சென்னை, மே 3: சென்னையை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியில் பொறியியல், கலை அறிவியல், எம்.சி.ஏ., பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் 882 மாணவ, மாணவிகள், இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம், காக்னிசென்ட், டாடா என்டர்பிரைசஸ், எல் அண்ட் டி, காரிடார், ஹூண்டாய், மகேந்திரா அண்டு மகேந்திரா, வேர்ல்டு பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ.ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment