Sunday, April 6, 2008

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் சர்வதேச ரத்தினக் கண்காட்சி

சென்னை, ஏப். 6: அடுத்த ஆண்டு பிப்ர வரி 8 முதல் 10-ம் தேதி வரை, சென் னையில் சர்வதேச நகை மற்றும் ரத்தி னக் கண்காட்சி நடைபெற உள்ளது.சென்னை நகை, வைர வியாபாரிகள் சங்கமும், சி.எம்.பி. இந்தியா இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

நந்தம்பக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.சிஎம்பி இந்தியா நிறுவனம், சி.எம்.பி. ஆசியா குழுமத்தின் ஓர் அங் கமாகும். சி.எம்.பி. ஆசியா நிறுவனம் ஆண்டுக்கு 80 கண்காட்சிகளையும், சி.எம்.பி. குளோபல் நிறுவனம் ஆண் டுக்கு 300 கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.

No comments: