சென்னை, ஏப். 25: தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக் கப்படும் என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
அனிதா ராதாகிருஷ்ணன்:
தூத்துக்குடியில் உள்ள "ரோச்' பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் அமைக்கப்படுமா?
அமைச்சர் சுரேஷ் ராஜன்:
தூத் தக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக்கப்படும்.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (அதிமுக):
திருச்செந்தூர் புராதனமான நகரம். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க முருகன் கோயில் அங்கு உள்ளது. நாழிக் கிணறு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் இடம். 30 மசூதிகளைக் கொண்ட காயல் மாநகர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. புனித சவேரியார் வந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை வளர்த்த மணப்பாடு என்ற ஊரும் அருகில் உள்ளது. எனவே திருச்செந்தூரை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் சுரேஷ் ராஜன்:
சுற்றுலாத்துறை எந்த இடத்தையும் சுற்றுலாத் தலமாக அறிவிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஏற்கனவே திருச்செந்தூரில் சுற்றுலாத் துறை சார்பில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment