சென்னை, மார்ச் 25: சுதந்திரமா கச் செயல்பட முடியவில்லை என்று தமிழ்நாடு பெண் ஊராட் சித் தலைவர்கள் மாவட்ட நிர்வா கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள னர்.இது குறித்து, தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்ட மைப்பின் மாநில நிர்வாகிகள் எஸ். அருள்தேவி, டி. சுகுணாகு மாரி, வசந்தா, செல்வி, சுகன்யா ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்ப டையில் நாங்கள் வெற்றி பெற்றுள் ளோம். ஆனால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் எங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவ தில்லை.முக்கிய கோப்புகளில் கையெ ழுத்திடாமல் துணைத் தலைவர்க ளாக இருக்கும் ஆண்கள் எங் களை அலைக்கழிக்கின்றனர். தட் டிக் கேட்டால் மிரட்டுகின்றனர்.தலித் பெண் தலைவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கிராம சபைக் கூட்டங்களில் என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்ற வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை சுதந்திரமாக நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் நினைத் தால் தற்போது, ஊராட்சித் தலை வர்களை பதவி நீக்கம் செய்து விட முடியும். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும்.ரேசன் கடைகளை மேற்பார் வையிடும் பொறுப்பை கிராம பஞ் சாயத்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற பிரதிநி திகளுக்கு மதிப்பூதியமாக குறைந்த பட்சம் மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றனர்.அரசியல் கட்சிகளிடம் மனு: பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் அதிமுக, காங்கி ரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் அலுவலகங் களுக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆத ரவு தரக் கோரி எம்.எல்.ஏக்களி டம் மனு கொடுத்தனர்.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment