சென்னை, மே 3: நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும், எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியும், அதில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பது பற்றியும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி- பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தொழிற்சாலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றால் என்ன செய்வது? நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய்விடும்.
தமிழர்களுக்கே முன்னுரிமை:
தொழிற்சாலைக்கு அருகில் வசிக் கும் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைக ளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக ளில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டடங்கள் கட்டுதல், இயந்திரங்களை நிறுவுதல் என்ற நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. இது வரை 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுள்ளன.அதில் 6 நிறுவனங்கள் பணியைத் தொடங்கி விட்டன.
மோட்டரோலா, சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் நேர டியாக 11,324 பேருக்கும், மறைமுகமாக 22,000 பேருக்கும் ஒப்பந்தப்படி வேலை கிடைத்துள்ளது. தொழில்துறையில் நேரடியாக வும், மறைமுகமாகவும் 37,499 பேருக்கு வேலை கிடைத்துள் ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயி ரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
நோக்கியா நிறு வனம் தனது ஊழியர்களுக்காக 80 பஸ்களை இயக்குகிறது. இதிலிருந்து வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment