Wednesday, April 16, 2008

நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

சென்னை, ஏப். 15: தொலை பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை பேரவை கூடியதும் இந்தப் பிரச்னையை அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எழுப் பின. அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு பிரச்னை பற்றி பேசியிருக்கிறார். நான் அதற்கு விளக்கம் சொல்வதற்குள் கூச்சல் போட்டுக் கொண்டு வெளியேறினால் அந்த விளக்கம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அர்த்தமல்ல.அந்த விளக்கம் கிடைத்தால் உண்மைகள் வெளியாகும் என்ற காரணத்தால்தான் அவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே றியதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே...:

இதே போன்ற செய்தி இதே பத்திரிகையில் ஏற்கெனவே வந்துள்ளது. அதுபற்றி ஜி.கே. மணி பேரவையில் பிரச்னையை எழுப்பினார்.தலைமைச் செயலாளர், மற்றொரு அதிகாரியுடன் ஒரு வழக்கு குறித்து பேசியது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று நாம் பார்க்க வேண்டும்.

தேசிய நலனுக்கு விரோதமாகவோ, எதிர்க்கட்சிகளின் உரிமைகளை நசுக்க திட்டமிட்டு வழக்கு போடுவது சம்பந்தமாகவோ, சட்டத்துக்கு விரோதமாகவோ, நாம் போற்றிப் பாதுகாக்கின்ற நெறிமுறைகளுக்கு விரோதமாகவோ இருவரும் பேசிக் கொள்ள வில்லை. அப்படி எதுவும் அந்த உரையாடலில் இல்லை.

யார் வேண்டுமானாலும் டேப் செய்ய முடியும்:

ஆனால் தலைமைச் செயலாளரின் தொலை பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று ஒரு செய்தியை வெளியிட அந்தப் பத்திரிகைக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேகமான விஞ்ஞான வளர்ச்சி யில் யார் வேண்டுமானாலும், எந்த போனில் வேண்டுமானா லும் "டேப்' செய்ய முடியும். செல்போனில் கூட டேப் செய்கிற முறை வந்திருக்கிறது.தலைமைச் செயலாளருக்கும், இன்னொரு அதிகாரிக்கும் இடையே நடந்ததாக வந்துள்ள தொலைபேசி உரையாடல் எப்படி பத்திரிகையில் வந்தது? யார் தந்தது? என்பதை உங்ளைப் போலவே நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

தலைமைச் செயலாளரும், அந்த அதிகாரியும் பேசியது இவைதான் என்றால் அதில் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. இருந்தாலும் இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இந்தப் பிரச்னையில் மிகுந்த எச் சரிக்கை உணர்வோடு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி. சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, சிவபுண்ணி யம் ஆகியோர் கூறியிருக்கிறார் கள்.ஏதோ அரசாங்கமே தூண்டி விட்டு ஒட்டுக் கேட்டிருப்பதைப் போல ஞானசேகரன் பேசியிருக்கிறார். அது அவரது பாணி. அதற்காக நான் கவலைப்படவில்லை.

விஞ்ஞானம் இன்று மலிவானதாக மட்டுமல்ல எளிமையானதாகவும் இருக்கிறது. என் வீட்டில் என்னால் கையாள முடியாத, சரி செய்ய முடியாத டி.வி.யை 10 வய துக்கும் குறைவான எனது பேரன் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுகிறான். அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. இதையெல்லாம் படித்து, தேர்ச்சி பெற்றுதான் ஒட்டுக் கேட்க வேண்டும் என்பதில்லை.

ஒரு பைத்தியக்காரன்கூட இதை செய்ய முடியும். பேசக்கூடாததை தலைமைச் செயலர் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் பேசி அது வெளிவந்தி ருந்தால் அது தவறு. அதற்காக நாம் தலைகுனிய வேண்டும். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடந்தது நிர்வாகப் பணி பற்றி உரையாடல்தான் என்றார் முதல்வர்.

No comments: