Thursday, May 1, 2008

போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல

சென்னை, மே 1: ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு சிறு பிரிவினர் அதிருப்தியின் கார ணமாக நடத்திய போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல ஹூண்டாய் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஹூண்டாய் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

"ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. ஹூண்டாய் தொழிற்சாலைக்கு அருகில் சிப்காட் டுக்கு சொந்தமான நிலத்தில், ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு குழுவினர் தொழிற்சங்க கொடியையும், சி.ஐ.டி.யூ. கொடியையும் நிறுவி உள்ளனர். ஏப்ரல் 29-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் இரு கொடிகளையும் சிப்காட் அதிகாரிகள் அகற்றினார்கள். ஆனால், ஏப்ரல் 30-ம் தேதி காலையில் வெளியாட்கள் சிலர் ஹூண்டாய் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு அலுவலகமும், வாகனங்களும், கம்ப்யூட்டர்களும் சேதமடைந்துள்ளன. ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் சிலரும் இந்தத் தாக்குத லில் காயமடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலும், ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆக்யோரிடம் புகார் கொடுத்தோம். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதிருப்தியின் காரணமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஹூண்டாய் நிர்வாகம் காரணமல்ல என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநருடன் கருணாநிதி திடீர் சந்திப்பு

சென்னை, மே 1: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி கிண்டி ஆளுநர் மாளிகை யில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். மாலை 6.50 மணியிலிருந்து 7.10 மணி வரை 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, க. பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த மாதம் இதய நோய் சிகிச் சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். ஆளுநர் வீடு திரும்பிய பிறகு முதன்முறையாக அவரை முதல்வர் சந்தித்துள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் விரைவில் சரி செய்யப்படும்

சென்னை, ஏப். 30: சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் களை சரி செய்யும் பணி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

டி. செங்குட்டுவன் (திமுக):

சென்னை மாநகரில் ஓடும் ஆட் டோக்களில் மீட்டர் சரிவர வேலை செய்யவில்லை என்று புகார் வருகிறது. இந்தப் பிரச் னையை சரி செய்ய அரசு முன்வ ருமா?

அமைச்சர் கே.என். நேரு:

சென்னை மாநகரில் ஓடும் 40,000 ஆட்டோக்களுக்கும் ஒன்பது நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை 6 பகுதிக ளாகப் பிரித்து மீட்டரை விற் பனை செய்த நிறுவனங்கள் மூலமே அதனை சரி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் பணி தொடங்கும்.

ஜெயபால் (காங்கிரஸ்):

கன்னி யாகுமரி மாவட்ட மீனவர்கள் வேலைக்காக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, எர்ணாகுளம் போன்ற இடங்களுக்குச் செல் கின்றனர். அவர்களுக்கு போது மான பஸ் வசதி இல்லை. எனவே, குளச்சலில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்க அரசு முன்வ ?

அமைச்சர் கே.என். நேரு:

கேரள மாநிலத்தில் தமிழகத்தை விட பஸ் கட்டணம் அதிகம். எனவே தமிழக பஸ்கள் கேரளத் துக்குள் வருவதை அந்த மாநில அரசு விரும்பவில்லை.

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு

சென்னை, ஏப். 30: அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சா மியை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டதைக் கண் டித்து தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிந டப்பு செய்தனர்.

பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், சட் டப் பேரவை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் வை. சிவ புண்ணியம் கொடுத்த கவன ஈர்ப்பு அறிவிப்பின் மீது அவர் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை பார்த்து ஏதோ கூறினார். ""தனது இருக் கையில் அமராமல் வேறு இருக் கையில் அமர்ந்து கொண்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்'' என்று அவரை பேரவைத் தலை வர் இரா. ஆவுடையப்பன் எச்சரித்தார்.

அப்போது செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை நோக்கி மீண்டும் ஏதோ கூறி னார். உடனே அவை நடவடிக் கைகளுக்கு இடையூறு செய்வ தாகக் கூறி வேலுச்சாமியை வெளியேற்ற பேரவைக் காவலர் களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். உடனே பத்துக்கும் மேற்பட்ட அவைக் காவலர்கள் செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்ற அவரது இருக்கையை நோக்கி விரைந்தனர். ஆனால் பேரவைக் காவலர்களை முன் னேற விடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தடுத்தனர். இதனால் அவையில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ""பேரவைத் தலைவர் ஓர் உறுப்பி னரை வெளியேற்ற உத்தரவிட்ட பிறகு, பேரவைக் காவலர்கள் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமா கும். எனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றுவது பற்றி பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

ஆனாலும் பேரவைக் காவலர்கள் வேலுச்சாமியை வெளி யேற்ற விடாமல் அதிமுகவினர் தடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் எழுந்து, ""இரண்டு தரப் பிலும் பிரச்னை எழுந்துள்ளது.ஓர் உறுப்பினரை வெளியேற்ற இத்தனை காவலர்களும், பெண் காவலர்களும் அணிவகுத்து வருவது சரியல்ல'' என்று பேச ஆரம்பிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து ஏதோ கூறினார்கள்.

செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்றுவது என்ற பேரவைத் தலைவரின் முடிவைக் கண் டித்து வெளிநடப்பு செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித் தார். அதனைத் தொடர்ந்து அதி முக எம்.எல்.ஏ.க்கள் அனைவ ரும் அவையை விட்டு வெளியே றினார்கள். அவர்களைத் தொடர்ந்து மதிமுக எம்.எல்.ஏ.க்களும் பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஓர் உறுப்பினரை வெளியேற்ற எத்தனை ஆண் காவலர்களை அனுப்புவது, பெண் காவலர்களை அனுப்பு வது என்பதெல்லாம் பேரவைத் தலைவரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது.' என்றார்.

வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

சென்னை, ஏப். 30: வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பை தளர்த்துவது பற்றி முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரி வித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பாமக எம்.எல்.ஏ.வேல்முருகன் இது குறித்து பேசியதாவது:

வேளாண் துறையில் காலி யாக உள்ள 1,707 பணியிடங் கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஏப்ரல் 25-ம் தேதி பேர வையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமு கம் அறிவித்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பணியிடங்கள் நிரப்பப் பட இருப்பதால் பல ஆண்டுக ளாக வேலை கிடைக்காமல் இருக்கும் வேளாண் பட்டதாரி கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வயது வரம்பை தளர்த்த அரசு நடவ டிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

பி.எஸ்ஸி (வேளா ண்மை) படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. டிப் ளமோ படித்தவர்களுக்கு வயது வரம்பு உண்டு. தற்போது வேளாண் அலுவலர் பணிக ளுக்கு வயது வரம்பை 10 ஆண் டுகள் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.10 ஆண்டுகள் இல்லாவிட்டா லும் வயது வரம்பை 35 -40 ஆக நிர்ணயிப்பது குறித்து முதல்வரி டம் கலந்து பேசி முடிவு எடுக் கப்படும்.

கார்களில் சிவப்பு விளக்கை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை, ஏப். 30: கார்களில் முறைகேடாக சிவப்பு விளக் கைப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் கே.என். நேரு எச்சரிக்கை விடுத் தார்.பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் இது குறித்து பேசியதாவது:

கார்களில் சிவப்பு விளக்கை யார் யார் பயன்படுத்தலாம்? மாவட்ட ஊராட்சித் தலைவர் கள் சிவப்பு விளக்கு பொருத்தப் பட்ட கார்களில் உலா வருகின்ற னர். சில நேரங்களில் சமூக விரோதிகள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தி செக் போஸ்ட்டில் தப்பிச் செல்வதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு:

கவர் னர், முதல்வர், பேரவைத் தலை வர், மாநகராட்சி மேயர்கள், அமைச்சர்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், டி.ஜி.பி., மாநகர காவல்துறை ஆணையர் கள், ஆம்புலன்ஸ்கள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வாகனங்கள், மாவட்ட ஆட்சி யர்கள், எஸ்.பி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாநில தேர்தல் ஆணையர், டி.என்.பி.எஸ்.சி.சேர்மன், சட்டம், ஒழுங்கு ஐ.ஜி.சென்னை, சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. மதுரை, வாரியத் தலைவர் கள் மற்றும் ஆலோசகர்கள், ஆர்க்காடு நவாப் முகம்மது அலி ஆகியோர் மட்டுமே காரில் சிவப்பு விளக்கைப் பயன் படுத்தலாம்.இவர்களைத் தவிர மற்றவர் கள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார் கே.என். நேரு.

பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

சென்னை, ஏப். 30: ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியதாவது:

வியாழக்கிழமை மே தினம். இந்த நேரத்தில் ஸ்ரீபெரும்பு தூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வாசலில் நிறுவப்பட் டிருந்த தொழிற்சங்க கொடி மரமும், சி.ஐ.டி.யு. கொடி மர மும் செவ்வாய்க்கிழமை இரவு ஹூண்டாய் ஆலை நிர்வா கத்தால் உடைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் அளித்த புகாரை ஸ்ரீபெ ரும்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்ய மறுத் துள்ளனர். இதனை ஏற்காத தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் மீது காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் உள் பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண் டும். கொடி மரத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:


எந்த முதலாளிக்கும் ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சங்க கொடியை ஏற்றியவர்கள், அது ஹூண்டாய் ஆலைக்கு சொந்தமான நிலம் என்று நினைத்து "சிப்காட்' நிலத்தில் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.இதனால் சிப்காட் நிர்வாகம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற விவரங்கள் அரசுக் குக் கிடைக்கவில்லை என்றார்.


அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்து அனைவரும் பேரவையை விட்டு வெளியேறினார்கள். பேரவைக்கு வெளியே செய்தியாளர்க ளிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், "ஹூண் டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல்து றையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.

பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு சென்னை, ஏப். 30: ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியதாவது:

வியாழக்கிழமை மே தினம். இந்த நேரத்தில் ஸ்ரீபெரும்பு தூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வாசலில் நிறுவப்பட் டிருந்த தொழிற்சங்க கொடி மரமும், சி.ஐ.டி.யு. கொடி மர மும் செவ்வாய்க்கிழமை இரவு ஹூண்டாய் ஆலை நிர்வா கத்தால் உடைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் அளித்த புகாரை ஸ்ரீபெ ரும்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்ய மறுத் துள்ளனர். இதனை ஏற்காத தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் மீது காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் உள் பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண் டும். கொடி மரத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

எந்த முதலாளிக்கும் ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சங்க கொடியை ஏற்றியவர்கள், அது ஹூண்டாய் ஆலைக்கு சொந்தமான நிலம் என்று நினைத்து "சிப்காட்' நிலத்தில் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.இதனால் சிப்காட் நிர்வாகம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற விவரங்கள் அரசுக் குக் கிடைக்கவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்து அனைவரும் பேரவையை விட்டு வெளியேறினார்கள். பேரவைக்கு வெளியே செய்தியாளர்க ளிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், "ஹூண் டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல்து றையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.

வெலிங்டன் ஏரி: உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல்

சென்னை, ஏப். 30: வெலிங்டன் ஏரியை பழுதுபார்ப்பது சம்பந்த மாக ஆராய காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது அறிக்கையை புதன்கி ழமை அரசுக்கு அளித்துள்ளது.வெலிங்டன் ஏரி கட்டப்பட் டதிலிருந்து செப்பனிடாததால் முழுக் கொள்ளளவும் நீர் தேங்கா மல் இருந்தது. அதனால் வெலிங் டன் ஏரியின் 11,200 ஹெக்டேர் பாசனப் பரப்பு பயன் அடையா மல் இருந்தது.

இதற்கு நிரந்தர தீர்வு காண கடந்த 2007-ம் ஆண்டு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு வெலிங்டன் ஏரியை செப்பனிட தொழில் நுட்ப ஆலோசனைகளை அளித் துள்ளது.குழுவின் அறிக்கையை அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் புதன்கிழமை வழங்கினார்.

இந்த ஏரி செப்பனிடப்பட் டால் திட்டக்குடி மற்றும் விருத் தாச்சலம் பகுதிகளில் உள்ள 11,200 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.உயர்நிலைக் குழுவின் அறிக் கையை பரிசீலித்து உடனடியாக மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.