Wednesday, May 14, 2008

கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமைதான் கிடைக்கிறது

சென்னை, மே 14: கூட இருந்தே குழி பறிக்கும் சிலரின் தோழமைதான் கிடைக்கிறது என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நான்கைந்து பேர் கூட்டணி சேர்ந்து நற்செயல் புரியலாம் என் றால், கூட இருந்தே குழி பறிப்பவரின் தோழமைதான் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் வேம்பாய் கசக்கிறது.

தொங்கலில் சேது சமுத்திரத் திட்டம்:

பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் வலியுறுத் தப்பட்ட, தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது.

இன்னும் எத்தனைக் காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாள்கள் ஓடிப் போய் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. தேசத்தைக் காப்பதா? தேகத்தை துளைத்துக் கூறுபோடும் குண்டு மழைக்கி டையே குழந்தை குட்டிகளோடு தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதா என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

தன்னலம் இல்லாதவர்களும், தாய்நாட்டிற்காக உயிரையும் துறப்பவர்களும் தான் என்னுடன் இருப்பவர்கள் என்ற பெருமிதம் வாய்க்கும் வரையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பூகம்பம், குண்டு வெடிப்பு: பேரவையில் இரங்கல்

சென்னை, மே 14: சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பலியானவர்க ளுக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை காலை பேரவை கூடியதும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பேசியதாவது:

சீனா நாட்டின் தென் மேற்கு மாநிலமான சிஜுவானில் மே 12-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.மே 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாகி உள்ளனர். இந்தச் செய்தி கேட்டு பேரவை அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறது. இந்த இரு சம்பவங்களிலும் பலியான அனைவருக்கும் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம்

சென்னை, மே 14: போலீஸ், தீயணைப்பு துறையினரை திசை திருப்பும் வகையில் வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது. தமிழக காவல் துறைக்கு புதிய காவல் சட் டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான சட்ட முன் வடிவை நிதி அமைச்சர் க. அன்பழகன் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி போலீஸ், தீயணைப்பு துறையினரின் பணிகளை திசை திருப்ப வதந்தி பரப்பி னாலோ, பொய்யான எச்சரிக்கை விடுத்தாலோ ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். ஒருவர் இரண்டாவது முறையாக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ரூ. 4,000 வரை அபராதம் விதிக்கப்படும். போலீஸôரின் பணி நேரம் 8 மணி நேரத்துக்கும் அதிகமா னால் அவர்களுக்குப் போதுமான வசதிகள் வழங்க வேண்டும். மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற போலீஸôர் செல்ல வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதி நிதிகளின் தகுதியின்மையை விசாரிக்க தமிழ் நாடு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

3 ஆண்டு உரிமம்:

பழைய இரும்பு வியா பாரிகள், மோட்டார் வண்டி பழுது பார்க்கும் பட்டறைகள், டிங்கர் கடை உரிமையாளர்கள் ஆகியேருக்கு ஓர் ஆண்டு உரிமம் வழங்கப் பட்டு வருகிறது. இதனை மூன்று ஆண்டாக உயர்த்த வகை செய் யும் மசோ தாவை நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார்.

தனி அலுவலர் பதவிக்காலம் நீடிப்பு:

கூட்டுறத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் கூட்டு றவுச் சங்கங்கங்களின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தாக்கல் செய்தார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் பழகுநர்களின் கால அளவைக் குறைக்க வகை செய்யும் மசோதவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார்.

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயத்துக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார். மேற்கண்ட ஆறு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

'வெட்கப்படுகிறேன்'

சென்னை, மே 14: லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் பேசியதாவது:

லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற் றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.""எனது உறவினர் ஜவஹர் மீது நடை பெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசியபோது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அதனை தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று அமைச்சர் பூங்கோதை எனக்கு எழுதியுள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா

பூங்கோதை ராஜிநாமா சென்னை, மே 14: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அது ஆய்வில் இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை யர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியுள்ளது.இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார்.இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப் பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.

தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதா கப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட் டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைப் பதா அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆபாச நடனத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

சென்னை, மே 13: இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதா னங்களில் அழகிகளின் நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஞா. செந்த மிழன் (படம்) கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனம் - சுற்றுச்சூழல் - இளை ஞர் நலன் - பொது - விளையாட்டு - தமிழ் வளர்ச்சி ஆகிய துறை களின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

20 - 20 கிரிக்கெட் போட்டி நடக் கும் மைதானங்களில் வீரர்களை உற் சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில் இளம் பெண்களை கவர்ச்சி உடை யில் நடனம் ஆட வைக்கின்றனர்.இதுபோன்ற கலாச்சார சீர்கேடுக ளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.வீடியோ கேம்ஸ் சூதாட்டம் சென் னையில் அதிகமாகி விட்டது. இத னைத் தடுக்க வேண்டும்.சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நடக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொல்கிற இடத் தில் நடக்க வேண்டும்.

234 எம்.எல்.ஏ. தொகுதிக்கும் விளை யாட்டுக் கருவிகள் வாங்க ரூ. 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு தொகுதிக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையில் தேவையான விளை யாட்டுக் கருவிகள் வாங்க முடி யாது. எனவே ரூ. 4 லட்சம் ஒதுக்க வேண்டும்.

மாவட்டம் தோறும் விளை யாட்டு விடுதிகள்:

பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் விளை யாட்டுக்கு நேரம் ஒதுக் குவதில்லை. அப்ப டியே ஒதுக்கினாலும் அந்த நேரத்தில் மற்ற பாடங்களை நடத்துகி றார்கள். பள்ளிகள் கல் லூரிகளில் காலியாக உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். மாவட்டம் தோறும் விளையாட் டுப் பள்ளிகள், விளை யாட்டு விடுதிகள் அமைக்க வேண் டும். காவல் துறையில் 14 விளை யாட்டுகள் உள்ளன. 15-வது விளை யாட்டாக கோகோ விளையாட்டை சேர்க்க வேண்டும்.

தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற் கொலை செய்து கொள்வதை தடுப்ப தற்காகவே அதிமுக ஆட்சியில் உட னடித் தேர்வு திட்டம் கொண்டு வரப் பட்டது.தமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர். இளைஞர் களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் வர வேண்டும் என்பதற்காகவே அதிமுக இளைஞர் பாசறை மற் றும் இளம் பெண்கள் பாசறை திட் டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்பிள் கஞ்சா:

தமிழகம் முழு வதும் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதாக செய்திகள் வருகின்றன.மதுரையில் இளைஞர்களையும், கல் லூரி மாணவர்களையும் சீரழிக்கிற வகையில் ஆப்பிள் கஞ்சா உலா வரு வதாக தெரிய வருகிறது. இதனை அரசு தடுத்து மாணவர்களின் நல னைக்காக்க வேண்டும் என்றார் செந் தமிழன்.

விளம்பரப் பலகை: சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை, மே 13: விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்கள் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும் மூன்று சட்ட முன் வடிவுகளை அறிமுகம் செய்தார்.

விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்களில் 75 சதவீதம் அரசின் கணக்கிலும், 25 சதவீதம் சம்பந்தப்பட்ட நகர்ப் புற உள்ளாட்சிகளின் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டு வந்தது.தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி, இந்தக் கட்டணம் முழுவ தையும் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேயருக்கு அதிக அதிகாரம்:

உள்ளாட்சிகளுக்கு அதிக அதி காரம் வழங்க ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் தலை மையில் அமைக்கப்பட்ட குழு மேயருக்கு அதிக அதிகாரம் வழங்க வும், அதற்கேற்ப சட்டங்களை திருத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

சிலைகளை அவமதித்தால் குண்டர் சட்டம்:

தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை (மே 12) அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

வாகனங்களுக்கான ஆயுள்கால வரி உயர்வு:

வாகனங்களுக் கான ஆயுள்கால வரி 6 சதவீத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்ப டும் என்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருந்தார்.அதன்படி, ஆயுள்கால வரியை உயர்த்த வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கே.என். நேரு அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப் புத் திருத்த சட்ட முன் வடிவை சட்டத் துறை அமைச்சர் துரைமுரு கன் அறிமுகம் செய்தார். 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை வணிக வரித்துறை அமைச்சர் உபயத்துல்லா தாக்கல் செய்தார்.

அதுபோல, 2008-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் அறிமுகம் செய்தார்.

தோழமையுடன் வாழ வேண்டும் - பேரவையில் முதல்வர் கருணாநிதி உருக்கம்

அனைவரும் தோழமையுடன் வாழ வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல் வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந் ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், அர சுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் தனது பாராட்டுக்க ளைத் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து தோழமைக் கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேசியதாவது:

"நமது ஒற்றுமையில், தோழமை உணர்வில் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.நீங்கள் விரும்புகிறவரை நான் இல்லாமல், இடையில் பிரிந்து விட்டாலும், யாரோ ஒரு பெரியவன் இட்ட கட் டளை என்று நினைக்காமல், ஒரு சிறியவன் விடுத்த கெஞ்ச லாக ஏற்றுக் கொண்டு, தோழமையுடன் வாழ்ந்து காட்டி தமிழகத்தை, தமிழ் இனத்தை வாழ வைக்க வேண்டும்.50 வயதுக்குப் பிறகு எனக்கு நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நாட் கள் குறைவாக இருந்தால், மக்களுக்கு தொண் டாற்றக் கூடிய நாட்களும் குறைந்து விடும் என்பதால் நீண்ட காலம் வாழ ஆசைப்படுகி றேன்.

ஜம்பம் அடிக்கவில்லை:

என்னுடைய ஒரு நாள் வேலை இப்படி என்று "ஜம்பம்' அடித் துக் கொள்ளவில்லை. இப்படி வேலை செய் தால்தான் நீண்ட காலம் வாழ முடியும் என்ப தற்காக பொதுநலத்தோடு சொல்கிறேன்.மக்களுக்காக தொண்டாற்றுகிற நேரத்தில் எல்லோரோடும் தோழமையோடு பழகி னோம் என்ற திருப்தியோடு மறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

திங்கள்கிழமை (மே 12) காவல்துறை மானியக் கோரிக் கையின்போது எனது பேச்சை கவனித்திருப்பீர்கள்.யாரையும் வசியப்படுத்த வேண்டும், நம் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. எல் லோரும் இணைந்து இந்த நாட்டை, இந்தச் சமுதா யத்தை ஒற்றுமைப்படுத்தி வளம்பெறச் செய்ய வேண் டும்' என்றார் முதல்வர் கருணாநிதி.

நிரம்பி வழிந்த பார்வையாளர் மாடம்

சென்னை, மே 12: பேரவை யில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானி யக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் கரு ணாநிதி பேசினார்.

அப்போது முதல்வர் கருணா நிதியின் மனைவி தயாளு அம் மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, அவரது கண வர், மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, கவி ஞர் தமிழச்சி தங்கபாண்டியன், திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், திமுக அமைப் புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சி களை கவனித்தனர்.

நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, மே 12: தமிழகத்தில் காலியாக உள்ள 201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனு மதி அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் திங்கள்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

நீதிமன்றங்களில் அதி கமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் துரைமுருகன்:

கடந்த ஆட்சியில் வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் நீதிப திகள் யாரும் நியமனம் செய்யப்ப டவில்லை. 81 நீதிபதிகளை நியம னம் செய்ய உயர் நீதிமன்றம் அர சுக்கு கோரிக்கை வைத்தது.அதற்கு அனுமதி தரப்பட்டது.பிறகு 181 இடங்கள் காலியாக உள் ளன என்று கேட்டார்கள்; அதற் கும் அரசு அனுமதி தந்தது. 201 நீதி பதிகளை நியமனம் செய்ய அர சின் அனுமதி பெறாமல் விளம்ப ரம் வெளியிடப்பட்டது. அத னால் அது நின்றுபோனது. இப் போது 201 நீதிபதிகள் நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள் ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது முதல் வரின் பரிசீலனையில் உள்ளது.

ச. லட்சுமணன் (திமுக):

போடி நாயக்கனூரில் உள்ள நீதிமன்றத் துக்கு புதிய கட்டடம் கட்டப்ப டுமா?

அமைச்சர் துரைமுருகன்:

நீதி மன்றங்களுக்கு இடம் தேர்வு செய்வது உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு. போடியில் நீதிமன் றம் கட்ட வேளாண் துறைக்கு சொந்தமான இடத்தை கேட்ட போது மறுத்துவிட்டதாக அர சுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. வேளாண் துறையி டம் இருந்து இடத்தைப் பெற்று புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்ட அறநிலை யத் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஒரு திட்டத்துக்கு இடம் தேவைப்படும்போது அர சின் ஒரு துறையில் இருந்து மற்ற துறைக்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

எந்தத் துறையிடமிருந்து வேண்டுமா னாலும் நிலத்தை வாங்கி விட லாம். வனத் துறை மற்றும் அறநி லையத் துறையிடமிருந்து நில த்தை வாங்குவதற்குள் வைகுண் டம் போய் பாரிஜாத மலரைக் கொண்டு வந்து விடலாம்.

சோதனைச் சாவடிகளை நவீனப்படுத்த ரூ. 70 கோடி: கே.என். நேரு

ஒசூர், கந்தன்சாவடி, களியக்கா விளை ஆகிய சோதனைச் சாவடி கள் ரூ. 70 கோடியில் நவீனப்படுத் தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது திமுக எம்.எல்.ஏ. டி. செங்குட்டுவன் எழுப் பிய கேள்விக்கு பதிலளித்த வணிகவ ரித் துறை அமைச்சர் உபையத் துல்லா, ""குஜராத் மாநிலத்தில் உள்ள துபோல சோதனைச் சாவடிகளை ரூ. 200 கோடியில் நவீனப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது'' என்றார்.

அமைச்சர் கே.என். நேரு:

தமிழ கத்தில் உள்ள சோதனைச் சாவடி களை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாத ஒசூர், கந்தன்சாவடி, களியக்கா விளை ஆகிய சோதனைச் சாவடி களை நவீனப்படுத்த ரூ. 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கி ணைந்த சோதனைச் சாவடியாகச் செயல்படும் என்றார்.

Monday, May 12, 2008

பி.பி.ஓ. பணித்திறன் வளர்க்கப் பயிற்சி

சென்னை, மே 11: சுருக்கெழுத்தாளர்கள் சங்கம் ஆளுமைத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பை மே 19 முதல் நடத்துகிறது. பி.பி.ஓ., கே.பி.ஓ. கால் சென்டர்களில் பணியில் சேர விரும்புகிறவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது, நேர நிர்வாகம், நேர்முகச் சிந்தனை, குழு விவாதம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ஆங்கில வழியில் பிளஸ் 2 படித்தவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.1,000.

மேலும் விவரங்களுக்கு:

044 -2434 2421, 2433 7387.

ரூ. 3.20 லட்சம் உதவித் தொகை: கருணாநிதி வழங்கினார்

சென்னை, மே 11: அறக்கட்டளை மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக 32 பேருக்கு ரூ. 3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்த ரூ. 5 கோடி வைப்பு நிதி யாக போடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியில், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த வட்டியில் இருந்து 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவித் தொகையாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2005-ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.83.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திக் மீது நடவடிக்கையா?

சென்னை, மே 11: பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் தெரிவித்தார். பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கார்த்திக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 33 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு கார்த்திக் அனுப்பினார். அதில் அவரது ரசிகர் மன்றத்தினர் மட்டுமே இடம் பெற்றிருப்ப தாக புகார் எழுந்தது. இதனால் அந்தப் பட்டியலை கட்சி மேலிடம் திருப்பி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. கார்த்திக்கை கட்சியில் இருந்து நீக்க, பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.கட்சி அறிவித்த போராட்டங்களில் ஈடுபடாமல் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது ஏன்? தொண்டர்களை சந்திக்காமல் தனியாக செயல்படுவது ஏன்? என்று விளக்கம் கேட்கப்பட்டி ருப்பதாக கூறப்படுகிறது.

பிஸ்வாஸ் பதில்:

இது குறித்து "தினமணி' நிருபரிடம் பிஸ்வாஸ் தொலைபேசியில் கூறியதாவது: இது முற்றிலும் எங்களின் உட்கட்சி விவகாரம். வரும் மே மாதம் 17-ம் தேதி மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.அப்போது தமிழகம் தொடர்பான திட்டங்களும் விவாதிக்கப்படும்.

கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றியும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதா? என்பது பற்றியும் இப்போது எதுவும் கூற விரும்ப வில்லை என்றார்.

வெளிநாட்டினரை ஈர்க்கும் விநாயகர் சிற்பங்கள்

சென்னை, மே 11: சென்னையில் நடைபெற்றுவரும் ரத்தினக் கண்காட்சியில் விநாயகர் சிற் பங்களை வெளிநாட்டினர் அதிகமாக வாங்கிச் செல்கின்ற னர்.சென்னை சேமியர்ஸ் சாலை யில் "சிருஷ்டி' என்ற தமிழ்நாடு கைவினைக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் விற்பனைக் கூடத் தில் ரத்தினக் களஞ்சியம் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட் சியில் நவரத்தினங்களான மாணிக்கம், பவளம், முத்து, மர கதம், கோமேதகம், வைடூரியம், புஷ்பராகம், வைரம், நீலம் ஆகி யவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உரு வாக்கப்பட்ட சிற்பங்கள் பார் வையாளர்களைக் கவர்ந்துள் ளன.நவரத்தினங்களைத் தவிர 90 வகையான உபரத்தினக் கற்கள் உள்ளன.அவற்றில் 30 வகை கற்களில் செய்யப்பட்ட விநாயகர், ராதா கிருஷ்ணன் போன்ற இந்துக் கடவுள்களின் சிற்பங்களும், நடன மங்கைகளின் சிற்பங்க ளும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரை:

""நவரத்தினங்கள், பளிங்கு போன்ற 40 வகை கற்க ளில் கலைநயத்துடன் செய்யப் பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் ஒரே இடத்தில் சென்னையில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சிற்பங்கள் தவிர நேபாளத் தில் உள்ள கண்டகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட சாளக்கிராமம் என்னும் கற்கள், நர்மதை ஆற்றில் கண் டெடுக்கப்படும் நர்மதா பாணம் எனப்படும் சிவலிங்கம் ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன. ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன என்கிறார் இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சோமசுந் தரம்.

'மாணிக்க யானை:

நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கத்தில் செய்யப்பட்ட 9.5 கிலோ எடையுள்ள எட்டு அங்குல விநாயகர் சிலையின் விலை ரூ.1,45,000. அதுபோல பவளத்தில் செய்யப்பட்ட ஒன்றரை அங்குல அளவுள்ள விநாயகர் சிலை ரூ.99 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

Friday, May 9, 2008

முதலிடம் பெற்ற ராஜேஷ்குமாருக்கு பாமக எம்.எல்.ஏ. பரிசு

சென்னை, மே 9: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற எம். ராஜேஷ்குமாருக்கு தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குவதாக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம் (பாமக) அறிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், ""பிளஸ் 2 தேர்வில் எனது செங்கல்பட்டு தொகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நி லைப்பள்ளி மாணவர் எம்.ராஜேஷ்குமார் 1200க்கு 1,182 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு எனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குகிறேன்'' என்றார்.

வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி: சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை, மே 9: வேலூர், தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட் சிகளாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட முன்வடிவுகள் பேரவை யில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.அவற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

வேலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று, ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தூத் துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழகம் ஆயுதச் சந்தையாக மாறிவிட்டது

சென்னை, மே 9: தி.மு.க. ஆட் சியில் தமிழகம் ஆயுதச் சந் தையாக மாறிவிட்டது என்று அ.தி.மு.க.எம்.எல்.ஏ. சேகர்பாபு குற்றம் சாட்டினார்.சட்டப் பேரவையில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:

தி.மு.க. ஆட்சியில் தமிழ கம் ஆயுதச் சந்தையாக மாறி விட்டது. கடந்த நான்கு மாதங்களில் திருட்டு, கொலைச் சம்பவங்கள் அதிக ரித்துள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலை யத்தில் துப்பாக்கிகள் திருட் டுப் போய் உள்ளன.அ.தி.மு.க. ஆட்சியில் குற் றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டனர்.தற்போது சமூக விரோதிகள் மீது எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படுவதில்லை.

தற்போது 47 ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் பணியிடங் கள் காலியாக உள்ளன. இப்ப டிப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப் பாற்ற முடியும்? சென்னை மாநகரில் மட் டும் கடந்த நான்கு மாதங்க ளில் 10 கொலைகளும், 18 பெரிய திருட்டுகளும், 108 சிறிய திருட்டுகளும் நடந் துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசா ரிக்க கமிஷன் அமைக்கப்பட் டுள்ளதாக முதல்வர் அறிவித் தார். ஆனால் அது இன்ன மும் அரசு இதழில் வெளியி டப்படவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.விசாரணை குறிப்பிட்ட திசையில்தான் செல்ல வேண் டும் என்று அரசு அறிவுறுத்து வது போல இந்த சம்பவம் உள்ளது என்றார் சேகர் பாபு.

"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்'


"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்' சென்னை, மே 9: அரசியல்வாதி கள், காவல் துறையினர், சமூக விரோதிகள் ஆகியோருக்கு இடையே உள்ள உறவை முற்றி லும் துண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா (படம்) தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற காவல் - தீய ணைப்பு - மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

அரசியல்வாதிகள், காவல் துறை, சமூக விரோதிகள் ஆகி யோருக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பால் குற்றங் கள் அதிகரித்து வருகின்றன.எனவே இந்தத் தொடர்பை முற்றி லும் துண்டிக்க வேண்டும்.குற்றவாளிகளை மட்டுமே போலீஸôர் கைது செய்ய வேண் டும். மனைவி, தாய் போன்ற குற்ற வாளியின் குடும்பப் பெண்களை கைது செய்யக் கூடாது. பெண் களை இரவில் கைது செய்யாமல் பகலில் கைது செய்து மாலைக் குள் விசாரணை நடத்த வேண் டும்.வரதட்சணை வழக்குகளை மனித உரிமை ஆணையம் மூலம் விசாரிக்க வேண்டும்.

தங்கத்தின் விலையைவிட நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. நில மோசடி செய் பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுக ளில் அதிகாரப்பூர்வமற்ற முறை யில் பல காவலர்கள் வேலை செய் கின்றனர். இதனால் காவல் துறை பணிகள் பாதிக்கப்படுகின்றன.இது தடுக்கப்பட வேண்டும்.போலீஸ் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் அளவை அதிகப்படுத்த வேண் டும் என்றார் டி. யசோதா.

ஜி.கே. மணி (பாமக):

காவல் துறை தன்னாட்சி பெற்ற அமைப் பாக யாருடைய தலையீடும் இல் லாமல் இயங்க வேண்டும்.தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கி திருட்டுபோன சம்ப வத்தில் காவலர்களே சம்பந்தப் பட்டுள்ளனர். ஆனால் இதற்காக அப்பாவி பாமகவினர் குடும்பங் களை போலீஸôர் அடித்து துன் புறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் குடியிருப்பில் பரிமளா என்ற பெண் பொறியாளர் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கொலை செய் யப்பட்டார்.ஆனால் இதனை தற்கொலை என்று போலீஸôர் கூறுகின்ற னர். இது குறித்து தீவிர விசா ரணை நடத்த வேண்டும்.

வீடுகளில் சுற்றுலாப் பயணி களை தங்க வைக்கலாம் என்ற சுற் றுலா துறை அமைச்சரின் அறி விப்பு பல்வேறு முறைகேடுக ளுக்கு வழிவகுக்கும். என்-கவுன் டர் சாவுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

நெருங்கி வருவது யார்? பேரவையில் ருசிகரம்

சென்னை, மே 9: நெருங்கி வரு வது யார் என்பது தொடர் பாக அதிமுக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே ருசிகர விவாதம் நடைபெற் றது.சட்டப்பேரவையில் வியா ழக்கிழமை நடைபெற்ற சுற் றுலா - பத்திரப் பதிவு - செய்தி ஆகிய துறைகளுக் கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எஸ்.வி. சேகர், ""சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடல் ஊன முற்றோர்களாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக் டர் இ.எஸ்.எஸ். ராமன், ""இளம் சர்க்கரை நோயாளி கள் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்கள். எனவே எஸ்.வி. சேகரின் கோரிக் கையை நானும் ஆதரிக்கி றேன்'' என்றார்.அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், ""காங்கிரஸ் எம்.எல்.ஏ.இ.எஸ்.எஸ். ராமன் எங்க ளோடு நெருங்கி வருவதற்கு நன்றி என்றார்.''

அப்போது குறுக்கிட்ட சட் டப்பேரவை காங்கிரஸ் தலை வர் டி. சுதர்சனம், ""எஸ்.வி.சேகர்தான் எங்களோடு நெருங்கி வருகிறார்'' என்றார்.

"அரசு ஊழியர்களுக்கு கைத்தறி கட்டாயம்'

சென்னை, மே 7: அரசு ஊழி யர்கள் அனைவரும் கைத்தறி துணி அணிவதை கட்டாய மாக்க வேண்டும் என்று காங் கிரஸ் எம்.எல்.ஏ.கே.எஸ்.கே. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன் கிழமை நடைபெற்ற கைத்தறி, கதர், சிறுதொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

கேரளத்தைப் போல தமிழகத்திலும் அரசு ஊழியர் கள் அனைவரும் பணியின் போது கைத்தறி அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தர விட வேண்டும்.கைத்தறி துணி வாங்க, பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மூன்று முட்டை வழங்குவதுபோல மூன்று சீருடை வழங்க வேண்டும்.மதுரை மாநகரில் 50 அடி உயரத்துக்கு மேல் கட்டடம் கட் டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

அதனை தளர்த்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியே பெரிய கட்டடங் கள் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை வளர்ச்சி அடைந்த நகரமாக மாறும். மதுரையில் அனுமதி பெறாமல் கட்டப் பட்ட 25 ஆயிரம் கட்டடங் கள் உள்ளன. மதுரைக்கு என தனியாக அரசாணை பிறப் பித்து இந்தக் கட்டடங்களை வரையறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அரசுக்கு ரூ. 25 கோடி வருமா னம் கிடைக்கும்.

சாதி சான்றிதழ் கிடைக்கா மல் காட்டுநாய்க்கன் சமுதாயத்தினர் அவ திப்படுகின்றனர்.அவர்களுக்கு சான்றி தழ் கிடைக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜேந்தி ரன்.ஜி. லதா (மார்க்சிஸ்ட்):ஆன் லைன் மூலம் முன்பேர வணி கத்தில் ஈடுபடுவதால் இரும் புத் தாதுவின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. இத னால் சிறிய தொழிற்சாலை கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.வெளிநாடுகளை நம்பியி ருப்பதால் நெசவுத் தொழி லுக்கு தேவையான நூலின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது.

இதனால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 18 நூற் பாலைகளில் 13 நூற்பாலை கள் மூடப்பட்டுள்ளன.அதில் ஐந்து நூற்பாலை களை அரசு சீரமைக்கும் என்று 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி பேரவை யில் அமைச்சர் ராஜா அறி வித்தார்.ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. பீடி, தீப் பெட்டி, பட்டாசுத் தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு வரிச்ச லுகை அளிக்க வேண்டும் என்றார் லதா.

பெண் கருக்கொலை தடுப்பு வாசகத்துக்கு பரிசு

சென்னை, மே 7: பெண் கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விளம்பர வாசகங்களை தேரந் தெடுப்பதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு புதன்கி ழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண் சிசுக்கொலை, கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, துண்டுப் பிரசுரம், விளம்ப ரப் பலகைகள் மூலம் விளம்பரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள் ளது.இந்த விளம்பரங்களில் இடம்பெற, சிறந்த வாசகங்கள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் சிறந்த வாசகங்க ளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ. 500-ம் வழங்கப்படும்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டில் பெண் குழந் தைகள் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 974 ஆகவும், 1981-ல் 967 ஆகவும், 1991-ல் 948 என படிப்படி யாகக் குறைந்து 2001 கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 942 ஆக உள் ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகி தம் குறைந்து வருவது வருங்கால சமு தாயத்தை வெகுவாகப் பாதிக்கும் என் பதால் பெண் சிசுக்கொலை, கருக் கொலையை தடுக்க நிறுத்த அரசு முனைப்புடன் உள்ளது.கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனை 1994-ம் ஆண்டு மத்திய அர சால் தடை செய்யப்பட்டது.

ஆனா லும் பெண் சிசுக்கொலை, கருக் கொலை, பெண்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்ய அரசு முடிவு செய் துள்ளது.

போட்டிக்கான விளம்பர வாசகங் களை மே 30-ம் தேதி வரை அனுப்ப லாம். பரிசு பெற்றவர்களுக்கு அதன் விவரம் கடிதம் மூலம் அனுப்பி வைக் கப்படும். விளம்பர வாசகங்கள் தனியாக முத் திரையிடப்பட்ட உறைகளில் ""பெண் கருக்கொலை தடுப்புப் போட்டி மே 2008'' எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் துறை (நிர்வாகப் பிரிவு 7), சென்னை -6.

மேலும் விவரங்களுக்கு:

044-2432 1835

கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது எப்போது?

சென்னை, மே 7: நெசவாளர்களுக் காக யாருடைய ஆட்சியில் கஞ் சித் தொட்டி திறக்கப்பட்டது என்பது குறித்து பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கைத்தறி - கதர் - சிறு தொழில் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி யல் சேகர், ""நெசவாளர்களுக்கு கடந்த கால ஆட்சியில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது'' என்றார்.

அதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது பேசிய சட்டப் பேரவை அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன், ""தற் போதைய தி.மு.க. ஆட்சியிலும் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.கஞ்சித் தொட்டி திறக்கப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. கோ.அரி போன்றவர் கள் கைது செய்யப்பட்டனர்'' என் றார்.

அது போல தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ. சுப்பிரமணியம் பேசும் போது குறுக்கிட்ட செங்கோட்டையன், ""1996-2001 திமுக ஆட்சியில் நெச வாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ. 40 கோடி நிலுவைத் தொகை 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப் பட்டது'' என்றார்.

அப்போது கதர்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குறுக் கிட்டு, ""கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் நெசவாளர்களுக்கு ரூ. 25 கோடி நிலுவைத் தொகை வழங் கப்படாமல் இருந்தது. அதில், ரூ. 12.5 கோடி தற்போது வழங்கப் பட்டுள்ளது'' என்றார்.

கல்வி அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை

சென்னை, மே 6: போலி கையெ ழுத்து போட்டு ஒன்பது ஆசிரி யர்களை இட மாற்றம் செய்த உதவி கல்வி அதிகாரி உள் ளிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல் வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக):

திண்டுக்கல் மாவட்டம் நத் தம் உதவி தொடக்க அலுவலர் குருசண்முகம், தட்டச்சுப் பணியா ளர் தமிழரசி, டிராவல்ஸ் நிறுவ னம் நடத்தி வரும் திமுக பிரமுகர் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக் கக் கல்வி இயக்குநரின் கையெ ழுத்தை போலியாகப் போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற் றம் செய்துள்ளனர்.அவர்களில் 8 பேர் பணியில் சேர்ந்து விட்டனர். ஒரு ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பு, புதி தாகப் பொறுப்பேற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வ குமார் இந்த மோசடியைக் கண்டு பிடித்துள்ளார்.

இதில் குருசண்முகம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமி ழரசி, சுரேஷ் குமார் இருவரும் தலைமறைவாகி விட்டதாகப் போலீஸôர் கூறுகின்றனர். இது போன்ற பிரச்னையில் யாரையும் தப்ப விடாமல் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

உதவி தொடக்க கல்வி அதிகாரி யின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஆசிரியர்கள் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் வேலியே பயிரை மேய்ந்துள்ளது.இது போன்ற சம்பவங்கள் வேறு எங்காவது நடந்துள்ளதா?

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உதவி தொடக்க கல்வி இயக்குந ரின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். ஆசி ரியர்கள் இடமாற்ற உத்தரவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர்தான் கையெழுத்து போடு வது வழக்கம்.இதில் உதவி தொடக்க கல்வி இயக்குநரின் கையெழுத்து இருந் ததால் சந்தேகம் வரவே விசா ரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய் யப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்தத் தகவல் கிடைத்ததும் விசா ரணை நடத்தப்பட்டு ஒன்பது ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய் யப்பட்டனர்.இந்த விஷயத்தில் எதையும் மூடி மறைக்க அரசு விரும்ப வில்லை. இதற்குக் காரணமான உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமறைவான தமிழரசி, சுரேஷ் குமார் ஆகியோரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட அனைவரின் மீதும் கிரிமி னல் நடவடிக்கை எடுக்கப்படும்.வேறு எங்கும் இதுபோன்ற சம்ப வங்கள் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள் ளது. இனி இப்படிப்பட்ட சம்ப வங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் தங்கம் தென்னரசு.

உயர்கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்

சென்னை, மே 6: எண்ணிக்கை அதிகரிப்போம் என்று கூறி உயர் கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள் என்று அதி முக எம்.எல்.ஏ. மு. தம்பித்துரை குற்றம் சாட்டினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

2007-ம் ஆண்டு உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் ""தரத்தினை உயர்த்துவோம், எண்ணிக்கையை அதிகரிப்போம்'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் 2008-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் ""எண்ணிக்கையை அதிகரிப்போம், தரத்தினை உயர்த்துவோம்'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது உயர் கல்வி யின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலம். அவ ரது ஆட்சியில்தான் சுயநிதி கல்லூரிகள் அதிகமாக தொடங்கப்பட் டன. முதல்வர் கருணாநிதி சுயநிதி கல்லூரிகளை எதிர்ப்பவர்.

தமிழ கத்தில் தற்போது 1,400 கல்லூரிகள் உள்ளன. அதில் 1,090 கல்லூரி கள் சுயநிதிக் கல்லூரிகள். 108 கல்லூரிகள் மட்டுமே அரசுக் கல்லூரி கள்.லட்சக்கணக்கான தமிழர்கள் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பணிபுரிகின்றனர். இதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளே கார ணம்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எட்டு பல்கலைக்கழகங்களும், ஜெயலலிதா ஆட்சியில் நான்கு பல்கலைக்கழகங்களும் தொடங்கப் பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் 6 அரசு கல்லூரிகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன.

கல்வித் துறையில் அரசியல் தலையீடு இல்லை என்கிறீர்கள்.ஆனால் அரசியல்வாதியான சபாபதி மோகனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளீர்கள்.இது எந்த வகையில் நியாயம்? என்றார் தம்பித்துரை.

அமைச்சர் பொன்முடி:

கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட் சியில் 6 அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மூன்று கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அரசு கலைக்கல் லூரிகளில் சுயநிதிப் பிரிவை தொடங்கி அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டது.சபாபதி மோகன் தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் கல்விப் பணிக்கு திரும்பியவர். சட்டப் பேரவை தலைவராக இருந்த பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் துணை வேந்தராக நியமிக்கப்படவில்லையா? மத்திய அமைச்சராக இருந்த சந்திரசேகர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்திருக்கிறார் என்றார் பொன்முடி.

ஒத்துழைப்பு தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, மே 6: தமிழகம் மீண் டும் அமைதிப் பூங்காவாக மலர அனைவ ரும் ஒத்து ழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட தடுப்புச் சுவர் இடிக்கப் பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டுள் ளது. இது குறித்து பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கரு ணாநிதி பேசியதாவது:

ஜாதி மோதல்கள் இல்லாமல் தமிழகம் மீண்டும் அமைதிப் பூங் காவாக மலர அனைவரும் ஒத்து ழைப்பு தர வேண்டும்.மதுரை மாவட்டம் உத்தபுரத் தில் கடந்த சில நாட்களாக உருவா கியுள்ள பிரச்னை குறித்து தமிழ கத்தில் உணர்ச்சி அலைகள் அலைமோதிக் கொண்டிருக்கின் றன. இந்தப் பிரச்னை ஜாதிப் பூச லாக மாறி, மோதல்கள் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட நேரத்தில் பிரச்னை சுமுகமாக முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தரு கிறது.

தடுப்புச் சுவரை அவமானச் சின்னமாகக் கருதி அதை இடிக்க வேண்டும் என்று பெரும்பான் மையான ஒடுக்கப்பட்ட மக்க ளும், சுவரை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர் தரப்பின ரும் கூறினார்கள். இது தொடர் பாக நான் மதுரை மாவட்ட ஆட் சியரிடம் விரிவாகப் பேசினேன்.

ரத்த வெள்ளம்:

அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் சொன்ன தைப்போல 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சுவர் கட் டப்பட்டது என்பதை அனைவ ரும் அறிவார்கள். 20 ஆண்டுக ளுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் மட் டுமல்ல தொடர்கதையாகவே அந் தப் பகுதியில் இதுபோன்ற கலவ ரங்கள், மோதல்கள் அந்தப் பகுதி யில் நடந்து கொண்டே இருக்கின் றன.இதற்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதிகளில் ஏற்பட்ட ரத்த வெள்ளம், குளங்களிலும், ஆறுக ளிலும், வாய்க்கால்களிலும் ஓடிய தும், அதில் தலைகள் மிதந்ததும் சட்டப் பேரவையில் உறுப்பினர்க ளால் சொல்லப்பட்ட செய்தி தான்.

பாதையும், பாதுகாப்பும்:

உத்தபுரத்தில் ஒரு தரப்பினர் பாதை வேண்டும் என்கிறார்கள். மற் றொரு தரப்பினர் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். "பாதை யும் கொடுங்கள், பாதுகாப்பும் கொடுங்கள்' என்று நான் மாவட்ட ஆட்சியரிடம் கூறி னேன். அங்குள்ள நீண்ட சுவரில் பெரிய நிலைவாசல் ஒன்றை தோற்றுவித்து பாதை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்தப் பாதை வழி யாக யார் வேண்டுமானாலும் செல்லலாம்.பாதையும் இருக்கட்டும், பாது காப்புக்கு அந்தச் சுவரும் இருக் கட்டும் என்று அங்கு இரு தரப்பி னரும் சகோதரர்களாக வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உயர் வர்க்கத்தினர் என்று தங் களை நினைத்துக் கொண்டிருக் கும் ஆண்களில் சிலர் நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம் என்று ரேஷன் கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று விட்டதாக செய்தி வந்துள்ளது.அதனை கோபத்தின் அடையா ளம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஜாதி வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் என்று கூற முடியாது.ஆண்கள் மலைப் பகுதிக்கு சென்றாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் அங்கேயே இருக்கிறார் கள். யாரும் செல்லவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தகவல் அனுப்பியுள்ளார். அந்த அளவுக் குப் பெண்கள் முன்னேறி இருக்கி றார்கள்.

சில அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் கூறினார். ஒரு சம்பவம் நடந்தால் அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்; அதில் தவறு ஏதும் இல்லை. பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு சமத்துவ நிலை ஏற் பட்டதற்காக உத்தபுரத்தை இனி "உத்தமபுரம்' என்று அழைக்கலாம் என்றார்.

அவசரத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் தொ.பே. "108' சேவை

சென்னை, மே 6: தமிழகத் தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் கட்டண மில்லா தொலைபேசி எண் "108'-ஐக் கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அவசரகால ஆம்பு லன்ஸ் ஊர்தி சேவைத் திட் டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் கரு ணாநிதி முன்னிலையில் மருத்துவ சேவையில் அனுப வம் உள்ள "எம்ரி' நிறுவனத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெ ழுத்தானது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னி லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் மக் கள் நல்வாழ்வுத் துறை சிறப் புச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எம்ரி நிறுவனம் சார்பில் அதன் முதன்மை நிர்வாக அலுவலர் வெங்கட் ஆகி யோர் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டனர்.இதன்படி எம்ரி நிறுவனம் சென்னையில் மத்திய அவசர கால செயல்பாட்டு நிலையம் ஒன்றை அமைத்து அவசர கால சேவையில் ஈடுபடும்.

கட்டணம் இல்லா தொலைபேசி எண் "108' மூலம் 24 மணி நேரமும் இந்த மையத்தை மக் கள் தொடர்பு கொள்ளலாம்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் பொறுப்பு "எம்ரி' நிறுவ னத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

முதல் கட்டமாக 14 மாவட் டங்களில் 198 ஆம்புலன்ஸ் களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆம்பு லன்ஸில் அவசரகால சிகிச் சையில் தேர்ச்சி பெற்ற பணி யாளரும், ஓட்டுநரும் பணிய மர்த்தப்படுவார்கள். ஆம்பு லன்ஸýக்கு பொது மக்கள் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. இந்த ஆம்பு லன்ûஸ கண்காணிக்க நவீன தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை வழங்க மாநில அளவில் தலைமைச் செயலா ளரை தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட் டத்திலும் மாவட்ட ஆட்சி யரை தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்கு தேவையான கட்டடம் கட்ட வும், தொழில்நுட்பக் கருவி கள், தளவாடப் பொருட்கள் வாங்க முதல் ஆண்டில் ரூ.22.89 கோடியையும், நிர்வா கச் செலவினம், ஊதியம், எரி பொருள் செலவு, மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு, காப்பீட்டுச் செலவு, பயிற்சி, விளம்பரம் ஆகியவற்றுக் காக ரூ. 13.13 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை: பாமக

சென்னை, மே 6: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை என்று சட்டப் பேரவை பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல் லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக் கும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடிவதில்லை. நேர்முகத் தேர் வுக்கு செல்லும் மாணவர்களில் 35 சதவீ தம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை.மொத்தம் 70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தமிழக கல் லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு முதல் மூன்று ஆண்டு களில் வேலை கிடைப்பதில்லை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. பல்க லைக்கழகத்தில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைப் பதில்லை என்று சென்னை பல்கலைக்க ழக துணைவேந்தர் ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்துள்ளார்.எனவே தமிழகத்தில் உள்ள கல்லூ ரிகளையும், பல்கலைக்கழகங்களை யும் தரம் உயர்த்த வேண்டும்.

ஆந்திரா வைப்போல மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும். லாப நோக்கோடு செயல்ப டும் சுயநிதி கல்லூரிகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மை யினர் நடத்தும் கல்லூரிகளை ஆய்வு செய்ய வேண்டும். உயர் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை கண்டறிந்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது?

சென்னை, மே 6: இந்தி தெரியாமல் நடிகை ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பெ.சு. விஜயகு மார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதா வது:

இந்தி பாரத மொழி. ஆங்கிலம் பன்னாட்டு மொழி. தமிழகத் தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு தமிழும், ஆங்கிலமும் மட் டும் தெரிந்தால் போதாது. இந்தியும் தெரிய வேண்டும்.இந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். இந்தி என்ன வேம்பா? கசப்பா? அது வும் நம் சகோதரர்கள் பேசும் மொழிதானே. எதிர்கால சமுதாயம் வளர இந்தி அவசியமானது.

ஹேமமாலினியிடம் தமிழில் பேசலாம். ஜெயப்பிரதாவி டம் பேச முடியுமா? அதனால் அனைவரும் இந்தி கற்க வேண் டும்.போக்குவரத்து, டாஸ்மாக், மணல் குவாரிகளை நடத்தும் அரசே அனைத்துக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த வேண்டும்.தனியார் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுக்கான இடத்துக்கு இப் போதே அட்வான்ஸ் புக்கிங் முடிந்து விட்டது. மதிய உணவு, ஹாஸ்டல் ஆகியவற்றை தனியார் கல்லூரிகள் கட்டாயமாக திணிக்கின்றன. இதனை அரசு தடை செய்ய வேண்டும் என்றார் விஜயகுமார்.

பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்

சென்னை, மே 5: கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகள் மூடப்ப டும் அபாய நிலையில் இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. செ.ம.வேலுச்சாமி குற்றம் சாட்டினார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்ப ரேஷன், தேசிய டெக்ஸ்டைல் கார்ப் பரேஷன் உள்பட கோவை மாவட் டத்தில் 3 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பஞ்சாலைகள் உள்ளன.அவற்றில் 30 சதவீத பஞ்சாலைகள் மூடக்கூடிய அபாய நிலையில் உள்ளன. செயற்கையாக ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு, கச்சாப் பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், வங்கி மானியம் கிடைக்காதது போன்றவற்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவை யில் பஞ்சாலைகள், பனியன் தொழிற் சாலைகள், விசைத் தறிகள், பம்பு செட் தொழிற்சாலைகள் போன் றவை நலிவடைந்து வருகின்றன.

2001-ல் ரூ.3,116 கோடியாக இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த வெளிப்புற கட்டமைப்பு, கல்விசார் கட்டமைப்பு, அறிவுத் திறன் கட்ட மைப்பு ஆகியவை உருவாக்கப்பட்ட தாலும் தமிழகம் அமைதிப் பூங்கா வாக இருந்ததாலும் மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தன.

சில குறிப்பிட்ட தொழில்களுக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் என் னென்ன சலுகைகள் வழங்கப்பட் டுள்ளன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். புதிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டதால் தேர் வுக்கு படிக்கும் மாணவர்கள் மின்சா ரம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.நவீன விசைத்தறிக்கான நாடா வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப் பட்டது. பல்லடத்தில் நவீன விசைத் தறி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சி யில் ரூ.4 கோடியே 87 லட்சம் ஒதுக் கப்பட்டது.திருப்பூர் பனியன் தொழிற்சாலை கள் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி செய் தன. மின் தட்டுப்பாடு, டாலர் வீழ்ச்சி, மானியம் இல்லாதது ஆகிய காரணங்களால் இப்போது ரூ.1,500 கோடிக்கு கூட ஏற்றுமதி செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய வளர்ச்சிக்கு புஷ் "அங்கீகாரம்'

சென்னை, மே 5: உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று புஷ் கூறிய கருத்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா அளித்த அங்கீகாரம் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று கூறியதன் மூலம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவின் வளர்ச்சிக்கு அங் கீகாரம் அளித்துள்ளார். ஒரு காலத்தில் அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும் என்பார்கள். இன்று இந்திய ரூபாய்க்கு சளி பிடித்தால் அமெரிக்க டாலருக்கு காய்ச்சல் வருகிறது.மதிய உணவு திட்டத்துக்கு நிதி இல்லையென்றால் பிச்சை எடுக்க வும் தயார் என்றார் காமராஜர்.அதுபோல தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக டாடா போன்ற தொழில் நிறுவனங்களிடம் முதல்வர் கருணாநிதி பிச்சை எடுக்கிறார்.

தினந்தோறும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. தொழில் துறையில் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்னையில் ரத்தக் களரி நடந்த சிங்குரூக்கு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான ஸ்வராஜ்பாலை மேற்கு வங்க அரசு அழைத்து வந்தது. ""விவசாயத்தி னால் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தொழிற்சாலைகள் அமைத்தால் தான் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா முன்னிலையில் ஸ்வராஜ் பால் பேசியிருக்கிறார்.

ஒரு காலத்தில் டாடா, பிர்லாவுக்கு நெருக்கமாக இருந்தால் ஏழைகள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இன்று டாடாவும், பிர்லாவும் நெருக்கமானவர்கள், அழைத்தால் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்றால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இன்று அர சியலாக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலை முடக்கப்பட்டதால் எதிர்காலத்தில் ஒரு ஜாம் ஷெட்பூர் உருவாகப் போகிறது என்ற கனவு கருவிலேயே கலைந்து விட்டது என்றார் .

நெசவாளர்களுக்கு நன்மை செய்தது யார்?

சென்னை, மே 5: நெசவாளர்களுக்கு எந்த அரசு நன்மை செய்தது என்பது தொடர்பாக அதிமுக -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம்:

கோ. அரி (அதிமுக):

பள்ளிப் பட்டு தொகுதியில் பட்டினிச் சாவு ஏற்படும் சூழ்நிலையில் விசைத்தறி நெசவாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்கு வந்தவர்களின் லாரி கவிழ்ந்து பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இன்று 200 சதவீதம் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் பெரும்பாலான கோரிக்கை கள் ஏற்கப்படவில்லை. அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்):

அதிமுக எம்.எல்.ஏ. பேசியதைக் கேட்டதும் எனக்கு "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்கும் அளவுக்குக் கொண்டு சென்றவர்களுக்கு இது பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. நெசவாளர்கள் இலவச மின்சா ரம் கேட்டு போராடியபோது அதிமுக அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. நெசவாளர் பிரச்னைக்காக நான்கைந்து முறை நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):

நெசவாளர்களின் பிரச்னை குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரி நடுநிலை யோடு கருத்துகளை எடுத்துக் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இ.எஸ்.எஸ். ராமன் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டி ஒரு புதிய பாணியைப் பின்பற்றுகிறார். விலைவாசி உயர்வுக்குக் காரணம் கேட்டால் ""உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து விட்டது'' என்கிறீர்கள். இப்போது விலைவாசி உயர்வுக்கு இந்தியாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

அமெரிக்க நாடாளுமன்றத் தில் இந்தக் கேள்வியை ஓ. பன்னீர் செல்வம் கேட்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

இங்கே கேள்வி கேட்டால் அதனை அமெ ரிக்காவுக்கு "புஷ்' பண்ணக் கூடாது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்:

பள்ளிப்பட்டில் சுமார் 7,500 விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பிரச்னை சமுகமாக முடிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை நெசவாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் இடம் இல்லை: காங்கிரஸ் புகார்

சென்னை, மே 5: எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் எமர்ஜென்சி கோட்டாவில்கூட இடம் கொடுக்கவில்லை என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் புகார் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து பேசியதாவது:

நாகர்கோயிலில் இருந்து சென்னை வர எமர்ஜென்சி கோட்டாவில் விண்ணப்பித்த நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் சட்டப் பேரவை உறுப்பினர்கள் விடுமுறை நாட்களில் தொகுதிக்குச் சென்று மக்கள் பணியாற்ற முடிவதில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி கோட்டாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன்:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் இது குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்த்தேன். அவரது கோரிக்கைகள் நியாயமானவை. பேரவையின் சார்பில் இப்பிரச்னை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

பார்வையாளர் மாடத்தில் முதல்வர் குடும்பம்

சென்னை, மே 5: சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதியின் சார்பில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கருணாநிதியின் சகோதரி மகன் அமிர்தம் உள் ளிட்டோரும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் ஆகியோரும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளைக் கவனித்தனர்.

ஸ்பிக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

சென்னை, மே 5: ஸ்பிக் உரத் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தனியாரிடம் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலையை பொதுத்துறை நிறுவனமாக தொடங்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக அதிகமான நிலம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண் டும். இதில் அரசின் கொள்கை என்ன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களை அனும திக்க முடியாது என்று ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வா கம் பகிரங்கமாக கூறியுள்ளது. இதனை அரசு அனுமதிப்பது ஏன்? மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாக இரும்பை மூலதனமாகக் கொண்டுள்ள 52,000 சிறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரும்பு விலை உயர்வால் கிரைண்டரின் உற்பத்தி செலவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

30 சதவீதம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளது. பஞ்சாலைகள் கடும் நெருக்கடியில் உள்ளன. பஞ்சு ஓர் அபூர்வ பொருளாக மாறியுள்ளது.அடுத்த ஆண்டுக்கான பருத்திக்கு இப்போதே விலைபேசி முடித்து விட்டார்கள் என்றார் பாலபாரதி.

ராமசாமி (கம்யூனிஸ்ட்):

நான்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நஞ்சை நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளனர். நிலத்தை கையகப்படுத்தும்போது நஞ்சை நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதரமாக இருந்த பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியர்கள் அதிகமாக உண்பவர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். இதனை பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட யாரும் கண்டிக்கவில்லை என்றார்.

ஞானதாஸ் (மதிமுக):

தமிழக அரசின் கவனம் தென்தமிழகத்தின் பக்கம் திரும்ப வேண்டும். பட்டாசு ஏற்றுமதியில் உள்ள தடைகளைப் போக்க வேண்டும். அச்சுத் தொழிலுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அச்சுத் தொழிலின் தலைநகராக சிவகாசியை மாற்ற வேண்டும். குடிசை தீப்பெட்டி தொழிலின் பிரச்னைகளை தீர்க்க உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்ற அரசு கொள்கையை வகுக்க வேண்டும். மதுரை திருமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை உடனே அமைக்க வேண்டும் என்றார்.

அமராவதி கால்வாயில் மே 10 முதல் 18 வரை தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை, மே 5: அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து அவர் தெரிவித்த விவரம்:

அமராவதி பிரதான கால் வாயில் ஆகஸ்டு 1 முதல் ஜன வரி 31 வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது ""கரும்பு காய்கிறது. தென்னைக்கு உயிர்த் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அமராவதி பிரதான கால்வாயில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும்'' என்று விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, அணையில் தண்ணீர் இருந்தால் தேவைப்படும்போது திறந்து விடலாம் என்றார். அதன்படி அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தினமும் 440 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக திராவிடக் கட்சியா?

சென்னை, மே 5: அதிமுக திராவிடக் கட்சியா? என்பது தொடர்பாக அதிமுக -திமுக உறுப்பினர் களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தக வல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் குறுக்கிட்டு பேச முயன்றார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், ""அவர்கள் உலகப் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது. அமருங்கள்'' என்றார். ஆனாலும் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் பேச வாய்ப்புக் கேட்க பேரவைத் தலைவர் வாய்ப்பு தந்தார். அப்போது பேசிய கலைராஜன், ""திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகப் பொருளாதாரமும் தெரியும். பேரவைத் தலைவர் கூறியது எங்கள் மனதை காயப்படுத்துகிறது'' என்றார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு ""அதிமுக திராவிடக் கட்சி அல்ல'' என்றார். அப்போது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, ""திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் அதிமுக'' என்றார்.

உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம்

சென்னை, மே 4: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் வீண்பழி சுமத்தி யுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.அமெரிக்கா போன்ற மேற் கத்திய நாடுகள் தங்களது விவசாய, பொருளாதாரக் கொள்கையை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது திணிக்கின்றன. அதன் விளைவாகத்தான் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவே பற்றாக்குறைக்கு காரணம்:

உற்பத்தி குறைவுதான் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். தொழில் துறையின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காற்றில் கார்பன்-டைஆக்ûஸடு அளவு அதிகரித் துள்ளது. இதனால் தட்ப வெப்ப நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள் ளது. இதனால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மண்ணின் தரத்தை குறைத்து நிலத்தை மலடாக்குகிறது. இதனாலும் உணவு உற்பத்தி குறைகிறது. இதற்கெல்லாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்கா மேற் கொண்ட விவசாய, பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

உலகம் முழுவ தும் 6-ல் ஒரு பங்கு மக்கள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர். இந்தியாவிலும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகின் 40 நாடுகளில் உணவு உற்பத்தியே இல்லை.அந்த நாடுகள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை நம்பியுள்ளன. இதை யெல்லாம் அமெரிக்க அதிபர் புஷ் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

ஹெக்டேருக்கு 20 டன்:

300 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு 20 டன் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்று 3 அல்லது 4 டன்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. நம் நாட்டுக்கென்று பாரம்பரியமான விவசாயக் கொள்கை உள்ளது.விவசாயம் என்பது நம் நாட்டில் தொழில் அல்ல. வாழ்க்கை முறை. நமது பாரம்பரியமான விவசாயக் கொள்கையைப் பின்பற்றி ஹைதராபாதில் ராஜீவ் பிரதாப் என்ற விவசாயி ஒரு மாமரத்தில் 40 ஆயிரம் மாங்கனிகளை உற்பத்தி செய்து சாதனை படைத் துள்ளார். நமது பாரம்பரிய விவசாய முறைகளை வேளாண் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிக ரிக்க முடியவில்லை.

ஆபத்தான விஷயம்:

உணவுப் பற்றாக்குறை மிக வும் ஆபத்தான விஷயம். ஜனநாயகத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் உணவுப் பற்றாக்குறை ஆபத்தை உண்டாக்கும். எனவே மத்திய அரசு தனது விவசாயக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.

பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மகளிர் இட ஒதுக்கீடு: திடீர் அறிவிப்பு? கருணாநிதி சூசகம்

சென்னை, மே 4: மகளிருக் கான இட ஒதுக்கீடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க.பிரமுகர் இல்ல திருமண விழாவில் அவர் பேசியது:

இன்னும் ஓரிரு நாளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்ற செய்தி வந்துள்ளது. பெண்கள் முன்னேற அவர்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அந்த ரகசியத்தை அறிந்து கனிமொழி அப்படி பேசினார் என்று நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.

33 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்று பெண்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கருணாநிதி பேசியிருப்பது பெண்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Sunday, May 4, 2008

இலவச ஆஸ்துமா சிகிச்சை

சென்னை, மே 3: உலக ஆஸ்துமா தினமான மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை இந்திய குழந்தை மருத்துவக் கழகத்தோடு இணைந்து இலவச ஆஸ்துமா பயிற்சி முகாமை நடத்துகிறது.

18 வயதுக்கு குறைவான, அடிக்கடி இருமல் அல்லது மூச்சுவிட கஷ்டப்படும் குழந்தைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். குழந்தைகள் நல மருத்துவத் துறையின் புறநோயாளிகள் பிரிவில் நடக்கும் இந்த முகாமில் அடிப்படை சோதனைகள் இலவச மாகச் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு:

98402 94333, 98431 43520, 94451 40200.

ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 882 பேருக்கு வேலை

சென்னை, மே 3: சென்னையை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியில் பொறியியல், கலை அறிவியல், எம்.சி.ஏ., பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் 882 மாணவ, மாணவிகள், இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம், காக்னிசென்ட், டாடா என்டர்பிரைசஸ், எல் அண்ட் டி, காரிடார், ஹூண்டாய், மகேந்திரா அண்டு மகேந்திரா, வேர்ல்டு பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ.ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர்.

அமராவதி கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை: துரைமுருகன்

சென்னை, மே 3: முதல்வர் கருணாநிதியிடம் பேசி அமராவதி ஆற்றின் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவ டிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமராவதி பிரதான கால்வாயில் விவசாயத்துக்காக ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கரும்பு அறுவடை நடைபெறுவதாலும், தென்னை மரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதாலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோவையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் துரைமுருகனிடம் வலியுறுத்தினார். சென்னை திரும்பியதும் முதல்வர் கருணாநிதியிடம் பேசி ஒரு சிறப்பு உத்தரவு மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் துரைமுருகன் தெரிவித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யானைப் பசிக்கு சோளப் பொரி'

சென்னை, மே 3: ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்ப்பது என்ற அரசின் முடிவு யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தி லிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்த்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆகும் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 385 பேருக்காவது அரசு செலவில் தரமான பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற அளவில் இந்த அறிவிப்பை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். ஆனால் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது.

இப்படிச் சொல்வதால் துணை நிற்க வேண்டியவர் விசை ஒடிந்தி டச் செய்யலாமா? என்ற கேள்விக் கணை என் மீது வீசப்படும். இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.

தேட வேண்டியுள்ளது:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு நிர்வாகத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுபோல ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான போட்டித் தேர்விலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்களில் 10 சதவீதம் பேர் கூட தமிழக மாணவர்கள் இல்லை.சமுதாயத்தில் பெருவாரியாக உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பெரும் செலவு செய்து தகுதியும் திறமையும் வளர்த்துக் கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.

ஆந்திரத்தை முந்த வேண்டும்:

எனவே தமிழக மாணவர்களை கைதூக்கிவிட அரசாங்கமே மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். பக்கத்து மாநிலமான ஆந் திரத்தில் மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை 30 ஆண்டுகளாக அந்த மாநில அரசு நடத்தி வருகிறது. இதனால் ஆதிதிராவிட, பழங்கு டியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்து தகுதியை வளர்த்து வருகிறார்கள். இதனால் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறு கின்றனர்.

இப்போதைய அறிவிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டத்துக்கு ஒரு உறைவிடப் பள்ளியை தொடங்க அரசு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு மாவட்டம் தோறும் அதிக எண்ணிக்கையில் உறைவிடப் பள்ளியை திறந்து ஆந்திரத்தை தமிழகம் முந்த வேண்டும். அப்போதுதான் அகில இந்திய போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற முடியும். தமிழகம் இழந்து வரும் பெருமையை நிலைநிறுத்த முடியும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சியைத் தடுத்தது யார்?

சென்னை, மே 3: தொழில் வளர்ச்சியைத் தடுத்தது யார்? என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி -பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பின்தங்கிய மாவட்டமான தூத்துக்குடியில் டைட்டானியம் தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டபோது, ராமதாஸ் அங்கு சென்று, ""ஒரு சென்ட் நிலத்தைக்கூட கொடுக்க விடமாட்டேன்'' என்ற போராட்டம் நடத்தினார். அப்போது பின்தங்கிய மாவட்டம் (தூத்துக்குடி) என்பது நினைவுக்கு வரவில்லையா? டைட்டானியம் தொழிற்சாலை தொடங்கப்படாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட்டதே? ஓசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்தபோதும் ராமதாஸ் அதனை எதிர்த்தார். அதையெல் லாம் அந்த இளைஞர் கள் நினைக்காமலா இருப்பார்கள்? தொழில் தொடங்க முன் வந்தது யார்? அதைத் தடுத்தது யார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

மற்ற மாநிலங்களுக்கு...:

ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முத லீடு செய்கிறவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் தொழில் தொடங்க விரும்புகின்றனர். நாம் சென்னையில் அனுமதி கொடுக்காவிட்டால் ஆந்திரம், கர் நாடக மாநிலங்களுக்குப் போய்விடுவார்கள். அந்த மாநிலங்கள் பல சலுகைகளை அளித்து அவர்களை வர வேற்கத் தயாராக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப மையங்களை கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூரில் தொடங்க திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

ஹைதராபாத், பெங் களூரில் உள்ளதுபோல கிரீன்பீல்டு விமானதளத்தை சென்னையில் ஏன் அமைக்கவில்லை என்று ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு முயற்சி செய்தபோது ராமதாஸ் போன்றவர்கள், ""விரிவாக்கம் தேவை என்றாலும் அதற்காக இடத்தை எடுக்கக் கூடாது'' என்று போராட்டம் நடத்தினார்கள். ஏப்ரல் 26-ம் தேதி மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அடிக் கல் நாட்டப்பட்டது. அப்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி மத்திய அரசுடன் பேசி னேன். வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

விந்தையாக உள்ளது:

சென்னை எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும், துறைமுகமும் அமைக்க ""எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு பெருமளவில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது விந்தையாக உள்ளது.""எல் அண்ட் டி' நிறுவனமும் வெளி மாநில நிறுவனம்தான். இது போன்ற சிலவற்றை மட்டும் ஆதரிக்கும் ராமதாஸ் மற்றவர்களை மட்டும் எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசு எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொழில் தொடங்க அனுமதி வழங்கி வருகி றது.

பெரிய தொழிற்சாலைகள் வந்தால் அங்கு பணியாற்றுபவர்களுக்கு வசதிகள், குடியிருப்புகள் வரத் தானே செய்யும். மிகப்பெரிய நிறுவ னங்கள் தாங்களாகவே எல்லாவற்றையும் கட்டிக் கொள்வார்கள். நடுத்தரமான தொழிற்சாலைகள் தொடங்கும்போது திட்டமிட்டு கட்டடங்களைக் கட்ட தாமதமாக லாம். அதனால் அவர்களின் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டடத்தை கட்டித் தருகிறது. அதே போல பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் அந்த தொழிற்சாலைக்கு அருகில் கட்டித்தரும் பணியிலும் டி.எல்.எப். நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நல்ல யோசனை:

அரசு நிலங்களைக் கொடுக்கும்போது அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது, சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று ராமதாஸ் ஒரு நல்ல யோசனையை தெரிவித்துள்ளார். 2011-ல் பாமக ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேற்றப்பட்டு அந்தப் பெருமை ராமதாஸýக்கே கிடைக்கட்டும். அரசு நிலங்களைத்தான் பட்டாக்கள் என்ற பெயரில் ஏழை விவசாயிகளுக்கும், நிலமற்றவர்களுக்கும் வழங்குகிறோம். அது பற்றியெல்லாம் சட்டப் பேரவையில் விவாதித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எய்ட்ûஸ தடுப்பதில் ஆட்சியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்

சென்னை, மே 3: எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கான மண்டல மாநாட்டில், எச்.ஐ.வி.எய்ட்ஸ் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:

நாட்டை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்னை எய்ட்ஸ். இந்தியாவில் சுமார் 25 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.எய்ட்ஸ் நோயால் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். எய்ட்ஸ் ஒழிப்புக்கான திட்டங்களை மேம்படுத்துவது மாவட்ட ஆட்சியர்களின் முக்கிய பணியாகும். எய்ட்ஸ் வராமல் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் எய்ட்ஸ் நோய் திட்டங்களை செயல்ப டுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த ஆண்டு, ரூ. 5 கோடி செலவில் அறக்கட்டளை அமைக்கப்படும். மக்களிடம் சுகாதார விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் திரிபாதி.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு: எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக, பொருளாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதிலும், தடுப்பதிலும் தமிழகம் முன்னணி யில் உள்ளது. 760 நம்பிக்கை மையங்கள், 100 பாலியல் நோய் சிகிச்சை நிலை யங்கள், 26 கூட்டு சிகிச்சை மையங்கள் (ஏ.ஆர்.டி.) தமிழகத்தில் உள்ளன. இந்த ஏ.ஆர்.டி.மையங்களில் 70,000 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 40,000 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,800 பேர் குழந்தைகள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், வங்கிகளில் கடன் பெற்றுத் தருதல் போன்ற நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் அதிகமான மக்கள் தானாக முன்வந்து எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதுவரை 20 லட்சம் பேர் தாங்களாகவே முன்வந்து எச்.ஐ.வி. பரிசோதனை செய்துள்ளனர் என்றார். இந்த மாநாட்டில் 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநர் டாக்டர் தாமோதர் பச்சானி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள்

சென்னை, மே 3: நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும், எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியும், அதில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பது பற்றியும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி- பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தொழிற்சாலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றால் என்ன செய்வது? நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய்விடும்.

தமிழர்களுக்கே முன்னுரிமை:

தொழிற்சாலைக்கு அருகில் வசிக் கும் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைக ளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக ளில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டடங்கள் கட்டுதல், இயந்திரங்களை நிறுவுதல் என்ற நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. இது வரை 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுள்ளன.அதில் 6 நிறுவனங்கள் பணியைத் தொடங்கி விட்டன.

மோட்டரோலா, சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் நேர டியாக 11,324 பேருக்கும், மறைமுகமாக 22,000 பேருக்கும் ஒப்பந்தப்படி வேலை கிடைத்துள்ளது. தொழில்துறையில் நேரடியாக வும், மறைமுகமாகவும் 37,499 பேருக்கு வேலை கிடைத்துள் ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயி ரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

நோக்கியா நிறு வனம் தனது ஊழியர்களுக்காக 80 பஸ்களை இயக்குகிறது. இதிலிருந்து வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Thursday, May 1, 2008

போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல

சென்னை, மே 1: ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு சிறு பிரிவினர் அதிருப்தியின் கார ணமாக நடத்திய போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல ஹூண்டாய் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஹூண்டாய் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

"ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. ஹூண்டாய் தொழிற்சாலைக்கு அருகில் சிப்காட் டுக்கு சொந்தமான நிலத்தில், ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு குழுவினர் தொழிற்சங்க கொடியையும், சி.ஐ.டி.யூ. கொடியையும் நிறுவி உள்ளனர். ஏப்ரல் 29-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் இரு கொடிகளையும் சிப்காட் அதிகாரிகள் அகற்றினார்கள். ஆனால், ஏப்ரல் 30-ம் தேதி காலையில் வெளியாட்கள் சிலர் ஹூண்டாய் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு அலுவலகமும், வாகனங்களும், கம்ப்யூட்டர்களும் சேதமடைந்துள்ளன. ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் சிலரும் இந்தத் தாக்குத லில் காயமடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலும், ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆக்யோரிடம் புகார் கொடுத்தோம். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதிருப்தியின் காரணமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஹூண்டாய் நிர்வாகம் காரணமல்ல என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநருடன் கருணாநிதி திடீர் சந்திப்பு

சென்னை, மே 1: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி கிண்டி ஆளுநர் மாளிகை யில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். மாலை 6.50 மணியிலிருந்து 7.10 மணி வரை 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, க. பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த மாதம் இதய நோய் சிகிச் சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். ஆளுநர் வீடு திரும்பிய பிறகு முதன்முறையாக அவரை முதல்வர் சந்தித்துள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் விரைவில் சரி செய்யப்படும்

சென்னை, ஏப். 30: சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் களை சரி செய்யும் பணி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

டி. செங்குட்டுவன் (திமுக):

சென்னை மாநகரில் ஓடும் ஆட் டோக்களில் மீட்டர் சரிவர வேலை செய்யவில்லை என்று புகார் வருகிறது. இந்தப் பிரச் னையை சரி செய்ய அரசு முன்வ ருமா?

அமைச்சர் கே.என். நேரு:

சென்னை மாநகரில் ஓடும் 40,000 ஆட்டோக்களுக்கும் ஒன்பது நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை 6 பகுதிக ளாகப் பிரித்து மீட்டரை விற் பனை செய்த நிறுவனங்கள் மூலமே அதனை சரி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் பணி தொடங்கும்.

ஜெயபால் (காங்கிரஸ்):

கன்னி யாகுமரி மாவட்ட மீனவர்கள் வேலைக்காக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, எர்ணாகுளம் போன்ற இடங்களுக்குச் செல் கின்றனர். அவர்களுக்கு போது மான பஸ் வசதி இல்லை. எனவே, குளச்சலில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்க அரசு முன்வ ?

அமைச்சர் கே.என். நேரு:

கேரள மாநிலத்தில் தமிழகத்தை விட பஸ் கட்டணம் அதிகம். எனவே தமிழக பஸ்கள் கேரளத் துக்குள் வருவதை அந்த மாநில அரசு விரும்பவில்லை.

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு

சென்னை, ஏப். 30: அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சா மியை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டதைக் கண் டித்து தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிந டப்பு செய்தனர்.

பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், சட் டப் பேரவை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் வை. சிவ புண்ணியம் கொடுத்த கவன ஈர்ப்பு அறிவிப்பின் மீது அவர் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை பார்த்து ஏதோ கூறினார். ""தனது இருக் கையில் அமராமல் வேறு இருக் கையில் அமர்ந்து கொண்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்'' என்று அவரை பேரவைத் தலை வர் இரா. ஆவுடையப்பன் எச்சரித்தார்.

அப்போது செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை நோக்கி மீண்டும் ஏதோ கூறி னார். உடனே அவை நடவடிக் கைகளுக்கு இடையூறு செய்வ தாகக் கூறி வேலுச்சாமியை வெளியேற்ற பேரவைக் காவலர் களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். உடனே பத்துக்கும் மேற்பட்ட அவைக் காவலர்கள் செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்ற அவரது இருக்கையை நோக்கி விரைந்தனர். ஆனால் பேரவைக் காவலர்களை முன் னேற விடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தடுத்தனர். இதனால் அவையில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ""பேரவைத் தலைவர் ஓர் உறுப்பி னரை வெளியேற்ற உத்தரவிட்ட பிறகு, பேரவைக் காவலர்கள் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமா கும். எனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றுவது பற்றி பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

ஆனாலும் பேரவைக் காவலர்கள் வேலுச்சாமியை வெளி யேற்ற விடாமல் அதிமுகவினர் தடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் எழுந்து, ""இரண்டு தரப் பிலும் பிரச்னை எழுந்துள்ளது.ஓர் உறுப்பினரை வெளியேற்ற இத்தனை காவலர்களும், பெண் காவலர்களும் அணிவகுத்து வருவது சரியல்ல'' என்று பேச ஆரம்பிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து ஏதோ கூறினார்கள்.

செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்றுவது என்ற பேரவைத் தலைவரின் முடிவைக் கண் டித்து வெளிநடப்பு செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித் தார். அதனைத் தொடர்ந்து அதி முக எம்.எல்.ஏ.க்கள் அனைவ ரும் அவையை விட்டு வெளியே றினார்கள். அவர்களைத் தொடர்ந்து மதிமுக எம்.எல்.ஏ.க்களும் பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஓர் உறுப்பினரை வெளியேற்ற எத்தனை ஆண் காவலர்களை அனுப்புவது, பெண் காவலர்களை அனுப்பு வது என்பதெல்லாம் பேரவைத் தலைவரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது.' என்றார்.

வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

சென்னை, ஏப். 30: வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பை தளர்த்துவது பற்றி முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரி வித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பாமக எம்.எல்.ஏ.வேல்முருகன் இது குறித்து பேசியதாவது:

வேளாண் துறையில் காலி யாக உள்ள 1,707 பணியிடங் கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஏப்ரல் 25-ம் தேதி பேர வையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமு கம் அறிவித்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பணியிடங்கள் நிரப்பப் பட இருப்பதால் பல ஆண்டுக ளாக வேலை கிடைக்காமல் இருக்கும் வேளாண் பட்டதாரி கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வயது வரம்பை தளர்த்த அரசு நடவ டிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

பி.எஸ்ஸி (வேளா ண்மை) படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. டிப் ளமோ படித்தவர்களுக்கு வயது வரம்பு உண்டு. தற்போது வேளாண் அலுவலர் பணிக ளுக்கு வயது வரம்பை 10 ஆண் டுகள் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.10 ஆண்டுகள் இல்லாவிட்டா லும் வயது வரம்பை 35 -40 ஆக நிர்ணயிப்பது குறித்து முதல்வரி டம் கலந்து பேசி முடிவு எடுக் கப்படும்.

கார்களில் சிவப்பு விளக்கை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை, ஏப். 30: கார்களில் முறைகேடாக சிவப்பு விளக் கைப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் கே.என். நேரு எச்சரிக்கை விடுத் தார்.பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் இது குறித்து பேசியதாவது:

கார்களில் சிவப்பு விளக்கை யார் யார் பயன்படுத்தலாம்? மாவட்ட ஊராட்சித் தலைவர் கள் சிவப்பு விளக்கு பொருத்தப் பட்ட கார்களில் உலா வருகின்ற னர். சில நேரங்களில் சமூக விரோதிகள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தி செக் போஸ்ட்டில் தப்பிச் செல்வதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு:

கவர் னர், முதல்வர், பேரவைத் தலை வர், மாநகராட்சி மேயர்கள், அமைச்சர்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், டி.ஜி.பி., மாநகர காவல்துறை ஆணையர் கள், ஆம்புலன்ஸ்கள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வாகனங்கள், மாவட்ட ஆட்சி யர்கள், எஸ்.பி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாநில தேர்தல் ஆணையர், டி.என்.பி.எஸ்.சி.சேர்மன், சட்டம், ஒழுங்கு ஐ.ஜி.சென்னை, சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. மதுரை, வாரியத் தலைவர் கள் மற்றும் ஆலோசகர்கள், ஆர்க்காடு நவாப் முகம்மது அலி ஆகியோர் மட்டுமே காரில் சிவப்பு விளக்கைப் பயன் படுத்தலாம்.இவர்களைத் தவிர மற்றவர் கள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார் கே.என். நேரு.

பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

சென்னை, ஏப். 30: ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியதாவது:

வியாழக்கிழமை மே தினம். இந்த நேரத்தில் ஸ்ரீபெரும்பு தூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வாசலில் நிறுவப்பட் டிருந்த தொழிற்சங்க கொடி மரமும், சி.ஐ.டி.யு. கொடி மர மும் செவ்வாய்க்கிழமை இரவு ஹூண்டாய் ஆலை நிர்வா கத்தால் உடைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் அளித்த புகாரை ஸ்ரீபெ ரும்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்ய மறுத் துள்ளனர். இதனை ஏற்காத தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் மீது காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் உள் பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண் டும். கொடி மரத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:


எந்த முதலாளிக்கும் ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சங்க கொடியை ஏற்றியவர்கள், அது ஹூண்டாய் ஆலைக்கு சொந்தமான நிலம் என்று நினைத்து "சிப்காட்' நிலத்தில் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.இதனால் சிப்காட் நிர்வாகம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற விவரங்கள் அரசுக் குக் கிடைக்கவில்லை என்றார்.


அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்து அனைவரும் பேரவையை விட்டு வெளியேறினார்கள். பேரவைக்கு வெளியே செய்தியாளர்க ளிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், "ஹூண் டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல்து றையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.

பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு சென்னை, ஏப். 30: ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியதாவது:

வியாழக்கிழமை மே தினம். இந்த நேரத்தில் ஸ்ரீபெரும்பு தூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வாசலில் நிறுவப்பட் டிருந்த தொழிற்சங்க கொடி மரமும், சி.ஐ.டி.யு. கொடி மர மும் செவ்வாய்க்கிழமை இரவு ஹூண்டாய் ஆலை நிர்வா கத்தால் உடைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் அளித்த புகாரை ஸ்ரீபெ ரும்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்ய மறுத் துள்ளனர். இதனை ஏற்காத தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் மீது காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் உள் பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண் டும். கொடி மரத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

எந்த முதலாளிக்கும் ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சங்க கொடியை ஏற்றியவர்கள், அது ஹூண்டாய் ஆலைக்கு சொந்தமான நிலம் என்று நினைத்து "சிப்காட்' நிலத்தில் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.இதனால் சிப்காட் நிர்வாகம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற விவரங்கள் அரசுக் குக் கிடைக்கவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்து அனைவரும் பேரவையை விட்டு வெளியேறினார்கள். பேரவைக்கு வெளியே செய்தியாளர்க ளிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், "ஹூண் டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல்து றையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.

வெலிங்டன் ஏரி: உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல்

சென்னை, ஏப். 30: வெலிங்டன் ஏரியை பழுதுபார்ப்பது சம்பந்த மாக ஆராய காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது அறிக்கையை புதன்கி ழமை அரசுக்கு அளித்துள்ளது.வெலிங்டன் ஏரி கட்டப்பட் டதிலிருந்து செப்பனிடாததால் முழுக் கொள்ளளவும் நீர் தேங்கா மல் இருந்தது. அதனால் வெலிங் டன் ஏரியின் 11,200 ஹெக்டேர் பாசனப் பரப்பு பயன் அடையா மல் இருந்தது.

இதற்கு நிரந்தர தீர்வு காண கடந்த 2007-ம் ஆண்டு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு வெலிங்டன் ஏரியை செப்பனிட தொழில் நுட்ப ஆலோசனைகளை அளித் துள்ளது.குழுவின் அறிக்கையை அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் புதன்கிழமை வழங்கினார்.

இந்த ஏரி செப்பனிடப்பட் டால் திட்டக்குடி மற்றும் விருத் தாச்சலம் பகுதிகளில் உள்ள 11,200 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.உயர்நிலைக் குழுவின் அறிக் கையை பரிசீலித்து உடனடியாக மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, April 30, 2008

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி: பேரவையில் பாராட்டு

சென்னை, ஏப். 29: 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண் ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு சட்டப் பேரவை யில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதா வது:

இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி9 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உலக சாதனைப் படைத்துள்ளனர்.இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் விஞ்ஞானிக ளுக்கு முதல்வர் சார்பிலும், எனது சார்பிலும், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அனைத் துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

முதல்வர் மீதான உரிமை மீறல் ஆய்வில் உள்ளது: ஆவுடையப்பன்

சென்னை, ஏப். 29: முதல்வர் மீது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் கொடுத்துள்ள உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் மீது உரிமை மீறல் கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.செங்கோட்டையன் கொடுத்த உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலை வர் தெரிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடை பெற்ற விவாதம் குறித்து வெளியில் அறிக்கை விட்டத தற்காக செங்கோட்டையன் மீது அமைச்சர் துரைமுரு கன், திங்கள்கிழமை (ஏப். 28) உரிமை மீறல் கொண்டு வந்தார்.அதனை ஏற்று செங்கோட்டையன் மீதான பிரச் னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப பேரவைத் தலைவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் திருப்பணி: நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும்

சென்னை, ஏப். 29: கோயில்களில் திருப்பணி செய்வதற்குத் தேவை யான நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பெரியகருப்பன் வேண்டு கோள் விடுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

டாக்டர் க. நெடுஞ்செழியன் (பாமக):

நாமக்கல் மாவட்டம் பர மத்தி ஊராட்சி ஒன்றியம் குன்ன மலை வல்லீஸ்வரர் ஆலயம் 13-ம் நூற்றாண்டில் வல்வில் ஓரியால் கட்டப்பட்ட பழமையான கோயி லாகும். எனவே அங்கு திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

பழமையும், தொன் மையும் வாய்ந்த குன்னமலை வல் லீஸ்வரர் கோயில் 300 அடி உயர மலைக் குன்றின் மேல் உள்ளது. இந் தக் கோயிலுக்கு சொந்தமாக நிலங் கள் எதுவும் இல்லை. இந்தக் கோயிலில் உண்டியலும் வைக்கப் படவில்லை. மலையில் படிக்கட்டு கள் கட்டி திருப்பணி செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரு மளவில் நிதி திரட்ட உறுப்பினர் உதவி செய்தால் விரைவாக திருப் பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ராஜேந்திரன் (திமுக):

சேலம் அயோத்தியாபட்டினத்தில் திரு மலை நாயக்கரால் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் உள் ளது. இந்தக் கோயிலில் திருப்பணி செய்ய அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உரிய காலத்தில் திருப்பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள் ளார். எல்லாக் கோயில்களிலும் ஒரே நேரத்தில் திருப்பணி செய் வது சாத்தியமல்ல.அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். கோயில்களில் திருப்பணி செய்ய அரசு முழுமை யாக நிதி ஒதுக்குவதில்லை. திருப் பணிக்குத் தேவையான நிதியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையை உபயதாரர்களிடம் இருந்து உறுப்பினர்கள் வசூலித்து தந்தால் உடனடியாக திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

ஆறுமுகம் (பாமக):

விலை யேற்றம் காரணமாக திருத்தேர்கள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வரு வதில்லை. எனவே விலையேற்றத் துக்கு ஏற்ப மதிப்பீடு செய்து கூடு தல் நிதி வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் 250 திருத்தேர்கள் செய்யும் பணி நடந்து வருகிறது.தேர் செய்யும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவில்தான் இருக் கிறார்கள் என்பதாலும், விலை யேற்றம் காரணமாகவும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நியாயமான தொகை அவர்களுக்கு வழங்கப்ப டும்.

டி.யசோதா (காங்கிரஸ்):

தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் கோயில் கட்ட அரசு ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது. இது வரை எத்தனைக் கோயில்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள் ளது?

அமைச்சர் பெரியகருப்பன்:

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 16 ஆயிரம் கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயி ரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

பத்திரப் பதிவு அமைச்சர் தகவலுக்கு ஆதாரத்துடன் மார்க்சிஸ்ட் மறுப்பு

சென்னை, ஏப். 29: பத்திர பதிவுக் கான நிலத்தின் மதிப்பு உயர்ந்துள் ளது சம்பந்தமாக பத்திரப் பதிவு அமைச்சர் அளித்த பதிலை சட் டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சி.கோவிந்தசாமி ஆதாரத்துடன் மறுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும் சி. கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு அறிவிப்புக்கு பதில் அளித்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசிய தாவது:

பத்திரப் பதிவுத் துறையில் வழி காட்டி மதிப்புகள் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை கிராமப் புறங்க ளுக்கும், ஆண்டுதோறும் நகர்பு றங்களுக்கும் திருத்தி அமைக்கப் பட்டு வந்தன. ஆனால் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வழிகாட்டி மதிப்புகள் திருத்தி அமைக்கப்படவில்லை.

இதனால் வழிகாட்டி மதிப்பு கள் வெளிச்சந்தையில் நிலவும் மதிப்பினை பிரதிபலிக்காமல், ஒரு சில நிலங்களுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் நிர்ண யம் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.வெளிச்சந்தையில் நிலவும் மதிப் பிற்கு ஏற்றவாறு அறிவியல் ரீதி யாக வழிகாட்டி மதிப்புகளை திருத்தி அமைக்க, மைய மதிப்பீட் டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழு ஆகியவை 2005-ம் ஆண்டு மே 8-ம் தேதி அமைக்கப்பட்டன.

அதன்படி நிர்ணயம் செய்யப் பட்ட மதிப்புகள் பதிவுத் துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகங்களிலும் பார் வைக்கு வைக்கப்பட்டன.2007-ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் நடைமு றைக்கு வந்தன.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மதிப்புகள், கிராமங்களைப் பொறுத்தவரை 1-4-2003 வழி காட்டி மதிப்பிலிருந்து சராசரி யாக 91.68 சதவீதமும், நகர்புறங்க ளைப் பொறுத்தவரை 80.79 சதவீ தம் மட்டுமே உயர்ந்துள்ளன. அந் தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற வாறு சரியான மதிப்புகள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் பாதிப்படையும் வகையில் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்ப டவில்லை.அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் இந்த மதிப்புகளை ஆராய்ந்து அங்கீகா ரம் செய்துள்ள நிலையில் குறை பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.குறைகள் இருப்பதாக பொதுமக்க ளிடம் இருந்து முறையீடுகள் வந் தால் அவை மாவட்ட குழுவில் வைத்து சரிசெய்ய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுரேஷ் ராஜன்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவலகம் 1-க்குப்பட்ட நெரிபெ ரிச்சல் ஊராட்சியில் பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு 2003-ம் ஆண்டு ரூ. 1,31,000 ஆக இருந்தது.தற்போது திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்புகளின் படி நிலத்தின் மதிப்பு ரூ. 69,32,400 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,292 சதவீதம் பத்திரப் பதிவுக் கான நில மதிப்பு உயர்ந்துள்ளது.

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவ லகம் 2-க்குட்பட்ட 15. வேலம்பா ளையம் மூன்றாம் நிலை நகராட்சி யில் 2003-ம் ஆண்டு பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ. 1,84,000 ஆக இருந்தது. திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்பின்படி நிலத்தின் மதிப்பு ரூ. 65 லட்சமாக அதாவது 3,554 சதவீதம் உயர்ந் துள்ளது.

இதனால் ஏழை மக்கள் 4 சென்ட் நிலம் வாங்கினால்கூட ரூ. 70,000 வரை பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக நிலத்தின் மதிப்பை அதிகமாக பதிவு செய்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பத்திரப் பதிவு கட்டணம் அதிகமாகி உள்ளது. இதனை எதிர்த்து அப் பீல் செய்தாலும் 5 சதவீதம் மட் டுமே குறைக்கப்படுகிறது. சுமார் 5,000 சதவீதம் உயர்ந்துள்ளபோது 5 சதவீதம் குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எனவே அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் கோவிந்தசாமி

செந்தில் பாலாஜி (அதிமுக):

கரூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப் படு வதில்லை. இடைப்பட்ட காலத் தில் பதிவு செய்யப்பட்ட கட்ட ணங்களே இப்போதும் நடைமு றையில் உள்ளது.

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

திருத்தி அமைக்கப்பட்ட வழி காட்டி மதிப்பின்படிதான் பத்தி ரப் பதிவு நடைபெற்று வருகிறது.ஆனாலும் உறுப்பினர் தெரிவித்த தகவல் குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு குடியரசில் வேலை

சென்னை, ஏப். 29: ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், ஐக் கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பா னிய நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித் துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவம் பெற்ற பைப் பிட்டர் கள், ஏர் கண்டிசன் பைப்பினை பொருத்த அனுபவம் பெற்ற பிட்டர்கள், ஏர் கண்டி சன் மற்றும் டக் இன்சுலேஷன் பிரிவில் அனுபவம் பெற்ற இன்சுலேட்டர்கள், டிப் ளமோ தேர்ச்சி பெற்று எச்.வி.ஏ.சி. பைப் லைன் மற்றும் டக்ட் இன்சுலேஷன் பிரி வில் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டு நிறுவனத்துக்கு உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச விமா னப் பயணச் சீட்டு மற்றும் இதர சலுகை கள் வழங்கப்படும்.இந்தப் பணிகளுக்கு தகுதி பெற்றவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் மே 2 மற்றும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அடை யாறில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேர்முக தேர் வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

மேலும் விவரங்களுக்கு: 044 2446 4268, 2446 4269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் 21 வாரிசுகளுக்கு வேலை

சென்னை, ஏப். 29: கருணை அடிப்படையில் பால்வளத் துறை மற்றும் ஆவின் நிறு வன ஊழியர்களின் 21 வாரி சுகளுக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது.இது குறித்து செவ்வாய்க் கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால்வளத் துறை ஊழி யர்களின் 9 வாரிசுகளுக்கும், ஆவின் நிறுவன ஊழியர்க ளின் 12 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை அவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அவர்களில் இளநிலை உதவியாளர்களாக நான்கு பேரும், கால அளவை மஸ் தூர்களாக 5 பேரும், ஆவின் சென்னை நிறுவ னத்தில் தொழிற்சாலை உத வியாளர்களாக 12 பேரும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.

பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயர், பால்வள மேம்பாட்டு ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை

சென்னை, ஏப். 28: முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்றும் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை என்று முதல்வர் கரு ணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.""கொடநாடு எஸ்டேட்டில் எவ்வளவு சம்ப ளம் என்று கேட்கும் கோவை தங்கம், கருணா நிதியின் குடும்பத்தினர் வாங்கியுள்ள எஸ் டேட்டுகள் பற்றி கேட்பாரா?'' என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங் கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் சட்டப் பேர வையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவையிலோ, அறிக்கையிலோ விளக்கம ளிக்க வேண்டிய செங்கோட்டையன் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத் துள்ளார். அவருக்கு நான் பதிலளிக்க விரும் பவில்லை.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட் டையன் மீது 1996-ம் ஆண்டு ஊழல் வழக்கு கள் குவிந்தன. அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடல் கொள்ளையர் போல்...:

""முன் னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோ டியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல் இருந்திருக்கக் கூடாது. பஸ்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் செங்கோட்டையன் பெருமள வில் ஊழல் செய்திருப்பதாக ஊழல் ஒழிப் புத் துறையினர் கூறியுள்ளனர். அவர் வாங் கிய சொத்துகளுக்காக முத்திரைக் கட்ட ணம் மட்டும் ரூ. 2.5 கோடி கட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. உயர் பதவியில் உள் ளவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்கா மல் போய்விட்டது. இதனால் சமூக முன் னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதி ராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நீதிமன்றங்கள் தடுக்கக் கூடாது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப் பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது'' என்று நீதிபதி சிவப்பா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த வழக்குகள் அதிமுக ஆட் சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப் புகள் வேறுவிதமாக வந்த போதிலும் நீதிபதி சிவப்பாவால் இந்த அளவுக்கு பாராட்டு பெற் றவர்தான் செங்கோட்டையன். அப்படிப்பட் டவர், நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்ப தைப் போல அறிக்கை விடுத்துள் ளார். முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்னமும் நான் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்க வில்லை என்று கருணாநிதி கூறி யுள்ளார்.

அரசு விழா அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏக்கள் பெயர்

சென்னை, ஏப். 28: அரசு விழா அழைப்பிதழ்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று அ.தி.மு.க., ம.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டிய தால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மானி யக் கோரிக்கை மீதான விவாத் தில் பேசிய மதிமுக எம்.எல்.ஏ.வீர இளவரசன்,

""மார்ச் 26-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங் கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், விமான நிலைய விரிவாக்கம், தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட அந்த விழாவுக்கான அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ.வான எனது பெயர் இல்லை.இது குறித்து ஏப்ரல் 25-ம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கடி தம் கொடுத்திருந்தேன். அது கண்டு கொள்ளப்படவில்லை.இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. ஜனநாயகத் துக்கு இழைக்கப்பட்ட அவமா னம்'' என்றார்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

வேண்டும் என்றே அரசு அவ்வாறு செய்யவில்லை. அரசு விழாக்களில் சில நேரங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் கலந்து கொள்வ தில்லை. எம்.எல்.ஏ.க்கள் விரும் பினால் அவர்களின் அனுமதி பெற்று எதிர்காலத்தில் அழைப் பிதழில் பெயர் அச்சிடப்படும்.

அமைச்சர் எ.வ. வேலு:

அதி முக ஆட்சியில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசு விழா அழைப்பிதழில் இடம் பெற்றதே இல்லை. தற் போது அரசு விழா அழைப்பிதழ் களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்க ளின் பெயர்கள் அச்சிடப்படுகி றது.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுமே அழைப்பிதழில் பெயர் இடம் பெறும் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சொல்கி றார். எம்.எல்.ஏக்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றே விதிமுறைகளில் உள்ளது. விழா வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் எம்.எல்.ஏ.க்க ளின் உரிமை. விதிமுறைகளுக்கு மாறாக அமைச்சர் பேசக் கூடாது.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

விதிமுறைகளின்படிதான் எம்.எல்.ஏக்களின் பெயர்களை அழைப்பிதழில் போடுகிறோம்.ஆனால் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில்லை. அத னால் அரசுக்குதான் அவமானம் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவை யில் நான் கலந்து கொண்ட விழா வில் அழைப்பிதழில் பெயர் இருந்தும் அதிமுக எம்.எல்.ஏக் கள் கலந்து கொள்ளவில்லை.இனி அரசு விழா அழைப்பிதழ்க ளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்க ளின் பெயர் இடம்பெறும்.அவர்கள் கலந்து கொண்டா லும், இல்லாவிட்டாலும் எங்க ளுக்கு கவலை இல்லை.

வைகோவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை, ஏப். 28: சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் பிரதமருக்கு நான் கடி தம் எழுதியதை நிரூ பித்தால்.. என்று விடுத்த சவால் என்ன ஆனது என்று மதி முக பொதுச் செயலா ளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.இது குறித்து கேள்வி- பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடை பெறுவதாக வைகோ கூறியுள்ளார்.பொடா சட்டத்தில், வெளியே வரமுடி யாமல் அவர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார் அல்லவா? சிறையில் உள்ளவ ரைக்கூட நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளது அல்லவா? அதனால் "மினி எமர்ஜென்சி' என்று வைகோ சொல்லத் தான் செய்வார்.

சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதை நிரூபித்தால்... என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல் லுங்கள். பிறகு மெகா எமர்ஜென்சி, மினி எமர்ஜென்சி பற்றி பேசலாம்.விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக் கையின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சலுகை விலையில் சமையல் எண்ணெய் விற்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது.

2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரேஷன் கடைகள் மூலம் சமையல் எண் ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை, அரிசி போன்ற பொருள்களையும் சலுகை விலையில் வழங்கி வருகிறோம். சமீபத்தில் தலை மைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக ளுடன் நீண்ட நேரம் ஆலோசித்து விலைவாசியைக் குறைக்க சில நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.

உ.வே.சா. நினைவு இல்லம்: உ.வே.சா. நினைவு நாளான ஞாயிற்றுக் கிழமை திருவாரூர் மாவட்டம் உத்தமதா னபுரத்தில் அவரது நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை தனி மனிதராக இருந்து நிறைவாக செய்தவர் உ.வே.சாமி நாத அய்யர். அவர் முயற்சி செய்யாவிட் டால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.ஒருவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் அவர் செய்த நல்ல காரியங்களைப் போற்றக் கூடிய அரசு, திமுக அரசு என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.