Wednesday, April 16, 2008

சிறைத் துறை பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

பேரவையில் செவ்வாய்க்கிழமை வருவாய், வீட்டுவசதி, சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து ஐ. பெரியசாமி பேசியதாவது:

சிறைத் துறை பணியாளர்களுக்கு ரூ. 16.36 லட்சம் செலவில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும். ரூ. 6.80 லட்சம் செலவில் மதுரை மத்திய சிறைக்குப் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்படும். நாகர்கோவில், திண்டுக்கல் மாவட்ட சிறைகளுக்கு ரூ. 9.48 லட்சம் செலவில் இரண்டு ஜீப்புகள் வழங்கப்படும்.

சிறைவாசிகள் பயனுள்ள முறையில் நேரத்தை செலவிட. சுயமாக சம்பாதிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பனியன் கழிவுகளிலிருந்து நூலைப் பிரித்தெடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

No comments: