சென்னை, மார்ச் 25: இலங்கை கடற்படையினரால் பிடித் துச் செல்லப்பட்ட 12 மீன வர்களையும், அவர்களின் நான்கு படகுகளையும் விடு விக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கன்னியாகு மரி பகுதிக்கு மீனவர்கள் விரைவில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி றது. இது குறித்து அரசு செவ் வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மார்ச் 7-ம் தேதி, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், மார்ச் 10-ம் தேதி 50 மீனவர்கள் விடு விக்கப்பட்டனர்.
விடுவிக்கப் படாமல் இருந்த மீனவர்க ளையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.அதன் பலனாக இலங்கை புட்லம் நீதிமன்ற நீதிபதி டி.ஜி.எஸ்.ஏ. பெரேரா 12 மீனவர்களையும், நான்கு பட குகளையும் விடுவிக்க உத்தர விட்டார்.இதையடுத்து, அவர்கள் விரைவில் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என்று தமி ழக அரசு வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment