சென்னை, மே 11: சென்னையில் நடைபெற்றுவரும் ரத்தினக் கண்காட்சியில் விநாயகர் சிற் பங்களை வெளிநாட்டினர் அதிகமாக வாங்கிச் செல்கின்ற னர்.சென்னை சேமியர்ஸ் சாலை யில் "சிருஷ்டி' என்ற தமிழ்நாடு கைவினைக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் விற்பனைக் கூடத் தில் ரத்தினக் களஞ்சியம் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட் சியில் நவரத்தினங்களான மாணிக்கம், பவளம், முத்து, மர கதம், கோமேதகம், வைடூரியம், புஷ்பராகம், வைரம், நீலம் ஆகி யவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உரு வாக்கப்பட்ட சிற்பங்கள் பார் வையாளர்களைக் கவர்ந்துள் ளன.நவரத்தினங்களைத் தவிர 90 வகையான உபரத்தினக் கற்கள் உள்ளன.அவற்றில் 30 வகை கற்களில் செய்யப்பட்ட விநாயகர், ராதா கிருஷ்ணன் போன்ற இந்துக் கடவுள்களின் சிற்பங்களும், நடன மங்கைகளின் சிற்பங்க ளும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரை:""நவரத்தினங்கள், பளிங்கு போன்ற 40 வகை கற்க ளில் கலைநயத்துடன் செய்யப் பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் ஒரே இடத்தில் சென்னையில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சிற்பங்கள் தவிர நேபாளத் தில் உள்ள கண்டகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட சாளக்கிராமம் என்னும் கற்கள், நர்மதை ஆற்றில் கண் டெடுக்கப்படும் நர்மதா பாணம் எனப்படும் சிவலிங்கம் ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன. ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன என்கிறார் இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சோமசுந் தரம்.
'
மாணிக்க யானை: நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கத்தில் செய்யப்பட்ட 9.5 கிலோ எடையுள்ள எட்டு அங்குல விநாயகர் சிலையின் விலை ரூ.1,45,000. அதுபோல பவளத்தில் செய்யப்பட்ட ஒன்றரை அங்குல அளவுள்ள விநாயகர் சிலை ரூ.99 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.