Wednesday, April 16, 2008

இந்த ஆண்டு 25,495 வீடுகள் கட்டப்படும்

சென்னை, ஏப். 15: இந்த நிதி ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 25,495 வீடுகள் கட்டப்படும் என்று குடிசை மாற்று வாரியத்துறை அமைச் சர் சுப. தங்கவேலன் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை குடிசை மாற்றுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

இதுவரை குடிசை மாற்று வாரியத் தின் மூலம் 1.20 லட்சம் வீடுகள் கட்டப் பட்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில் 12,877 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு நிதி யாண்டில் 25,495 வீடுகள் கட்டப்படும்.

சுனாமி வீடுகள்:

ராஜீவ் காந்தி சுனாமி புனரமைப்புத் திட்டத்தின் மூலம் கட லோர மாவட்டங்களில் 200 மீட்டர் தொலைவிற்குள் சுனாமியால் பாதிக்கப் படக்கூடிய இடங்களில வசிக் கும் மக்களுக்கு வீடுகள் கட்டித் தர முடிவு செய் யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத் தின் கீழ் 221 வீடுக ளுக்கான கட்டு மானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் 512 வீடுகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள் ளன.

இதுதவிர தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ரூ. 198.03 கோடி செலவில் கூடு தலாக 5,658 வீடுகள் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 6,391 வீடுகள் ரூ.223.69 கோடி செலவில் கட்டப்படும்.

2013-க்குள் 35,270 வீடுகள்:

ஜவா ஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 2013-க்குள் ரூ. 1,208.55 கோடி செலவில் 35,270 வீடு கள் கட்டி முடிக்கப்படும்.பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் பற்றி ஆராய வல்லுநர் குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 6,544 அடுக் குமாடி குடியிருப்புகளை இடித்து மீண் டும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.சுனாமி மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் சென்னை நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள பகுதிகளில் 2,862 குடியிருப்புகளும், வேறு திட்டத் தின் கீழ் வியாசர்பாடியில் உள்ள 270 குடி யிருப்புகளும், குப்பைமேடு பகுதியில் 16 குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு மீண் டும் கட்டப்படும்.

சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மொத்தம் 9,692 பழுதடைந்த வீடு கள் இடிக்கப்பட்டு ரூ. 263.77 கோடி செலவில் மீண்டும் கட்ட, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது என்றார் தங்கவேலன்.

No comments: