சென்னை, ஏப். 14: ராகுல் காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். "மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் சிங்கும், பிரபுல் பட்டேலும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் ராகுல் காந்தி என்று கூறியிருக்கிறார்கள்.
ராகுல் காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்னையில் "கிரீமி லேயர்' குறித்து மறு பரிசீலனை செய்ய பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ள திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் இட ஒதுக்கீடு பிரச்னை பற்றி விரிவாகப் பேச இருக்கிறோம் என்றார் முதல் வர் கருணாநிதி.
No comments:
Post a Comment