சென்னை, மார்ச் 29: பள்ளிக ளில் ஆங்கில மொழி ஆய்வ கம் அமைக்க, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ. 54.75 லட்சத்தை கூடுதலாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வழங்கியுள்ளார்.
திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை தொகுதி யில் இரண்டு பள்ளிகளிலும், தி.நகர் தொகுதியில் நான்கு பள்ளிகளிலும், மயிலாப்பூர் தொகுதியில் ஒரு பள்ளியிலும், ஆலந்தூர் தொகுதியில் 10 பள்ளிகளிலும், தாம்பரம் தொகுதியில் 13 பள்ளிகளிலும் ஆங்கில மொழி ஆய்வகம் அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டி.ஆர். பாலு ரூ.2.40 கோடி வழங்கினார்.
இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று சென்னை மாநக ராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்று தற்போது, கூடுதலாக ரூ. 54.75 லட்சம் வழங்கியுள் ளார். ரூ. 7.50 லட்சம் வீதம் 32 அரசு பள்ளிகளுக்கு இந்த நிதி வழங் கப்படும்.அரசு பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம் அமைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் எளிதாக வேலை பெற முடியும்.
Sunday, March 30, 2008
இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை
சென்னை, மார்ச் 29: இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷை தாக்கியவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத் துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களி டம் கூறியதாவது:
இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷ் சில அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய -இலங்கை நல்லுறவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.முதல்வருடன் தங்களுக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சில அமைப்பினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தேச விரோதச் செயலாகும்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது.
தேர்தல் ஸ்டண்ட்:
தேர்தல் ஆதாயத்துக்காக ஓகேனக்கல் கர்நாட கவுக்கே சொந்தம் என்று பா.ஜ.க. பிரச்னை கிளப்புகிறது. ஒகேனக் கல் தமிழகத்துக்கு சொந்தமானது. ரேஷன் விநியோகத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷ் சில அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய -இலங்கை நல்லுறவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.முதல்வருடன் தங்களுக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சில அமைப்பினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தேச விரோதச் செயலாகும்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது.
தேர்தல் ஸ்டண்ட்:
தேர்தல் ஆதாயத்துக்காக ஓகேனக்கல் கர்நாட கவுக்கே சொந்தம் என்று பா.ஜ.க. பிரச்னை கிளப்புகிறது. ஒகேனக் கல் தமிழகத்துக்கு சொந்தமானது. ரேஷன் விநியோகத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்துக் கல்லூரி 32-வது பட்டமளிப்பு விழா
சென்னை, மார்ச் 29: சென்னை பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந் துக் கல்லூரி 32-வது பட்டம ளிப்பு விழா, சனிக்கிழமை நடை பெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற நீதி பதி பி. ஜோதிமணி 327 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை யும், பல்கலைக்கழக அளவில் முத லிடம் பெற்ற மாணவர் உள் ளிட்ட 36 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசையும் வழங்கி னார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதி பதி பி. ஜோதிமணி 327 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை யும், பல்கலைக்கழக அளவில் முத லிடம் பெற்ற மாணவர் உள் ளிட்ட 36 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசையும் வழங்கி னார்.
கருணாநிதியிடம் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆசி
சென்னை, மார்ச் 29: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் கே.எம். ரவி, சனிக்கிழமை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம் மாள், கவிஞர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
பைலட் பயிற்சி பெற...
விமானி ஓட்டியாக விரும்புவோருக் கான 9 மாதப் பயிற்சியை ஃபால்கன் ஃப்ளைட் ஸ்கூல் சென்னையில் அண் மையில் தொடங்கியுள்ளது."பிளஸ் 2' முடித்த, 18 வயது நிரம்பிய வர்கள் இதில் சேரலாம். ஆயத்தப் பயிற்சி சென்னையிலும் களப் பயிற்சி அமெரிக்காவிலும் வழங்கப்படும்.
பள்ளிப் படிப்பில் கணிதம், இயற்பி யல் படித்திருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையும் மேற் கொள்ள வேண்டும்.போக்குவரத்து, விடுதிக் கட்டணம் உள்பட மொத்தக் கட்ட ணம் ரூ.18 லட்சம்.மேலும் விவரங்களுக்கு: ஃபால்கன் ஃப்ளைட் ஸ்கூல், 5, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. தொலைபேசி: 044-43534312, 43534314.மொபைல்: 9789094141, 9841811880
பள்ளிப் படிப்பில் கணிதம், இயற்பி யல் படித்திருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையும் மேற் கொள்ள வேண்டும்.போக்குவரத்து, விடுதிக் கட்டணம் உள்பட மொத்தக் கட்ட ணம் ரூ.18 லட்சம்.மேலும் விவரங்களுக்கு: ஃபால்கன் ஃப்ளைட் ஸ்கூல், 5, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. தொலைபேசி: 044-43534312, 43534314.மொபைல்: 9789094141, 9841811880
12 தமிழக மீனவர்கள் இலங்கையில் விடுதலை
சென்னை, மார்ச் 25: இலங்கை கடற்படையினரால் பிடித் துச் செல்லப்பட்ட 12 மீன வர்களையும், அவர்களின் நான்கு படகுகளையும் விடு விக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கன்னியாகு மரி பகுதிக்கு மீனவர்கள் விரைவில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி றது. இது குறித்து அரசு செவ் வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மார்ச் 7-ம் தேதி, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், மார்ச் 10-ம் தேதி 50 மீனவர்கள் விடு விக்கப்பட்டனர்.
விடுவிக்கப் படாமல் இருந்த மீனவர்க ளையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.அதன் பலனாக இலங்கை புட்லம் நீதிமன்ற நீதிபதி டி.ஜி.எஸ்.ஏ. பெரேரா 12 மீனவர்களையும், நான்கு பட குகளையும் விடுவிக்க உத்தர விட்டார்.இதையடுத்து, அவர்கள் விரைவில் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என்று தமி ழக அரசு வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
மார்ச் 7-ம் தேதி, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், மார்ச் 10-ம் தேதி 50 மீனவர்கள் விடு விக்கப்பட்டனர்.
விடுவிக்கப் படாமல் இருந்த மீனவர்க ளையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.அதன் பலனாக இலங்கை புட்லம் நீதிமன்ற நீதிபதி டி.ஜி.எஸ்.ஏ. பெரேரா 12 மீனவர்களையும், நான்கு பட குகளையும் விடுவிக்க உத்தர விட்டார்.இதையடுத்து, அவர்கள் விரைவில் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என்று தமி ழக அரசு வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை
சென்னை, மார்ச் 25: சுதந்திரமா கச் செயல்பட முடியவில்லை என்று தமிழ்நாடு பெண் ஊராட் சித் தலைவர்கள் மாவட்ட நிர்வா கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள னர்.இது குறித்து, தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்ட மைப்பின் மாநில நிர்வாகிகள் எஸ். அருள்தேவி, டி. சுகுணாகு மாரி, வசந்தா, செல்வி, சுகன்யா ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்ப டையில் நாங்கள் வெற்றி பெற்றுள் ளோம். ஆனால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் எங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவ தில்லை.முக்கிய கோப்புகளில் கையெ ழுத்திடாமல் துணைத் தலைவர்க ளாக இருக்கும் ஆண்கள் எங் களை அலைக்கழிக்கின்றனர். தட் டிக் கேட்டால் மிரட்டுகின்றனர்.தலித் பெண் தலைவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கிராம சபைக் கூட்டங்களில் என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்ற வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை சுதந்திரமாக நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் நினைத் தால் தற்போது, ஊராட்சித் தலை வர்களை பதவி நீக்கம் செய்து விட முடியும். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும்.ரேசன் கடைகளை மேற்பார் வையிடும் பொறுப்பை கிராம பஞ் சாயத்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற பிரதிநி திகளுக்கு மதிப்பூதியமாக குறைந்த பட்சம் மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றனர்.அரசியல் கட்சிகளிடம் மனு: பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் அதிமுக, காங்கி ரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் அலுவலகங் களுக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆத ரவு தரக் கோரி எம்.எல்.ஏக்களி டம் மனு கொடுத்தனர்.
33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்ப டையில் நாங்கள் வெற்றி பெற்றுள் ளோம். ஆனால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் எங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவ தில்லை.முக்கிய கோப்புகளில் கையெ ழுத்திடாமல் துணைத் தலைவர்க ளாக இருக்கும் ஆண்கள் எங் களை அலைக்கழிக்கின்றனர். தட் டிக் கேட்டால் மிரட்டுகின்றனர்.தலித் பெண் தலைவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கிராம சபைக் கூட்டங்களில் என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்ற வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை சுதந்திரமாக நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் நினைத் தால் தற்போது, ஊராட்சித் தலை வர்களை பதவி நீக்கம் செய்து விட முடியும். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும்.ரேசன் கடைகளை மேற்பார் வையிடும் பொறுப்பை கிராம பஞ் சாயத்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற பிரதிநி திகளுக்கு மதிப்பூதியமாக குறைந்த பட்சம் மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றனர்.அரசியல் கட்சிகளிடம் மனு: பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் அதிமுக, காங்கி ரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் அலுவலகங் களுக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆத ரவு தரக் கோரி எம்.எல்.ஏக்களி டம் மனு கொடுத்தனர்.
ஒகேனக்கல் பிரச்னை: பாஜகவுக்கு வாசன் கண்டனம்
சென்னை, மார்ச் 25:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும், கர்நா டக பாஜக தலைவர் எடியூரப்பா வுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள் ளார்.மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றி தழை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார் ஜி.கே.வாசன்.மாநிலங்களவைத் தேர்தல் அதி காரியும், சட்டப் பேரவைச் செயல ருமான மா. செல்வராஜ் அவ ருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாஜக தலைவர் எடியூரப்பாவின் செயல் கண்டனத்துக்குரியது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள் ளது.
நேரில் பார்த்தேன்:
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை யின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல், உளுந்து போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிக ளுக்கு ஏற்பட்டுள்ள அவலநி லையை நேரில் பார்த்தேன்.
சோனியாவின் கவனத் துக்கு...:
நிவாரணப் பணிக ளில் அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்க ளும் அந்தந்தப் பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி வரு கின்றனர். தமிழக வெள்ளச் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து எடுத்துக் கூற இருக்கிறேன்.
மழையால் விவசாயிகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் பற்றி காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் பேசுவார்கள். நிவார ணப் பணிகளில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றார் ஜி.கே. வாசன்.
ஒகேனக்கல் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாஜக தலைவர் எடியூரப்பாவின் செயல் கண்டனத்துக்குரியது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள் ளது.
நேரில் பார்த்தேன்:
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை யின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல், உளுந்து போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிக ளுக்கு ஏற்பட்டுள்ள அவலநி லையை நேரில் பார்த்தேன்.
சோனியாவின் கவனத் துக்கு...:
நிவாரணப் பணிக ளில் அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்க ளும் அந்தந்தப் பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி வரு கின்றனர். தமிழக வெள்ளச் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து எடுத்துக் கூற இருக்கிறேன்.
மழையால் விவசாயிகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் பற்றி காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் பேசுவார்கள். நிவார ணப் பணிகளில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றார் ஜி.கே. வாசன்.
தண்டோரா அடிக்கும் முறை ரத்து
சென்னை, மார்ச் 25: கிராமங்களில் தண்டோரா அடிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.அரசு அறிவிப்புகள், கோயில் திருவிழா அறிவிப்புகளை தண் டோரா அடித்துச் சொல்லும் முறை கிராமங்களில் உள்ளது.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்து வரும் தண் டோரா முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.
மேலும் இரட்டை தம்ளர் முறை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய வற்றை முழுமையாக ஒழிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.""2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் தலை மையில் சமூக சீர்திருத்த துறை என்ற புதிய துறை உருவாக்கப் பட்டது. இந்தத் துறைக்கு ஆலோசனை வழங்க பேராசிரியர் நன்னன் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சமூக சீர்திருத்தக் குழுவை அரசு அமைத்தது.
அரசுக்கு பரிந்துரை:
இந்தக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் தண்டோரா முறை ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டன'' என்றார் சமூக சீர்திருத்தக் குழுவின் உறுப் பினரும், எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார்.
இந்த பரிந்துரைகளின்படி தண்டோரா அடிக்கும் முறையை தடை செய்ய அரசு ஆலோசனை செய்து வருவ தாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இரட்டை தம்ளர் முறை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய வற்றை முழுமையாக ஒழிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.""2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் தலை மையில் சமூக சீர்திருத்த துறை என்ற புதிய துறை உருவாக்கப் பட்டது. இந்தத் துறைக்கு ஆலோசனை வழங்க பேராசிரியர் நன்னன் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சமூக சீர்திருத்தக் குழுவை அரசு அமைத்தது.
அரசுக்கு பரிந்துரை:
இந்தக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் தண்டோரா முறை ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டன'' என்றார் சமூக சீர்திருத்தக் குழுவின் உறுப் பினரும், எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார்.
இந்த பரிந்துரைகளின்படி தண்டோரா அடிக்கும் முறையை தடை செய்ய அரசு ஆலோசனை செய்து வருவ தாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக - வுடன் கூட்டணி தொடரும் - ஜெயந்தி நடராஜன்
சென்னை, மார்ச் 24: நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று நம்புவதாக காங்கி ரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பா ளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவித்தார்.மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட ஜெயந்தி நடராஜன் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கான சான் றிதழை அவர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கி ழமை பெற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலரு மான மா.செல்வராஜ் அவருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயந்தி நடராஜன் கூறியது:
காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க இந் திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருவது பற்றி நான் எதுவும் கூற விரும்ப வில்லை. ஜனநாயகத்தில் இது போன்ற பேச்சுகள் நடப்பது சகஜம்.
மன்மோகன்சிங் அரசு முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக உள்ளிட்ட கட்சி கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடரும் என்று நம்புகிறேன்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற் றியைப் பெரும் என்றார் ஜெயந்தி நடராஜன்.
மாநிலங்களவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேர வைச் செயலர் கடந்த சில தினங்களுக்கு முன் முறைப்படி அறிவித் தார்.இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட் சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கடந்த வாரம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். மத்திய மைச்சர் ஜி.கே. வாசன் ஓரிரு தினங்களில் சான்றிதழை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான சான் றிதழை அவர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கி ழமை பெற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலரு மான மா.செல்வராஜ் அவருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயந்தி நடராஜன் கூறியது:
காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க இந் திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருவது பற்றி நான் எதுவும் கூற விரும்ப வில்லை. ஜனநாயகத்தில் இது போன்ற பேச்சுகள் நடப்பது சகஜம்.
மன்மோகன்சிங் அரசு முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக உள்ளிட்ட கட்சி கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடரும் என்று நம்புகிறேன்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற் றியைப் பெரும் என்றார் ஜெயந்தி நடராஜன்.
மாநிலங்களவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேர வைச் செயலர் கடந்த சில தினங்களுக்கு முன் முறைப்படி அறிவித் தார்.இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட் சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கடந்த வாரம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். மத்திய மைச்சர் ஜி.கே. வாசன் ஓரிரு தினங்களில் சான்றிதழை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவரம் நகராட்சியைக் கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 24: மாதவரம் நகராட்சியைக் கண் டித்து, புதன்கிழமை (மார்ச் 26) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி யின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:
மாதவரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க, அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆனால், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.மாதவரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கூடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.வீட்டுவரியை உயர்த்த மாதவரம் நகராட்சி முடிவு செய்திருப்பதாக வும் செய்திகள் வருகின்றன.
மாதவரம் நகராட்சி நிர்வாகத் தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) காலை 10 மணிக்கு நகராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மாதவரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க, அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆனால், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.மாதவரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கூடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.வீட்டுவரியை உயர்த்த மாதவரம் நகராட்சி முடிவு செய்திருப்பதாக வும் செய்திகள் வருகின்றன.
மாதவரம் நகராட்சி நிர்வாகத் தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) காலை 10 மணிக்கு நகராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால்
சென்னை, மார்ச் 23: நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை "மாற்றத்தை நோக்கி' என்ற தலைப்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசியதாவது:
அமைச்சர் மு.க.ஸ்டாலின், போகும் இடமெல்லாம் இரண்டு நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பேசி வருகிறார். வசன கர்த்தாவின் மகனான ஸ்டாலினுக்கு, நடிகர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? யாருக்கு தகுதி உள்ளது என்பதை அப்போது முடிவு செய்வோம்.கனிமொழிக்கு எம்.பி.யாக தகுதியாக இருக்கிறதா என்பதை கரு ணாநிதி பரிசோதனை செய்து பார்த்தாரா? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. 1
967-க்குப் பிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை மாற்ற புனிதப் போரை தொடங்கி இருக்கிறோம். இந்தப் புனிதப் போரில் எங்களுக்கு வெற்றி கிடைக் கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2011-ல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிக ளிலும் வெற்றி பெறுவோம்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவர் 2 முறை மட்டுமே முதல்வராகவோ, அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இருக்க முடியும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.எனது குடும்பத்தினர் எக்காரணத்தை முன்னிட்டும் பதவிக்கு வரமாட்டார்கள். இதை கபாலீஸ்வரர் மேல் சத்தியமாகக் கூறுகி றேன் என்றார் சரத்குமார்.
அவைத்தலைவர் என்.முருகன்:
தமிழகத்தில் அவலமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை செய்திகளை படித்து பார்த்தாலே ஆட்சியின் அலங்கோலத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முத லிடத்தில் உள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். மத்திய அரசின் பட்ஜெட்டில், விவசாயக் கடன் 60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி செயல்படுத்தப்படும் என் பதைப் பற்றி நிதியமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.
கூட்டத் தில் துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஊனமுற் றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை, சரத்குமார் வழங்கினார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னைமைலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார்அக்கட்சி தலைவர் ஆர். சரத்குமார். உடன் (இடமிருந்து) கட்சிநிர்வாகிகள் என். முருகன், கே.ஜே. நாதன்.
அமைச்சர் மு.க.ஸ்டாலின், போகும் இடமெல்லாம் இரண்டு நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பேசி வருகிறார். வசன கர்த்தாவின் மகனான ஸ்டாலினுக்கு, நடிகர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? யாருக்கு தகுதி உள்ளது என்பதை அப்போது முடிவு செய்வோம்.கனிமொழிக்கு எம்.பி.யாக தகுதியாக இருக்கிறதா என்பதை கரு ணாநிதி பரிசோதனை செய்து பார்த்தாரா? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. 1
967-க்குப் பிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை மாற்ற புனிதப் போரை தொடங்கி இருக்கிறோம். இந்தப் புனிதப் போரில் எங்களுக்கு வெற்றி கிடைக் கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2011-ல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிக ளிலும் வெற்றி பெறுவோம்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவர் 2 முறை மட்டுமே முதல்வராகவோ, அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இருக்க முடியும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.எனது குடும்பத்தினர் எக்காரணத்தை முன்னிட்டும் பதவிக்கு வரமாட்டார்கள். இதை கபாலீஸ்வரர் மேல் சத்தியமாகக் கூறுகி றேன் என்றார் சரத்குமார்.
அவைத்தலைவர் என்.முருகன்:
தமிழகத்தில் அவலமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை செய்திகளை படித்து பார்த்தாலே ஆட்சியின் அலங்கோலத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முத லிடத்தில் உள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். மத்திய அரசின் பட்ஜெட்டில், விவசாயக் கடன் 60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி செயல்படுத்தப்படும் என் பதைப் பற்றி நிதியமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.
கூட்டத் தில் துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஊனமுற் றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை, சரத்குமார் வழங்கினார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னைமைலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார்அக்கட்சி தலைவர் ஆர். சரத்குமார். உடன் (இடமிருந்து) கட்சிநிர்வாகிகள் என். முருகன், கே.ஜே. நாதன்.
எதற்கெடுத்தாலும் போராடுவதா?
சென்னை, மார்ச் 29: தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பாமக நிறுவனர் ராமதா ஸýக்கு, முதல்வர் கருணாநிதி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கேள்வி -பதில் வடிவில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவோம் என்று ஒருவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்."காலையில் கைது, மாலையில் விடு தலை' என்ற நிலை தொடரும் வரை எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இலவச வீடு கட்டும் திட்டம்:
ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கள் கட்டும் திட்டம் 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தைதான் "இந்திரா வீட்டு வசதி திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசு விரிவுபடுத்தியது.
சொத்துவரி உயர்வு கட்டாய மில்லை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டுள் ளதை ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் சொத்து வரியை சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குடியி ருப்பு வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழில் கட்டடங்களுக்கு 100 சதவீத மும், வணிக நிறுவனங்களின் கட்டடங் களுக்கு 150 சதவீதம் வரையும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாட் டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டு மானால் போதிய நிதி தேவை. அதற்கு சொத்து வரியை சீரமைக்க வேண்டி யது அவசியமாகும்.1993-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி யில் குடியிருப்பு வீடுகளுக்கு 100 சதவீத மும், தொழில், வணிக கட்டடங்க ளுக்கு 150 சதவீதத்திலிருந்து 200 சதவீ தம் வரையும் உயர்த்தப்பட்டது.
ஏ.பி. பரதனுக்கு வாழ்த்து:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நான்காவது முறையாக ஏ.பி. பரதன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 82 வயதான அவருக்கு, 84 வயதான நான் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.கோவையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டுக்கான அழைப்பிதழ் கிடைத் தது. மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கி றேன்.
நாட்டிலேயே முதன்முறையாக தமி ழக அரசு அளித்த ரூ. ஒரு கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள் ளது.தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை திறந்து வைத்த நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற் றுச் சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே.பச்சௌரி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) என்னை சந்தித்துப் பேசினார் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவோம் என்று ஒருவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்."காலையில் கைது, மாலையில் விடு தலை' என்ற நிலை தொடரும் வரை எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இலவச வீடு கட்டும் திட்டம்:
ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கள் கட்டும் திட்டம் 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தைதான் "இந்திரா வீட்டு வசதி திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசு விரிவுபடுத்தியது.
சொத்துவரி உயர்வு கட்டாய மில்லை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டுள் ளதை ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் சொத்து வரியை சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குடியி ருப்பு வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழில் கட்டடங்களுக்கு 100 சதவீத மும், வணிக நிறுவனங்களின் கட்டடங் களுக்கு 150 சதவீதம் வரையும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாட் டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டு மானால் போதிய நிதி தேவை. அதற்கு சொத்து வரியை சீரமைக்க வேண்டி யது அவசியமாகும்.1993-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி யில் குடியிருப்பு வீடுகளுக்கு 100 சதவீத மும், தொழில், வணிக கட்டடங்க ளுக்கு 150 சதவீதத்திலிருந்து 200 சதவீ தம் வரையும் உயர்த்தப்பட்டது.
ஏ.பி. பரதனுக்கு வாழ்த்து:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நான்காவது முறையாக ஏ.பி. பரதன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 82 வயதான அவருக்கு, 84 வயதான நான் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.கோவையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டுக்கான அழைப்பிதழ் கிடைத் தது. மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கி றேன்.
நாட்டிலேயே முதன்முறையாக தமி ழக அரசு அளித்த ரூ. ஒரு கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள் ளது.தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை திறந்து வைத்த நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற் றுச் சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே.பச்சௌரி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) என்னை சந்தித்துப் பேசினார் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)