயத்தில் நம்முடைய மனம் புண்பட்டிருப்பûத உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், புண்ணுக்கு மருந்தாக கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் நண்பர் பீட்டர் அல்போன்ஸýக்கு வந்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
கடிதத்தின் நகல் தான் எனக்கு வந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி:
நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நமது அரசியல் சட்ட அமைப்பே அப்படி உள்ளது. அதனால்தான் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று கூறினோம். நம்முடைய கருத்தை மதித்து கடிதம் எழுதிய பிரதமர் மன் மோகன் சிங்குக்கு பேரவையின் சார்பிலும், அரசின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை மாற்றப் போவதில்லை என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சாசனம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் வைக்கப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யாமல் எப்படி தேசிய வளர்ச்சி மன்றத்திலும், பிரதிநிதிகள் மாநாட்டிலும் வைக்க முடியும். இது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை.
ஜி.கே. மணி (பாமக):
மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக மாநில அரசின் நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கிறது. வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசு சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டதா?
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசின் சார்பில் எந்தக் குழுவும் அனுப்பப் படவில்லை.
சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
மத்திய அரசிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரங்களை தட்டிப் பறிப்பது கடும் கண்டனத்துக்குரியது. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தைப்போல மேற்கு வங்க அரசும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.
சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசுக்கு மாற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு நேர்மாறாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிவதை திமுக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தில்லியில் நடக்கும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றால் ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை ஏற்றதாகி விடும். அந்த அவமôனத்துக்கு ஆளாக வேண்டாம் என்றுதான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தோம். இந்த விஷயத்தில் நம்முடைய மனம் புண்பட்டிருப்பûத உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், புண்ணுக்கு மருந்தாக கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் நண்பர் பீட்டர் அல்போன்ஸýக்கு வந்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
கடிதத்தின் நகல் தான் எனக்கு வந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி:
நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நமது அரசியல் சட்ட அமைப்பே அப்படி உள்ளது. அதனால்தான் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று கூறினோம். நம்முடைய கருத்தை மதித்து கடிதம் எழுதிய பிரதமர் மன் மோகன் சிங்குக்கு பேரவையின் சார்பிலும், அரசின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை மாற்றப் போவதில்லை என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சாசனம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் வைக்கப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யாமல் எப்படி தேசிய வளர்ச்சி மன்றத்திலும், பிரதிநிதிகள் மாநாட்டிலும் வைக்க முடியும். இது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை.
ஜி.கே. மணி (பாமக):
மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக மாநில அரசின் நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கிறது. வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசு சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டதா?
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசின் சார்பில் எந்தக் குழுவும் அனுப்பப் படவில்லை.
சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
மத்திய அரசிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரங்களை தட்டிப் பறிப்பது கடும் கண்டனத்துக்குரியது. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தைப்போல மேற்கு வங்க அரசும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.
சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசுக்கு மாற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு நேர்மாறாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர்'
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது. ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
விவேகானந்தர் தமிழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது. ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
விவேகானந்தர் தமிழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
ஏற்புடையதல்ல
சென்னை, ஏப். 22: விவேகானந் தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக்கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
"ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக் கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல.
எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
"ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக் கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல.
எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி
சென்னை, ஏப். 22: கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல் லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ் செம்மொழி மையத்தில் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன்மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத் தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார். இந்தியத் திருநாட்டின் பெரு மையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.
அந்த இடத்தில் சுவாமி விவேகா னந்தரின் போதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது. பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலி ருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பய ணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகி றது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என்றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமா றும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.
முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகானந்தரை திட்டமிட்டு அவமதிப்பது போல் உள்ளது. தமிழ் மொழி, செம்மொழி என்று ஆரம்பித்து கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம். மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் விவேகானந்தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபகரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் செம்மொழி மையத்தில் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன்மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத் தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார். இந்தியத் திருநாட்டின் பெரு மையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.
அந்த இடத்தில் சுவாமி விவேகா னந்தரின் போதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது. பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலி ருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பய ணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகி றது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என்றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமா றும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.
முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகானந்தரை திட்டமிட்டு அவமதிப்பது போல் உள்ளது. தமிழ் மொழி, செம்மொழி என்று ஆரம்பித்து கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம். மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் விவேகானந்தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபகரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பரிசீலனை
சென்னை, ஏப். 21: திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
செ.ம. வேலுசாமி (அதிமுக):
திருப்பூர், கோவை இரண்டு நகரங்களுக்கும் மையமாக உள்ள பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு முன்வருமா? அதற்கு தேவையான நிலம் பல்லடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி சி.வி. குடியிருப்பு பகுதியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய பகுதிகளில் எப்போது உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்?
அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்:
இடவசதி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைக் கேற்ப விளையாட்டு கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் அரசின் பரீசி லனையில் உள்ளது. பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் பரிந்துரைத்தால் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். கோவையில் இடம் கிடைத்தால் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
செ.ம. வேலுசாமி (அதிமுக):
திருப்பூர், கோவை இரண்டு நகரங்களுக்கும் மையமாக உள்ள பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு முன்வருமா? அதற்கு தேவையான நிலம் பல்லடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி சி.வி. குடியிருப்பு பகுதியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய பகுதிகளில் எப்போது உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்?
அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்:
இடவசதி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைக் கேற்ப விளையாட்டு கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் அரசின் பரீசி லனையில் உள்ளது. பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் பரிந்துரைத்தால் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். கோவையில் இடம் கிடைத்தால் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்
சென்னை, ஏப். 21: கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:
பாலபாரதி (மார்க்சிஸ்ட்):
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட் டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர் இதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்திருந்தால் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எங்கள் நேரம் உங்கள் தயவில் எல்லாம் ஆட்சி நடத்த வேண்டி இருக்கிறது. மத்திய அரசை கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தால் இந்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றி விடலாம்.
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட்டுகள் இடையூறு செய்யவில்லை.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பகுதி, பகுதியாக இடை யூறு என்பதெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஒட்டுமொத்தமாக இடையூறு செய்வதால்தான் மத்திய அரசால் செயல்பட முடியவில்லை.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
நல்ல திட்டங்களை எப்போதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்பார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத் துக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படும்போது நாட்டு நலன் கருதி அதனை எதிர்க்கிறோம். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரித்தால் அமெரிக்காவிடம் இந்தியாவை ஒப்படைத்து விட்டால் என்ன செய்வது?
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
இந்தியா எந்த நாட்டுக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இது பற்றி தனியாக ஒரு நாள் விவாதம் நடத்தலாம். சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியிருப்பதால் இத்தோடு முடித்து விடுவது நல்லது என்றார்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்):
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட் டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர் இதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்திருந்தால் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எங்கள் நேரம் உங்கள் தயவில் எல்லாம் ஆட்சி நடத்த வேண்டி இருக்கிறது. மத்திய அரசை கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தால் இந்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றி விடலாம்.
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட்டுகள் இடையூறு செய்யவில்லை.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பகுதி, பகுதியாக இடை யூறு என்பதெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஒட்டுமொத்தமாக இடையூறு செய்வதால்தான் மத்திய அரசால் செயல்பட முடியவில்லை.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
நல்ல திட்டங்களை எப்போதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்பார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத் துக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படும்போது நாட்டு நலன் கருதி அதனை எதிர்க்கிறோம். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரித்தால் அமெரிக்காவிடம் இந்தியாவை ஒப்படைத்து விட்டால் என்ன செய்வது?
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
இந்தியா எந்த நாட்டுக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இது பற்றி தனியாக ஒரு நாள் விவாதம் நடத்தலாம். சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியிருப்பதால் இத்தோடு முடித்து விடுவது நல்லது என்றார்.
சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு
சென்னை, ஏப். 21: சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ லதா கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 41,663 சத்து ணவு மையங்களிலும் எரிவாயு இணைப்பு, புகைப்போக்கியுடன் கூடிய நவீன சமையல் கூடம் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள் ளிட்ட எல்லாத் துறைகளிலும் சரி பாதி பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணையம் மூலமாக பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் ஆணையத்துக்கு பெண் ணிய சிந்தனை உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆணையத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான் மையின பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஆண் வாரிசு உள்ள முதியோர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுக்க பெண்கள் தினத் தன்று கருத்தரங்குகளை அரசு நடத்த வேண்டும் என்றார்.
இளமதி சுப்பிரமணியம் (அதிமுக):
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊதியம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் தொலைநோக்கு திட்டமான தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு திமுக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.
தமிழகத்தில் உள்ள 41,663 சத்து ணவு மையங்களிலும் எரிவாயு இணைப்பு, புகைப்போக்கியுடன் கூடிய நவீன சமையல் கூடம் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள் ளிட்ட எல்லாத் துறைகளிலும் சரி பாதி பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணையம் மூலமாக பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் ஆணையத்துக்கு பெண் ணிய சிந்தனை உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆணையத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான் மையின பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஆண் வாரிசு உள்ள முதியோர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுக்க பெண்கள் தினத் தன்று கருத்தரங்குகளை அரசு நடத்த வேண்டும் என்றார்.
இளமதி சுப்பிரமணியம் (அதிமுக):
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊதியம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் தொலைநோக்கு திட்டமான தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு திமுக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.
மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்
சென்னை, ஏப். 21: மாநில மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பத்மாவதி கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் திங் கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
மாநில மகளிர் ஆணையத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். ஆணையத்தின் முடிவுகளை சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து உடம்பில் சூடு போட்டு பிச்சை எடுக்கும் கும்பலை திருச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு வார விடுமுறை, கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.500-க்குக் குறையாமல் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு தயாரிக்க ஒரு குழந் தைக்கு வழங்கப்படும் 44 பைசாவை அதிகப்படுத்தி ஒரு ரூபாய் வழங்க வேண்டும். ஊன முற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்.
சக்தி கமலாம்பாள் (பாமக):
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அவல நிலையில் உள்ளது. போதுமான டாக்டர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். முதியோர் உதவித் தொகையை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாழைப்பழமும், மாம்பழமும் வழங்க வேண்டும். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சித் திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா ஆண்டான இந்த ஆண்டில் காஞ்சிபுரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காஞ்சிபுரத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றார்.
மாநில மகளிர் ஆணையத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். ஆணையத்தின் முடிவுகளை சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து உடம்பில் சூடு போட்டு பிச்சை எடுக்கும் கும்பலை திருச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு வார விடுமுறை, கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.500-க்குக் குறையாமல் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு தயாரிக்க ஒரு குழந் தைக்கு வழங்கப்படும் 44 பைசாவை அதிகப்படுத்தி ஒரு ரூபாய் வழங்க வேண்டும். ஊன முற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்.
சக்தி கமலாம்பாள் (பாமக):
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அவல நிலையில் உள்ளது. போதுமான டாக்டர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். முதியோர் உதவித் தொகையை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாழைப்பழமும், மாம்பழமும் வழங்க வேண்டும். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சித் திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா ஆண்டான இந்த ஆண்டில் காஞ்சிபுரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காஞ்சிபுரத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றார்.
இளம் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும்
சென்னை, ஏப். 21: இளம் வயது சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.எஸ்.எஸ். ராமன் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
16 வயதுக்கு குறைவான இளம் வயதினர் சர்க்கரை நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. எனவே அவர்களை ஊனமுற்றோர்களாக அறிவித்து சலுகைகள் வழங்க வேண்டும்.
கோயில் நிதியிலிருந்து இலவச திருமணம்:
திருப்பதி தேவஸ் தானம் மூலம் ஒரு ஜோடிக்கு ரூ.50,000 செலவில் இலவச திருமணங்களை ஆந்திர அரசு நடத்தி வருகிறது. அதனைப் பின்பற்றி தமிழகத்தில் பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியைப் பயன்படுத்தி இலவச திருமணங்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
முதியோர்களுக்கு மணியார்டர் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவித் தொகை முழுமையாக கிடைப்பதில்லை. எனவே வங்கி மூலம் நேரிடையாக முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும்.
தனியார் நடத்தும் மறுவாழ்வு மையங்களை கண்காணிக்க அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். சென்னையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அரசே நடத்த வேண்டும் என்றார் இ.எஸ்.எஸ்.ராமன்.
16 வயதுக்கு குறைவான இளம் வயதினர் சர்க்கரை நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. எனவே அவர்களை ஊனமுற்றோர்களாக அறிவித்து சலுகைகள் வழங்க வேண்டும்.
கோயில் நிதியிலிருந்து இலவச திருமணம்:
திருப்பதி தேவஸ் தானம் மூலம் ஒரு ஜோடிக்கு ரூ.50,000 செலவில் இலவச திருமணங்களை ஆந்திர அரசு நடத்தி வருகிறது. அதனைப் பின்பற்றி தமிழகத்தில் பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியைப் பயன்படுத்தி இலவச திருமணங்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
முதியோர்களுக்கு மணியார்டர் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவித் தொகை முழுமையாக கிடைப்பதில்லை. எனவே வங்கி மூலம் நேரிடையாக முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும்.
தனியார் நடத்தும் மறுவாழ்வு மையங்களை கண்காணிக்க அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். சென்னையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அரசே நடத்த வேண்டும் என்றார் இ.எஸ்.எஸ்.ராமன்.
கழிவு நீரை அகற்ற புதிய இயந்திரம்
சென்னை, ஏப். 21: சென்னையில் கழிவு நீரை அகற்ற தூர் வாரும் இயந்திரத்தை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2006-07-ஆண்டு உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ரூ.3 கோடி செலவில் கழிவு நீரை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னை குடிநீர் வாரியத்தால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் கழிவு நீரில் இறங்குவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.
தற்போது சென்னை மாநகரில் சுமார் 2,671 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் குழாய்களும், சுமார் 77,081 கழிவு நீர் நுழைவாயில்களும், 185 கழிவு நீரேற்றும் நிலையங்களும் உள்ளன. கழிவு நீரை அகற்ற தூர்வாரும் இயந்திரங்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் மூலம் 32 அடி ஆழம் வரை உள்ள கழிவு களை அகற்ற முடியும். இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ. 5,85,390. முதல் கட்டமாக மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை மூன்று மாதம் ஆய்வு செய்தபிறகு மேலும் இயந்திரங்கள் வாங்கப்படும்.
இந்த இயந்திரத்தை திரு வல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. தீனபந்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, செயல் இயக்குநர் சி. தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .
2006-07-ஆண்டு உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ரூ.3 கோடி செலவில் கழிவு நீரை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னை குடிநீர் வாரியத்தால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் கழிவு நீரில் இறங்குவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.
தற்போது சென்னை மாநகரில் சுமார் 2,671 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் குழாய்களும், சுமார் 77,081 கழிவு நீர் நுழைவாயில்களும், 185 கழிவு நீரேற்றும் நிலையங்களும் உள்ளன. கழிவு நீரை அகற்ற தூர்வாரும் இயந்திரங்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் மூலம் 32 அடி ஆழம் வரை உள்ள கழிவு களை அகற்ற முடியும். இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ. 5,85,390. முதல் கட்டமாக மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை மூன்று மாதம் ஆய்வு செய்தபிறகு மேலும் இயந்திரங்கள் வாங்கப்படும்.
இந்த இயந்திரத்தை திரு வல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. தீனபந்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, செயல் இயக்குநர் சி. தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .
Subscribe to:
Posts (Atom)