Monday, April 14, 2008

"கலைஞர் களஞ்சியம்': கலிபோர்னியா பல்கலை. வெளியீடு

சென்னை, ஏப். 13: முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளின் தொகுப்பான "கலைஞர் களஞ்சியம்' என்ற நூலை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு மையத்தின் "தமிழ் பீடம்' வெளியிட்டுள்ளது. இந்த நூலை சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் கருணாநிதியிடம் வழங்குகிறார்.

அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) மாலை 5 மணிக்கு இதற்கான விழா நடைபெற இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments: