Monday, May 12, 2008

கார்த்திக் மீது நடவடிக்கையா?

சென்னை, மே 11: பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் தெரிவித்தார். பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கார்த்திக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 33 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு கார்த்திக் அனுப்பினார். அதில் அவரது ரசிகர் மன்றத்தினர் மட்டுமே இடம் பெற்றிருப்ப தாக புகார் எழுந்தது. இதனால் அந்தப் பட்டியலை கட்சி மேலிடம் திருப்பி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. கார்த்திக்கை கட்சியில் இருந்து நீக்க, பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.கட்சி அறிவித்த போராட்டங்களில் ஈடுபடாமல் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது ஏன்? தொண்டர்களை சந்திக்காமல் தனியாக செயல்படுவது ஏன்? என்று விளக்கம் கேட்கப்பட்டி ருப்பதாக கூறப்படுகிறது.

பிஸ்வாஸ் பதில்:

இது குறித்து "தினமணி' நிருபரிடம் பிஸ்வாஸ் தொலைபேசியில் கூறியதாவது: இது முற்றிலும் எங்களின் உட்கட்சி விவகாரம். வரும் மே மாதம் 17-ம் தேதி மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.அப்போது தமிழகம் தொடர்பான திட்டங்களும் விவாதிக்கப்படும்.

கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றியும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதா? என்பது பற்றியும் இப்போது எதுவும் கூற விரும்ப வில்லை என்றார்.

No comments: