Wednesday, May 14, 2008

நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, மே 12: தமிழகத்தில் காலியாக உள்ள 201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனு மதி அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் திங்கள்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

நீதிமன்றங்களில் அதி கமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் துரைமுருகன்:

கடந்த ஆட்சியில் வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் நீதிப திகள் யாரும் நியமனம் செய்யப்ப டவில்லை. 81 நீதிபதிகளை நியம னம் செய்ய உயர் நீதிமன்றம் அர சுக்கு கோரிக்கை வைத்தது.அதற்கு அனுமதி தரப்பட்டது.பிறகு 181 இடங்கள் காலியாக உள் ளன என்று கேட்டார்கள்; அதற் கும் அரசு அனுமதி தந்தது. 201 நீதி பதிகளை நியமனம் செய்ய அர சின் அனுமதி பெறாமல் விளம்ப ரம் வெளியிடப்பட்டது. அத னால் அது நின்றுபோனது. இப் போது 201 நீதிபதிகள் நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள் ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது முதல் வரின் பரிசீலனையில் உள்ளது.

ச. லட்சுமணன் (திமுக):

போடி நாயக்கனூரில் உள்ள நீதிமன்றத் துக்கு புதிய கட்டடம் கட்டப்ப டுமா?

அமைச்சர் துரைமுருகன்:

நீதி மன்றங்களுக்கு இடம் தேர்வு செய்வது உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு. போடியில் நீதிமன் றம் கட்ட வேளாண் துறைக்கு சொந்தமான இடத்தை கேட்ட போது மறுத்துவிட்டதாக அர சுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. வேளாண் துறையி டம் இருந்து இடத்தைப் பெற்று புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்ட அறநிலை யத் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஒரு திட்டத்துக்கு இடம் தேவைப்படும்போது அர சின் ஒரு துறையில் இருந்து மற்ற துறைக்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

எந்தத் துறையிடமிருந்து வேண்டுமா னாலும் நிலத்தை வாங்கி விட லாம். வனத் துறை மற்றும் அறநி லையத் துறையிடமிருந்து நில த்தை வாங்குவதற்குள் வைகுண் டம் போய் பாரிஜாத மலரைக் கொண்டு வந்து விடலாம்.

No comments: