சென்னை, ஏப். 19: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி, காங்கிரஸ் தலைமை அலுவலகச் செயலாளர் ராஜன், அண்ணா சாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகி யோர் சமீபத்தில் மாவட்ட நிர் வாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். வாசன் ஆதரவாளர்களான அவர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் வரை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜி.கே. மூப்பனார் பேரவை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் அலுவலகச் செயலாளர் ராஜன், சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்புக்கேட்டு காவல் நிலையத்தில் மனு கொடுத்திருப்பது காங்கிரஸôர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment