சென்னை, மே 1: ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு சிறு பிரிவினர் அதிருப்தியின் கார ணமாக நடத்திய போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல ஹூண்டாய் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஹூண்டாய் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
"ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. ஹூண்டாய் தொழிற்சாலைக்கு அருகில் சிப்காட் டுக்கு சொந்தமான நிலத்தில், ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒரு குழுவினர் தொழிற்சங்க கொடியையும், சி.ஐ.டி.யூ. கொடியையும் நிறுவி உள்ளனர். ஏப்ரல் 29-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் இரு கொடிகளையும் சிப்காட் அதிகாரிகள் அகற்றினார்கள். ஆனால், ஏப்ரல் 30-ம் தேதி காலையில் வெளியாட்கள் சிலர் ஹூண்டாய் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு அலுவலகமும், வாகனங்களும், கம்ப்யூட்டர்களும் சேதமடைந்துள்ளன. ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் சிலரும் இந்தத் தாக்குத லில் காயமடைந்தனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலும், ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆக்யோரிடம் புகார் கொடுத்தோம். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதிருப்தியின் காரணமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஹூண்டாய் நிர்வாகம் காரணமல்ல என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment