Sunday, May 4, 2008

அமராவதி கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை: துரைமுருகன்

சென்னை, மே 3: முதல்வர் கருணாநிதியிடம் பேசி அமராவதி ஆற்றின் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவ டிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமராவதி பிரதான கால்வாயில் விவசாயத்துக்காக ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கரும்பு அறுவடை நடைபெறுவதாலும், தென்னை மரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதாலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோவையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் துரைமுருகனிடம் வலியுறுத்தினார். சென்னை திரும்பியதும் முதல்வர் கருணாநிதியிடம் பேசி ஒரு சிறப்பு உத்தரவு மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் துரைமுருகன் தெரிவித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: