சென்னை, மே 3: ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்ப்பது என்ற அரசின் முடிவு யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தி லிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்த்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆகும் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 385 பேருக்காவது அரசு செலவில் தரமான பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற அளவில் இந்த அறிவிப்பை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். ஆனால் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது.
இப்படிச் சொல்வதால் துணை நிற்க வேண்டியவர் விசை ஒடிந்தி டச் செய்யலாமா? என்ற கேள்விக் கணை என் மீது வீசப்படும். இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.
தேட வேண்டியுள்ளது:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு நிர்வாகத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுபோல ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான போட்டித் தேர்விலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்களில் 10 சதவீதம் பேர் கூட தமிழக மாணவர்கள் இல்லை.சமுதாயத்தில் பெருவாரியாக உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பெரும் செலவு செய்து தகுதியும் திறமையும் வளர்த்துக் கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.
ஆந்திரத்தை முந்த வேண்டும்:
எனவே தமிழக மாணவர்களை கைதூக்கிவிட அரசாங்கமே மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். பக்கத்து மாநிலமான ஆந் திரத்தில் மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை 30 ஆண்டுகளாக அந்த மாநில அரசு நடத்தி வருகிறது. இதனால் ஆதிதிராவிட, பழங்கு டியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்து தகுதியை வளர்த்து வருகிறார்கள். இதனால் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறு கின்றனர்.
இப்போதைய அறிவிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டத்துக்கு ஒரு உறைவிடப் பள்ளியை தொடங்க அரசு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு மாவட்டம் தோறும் அதிக எண்ணிக்கையில் உறைவிடப் பள்ளியை திறந்து ஆந்திரத்தை தமிழகம் முந்த வேண்டும். அப்போதுதான் அகில இந்திய போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற முடியும். தமிழகம் இழந்து வரும் பெருமையை நிலைநிறுத்த முடியும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment