Sunday, March 30, 2008

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால்

சென்னை, மார்ச் 23: நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை "மாற்றத்தை நோக்கி' என்ற தலைப்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசியதாவது:

அமைச்சர் மு.க.ஸ்டாலின், போகும் இடமெல்லாம் இரண்டு நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பேசி வருகிறார். வசன கர்த்தாவின் மகனான ஸ்டாலினுக்கு, நடிகர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? யாருக்கு தகுதி உள்ளது என்பதை அப்போது முடிவு செய்வோம்.கனிமொழிக்கு எம்.பி.யாக தகுதியாக இருக்கிறதா என்பதை கரு ணாநிதி பரிசோதனை செய்து பார்த்தாரா? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. 1

967-க்குப் பிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை மாற்ற புனிதப் போரை தொடங்கி இருக்கிறோம். இந்தப் புனிதப் போரில் எங்களுக்கு வெற்றி கிடைக் கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2011-ல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிக ளிலும் வெற்றி பெறுவோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவர் 2 முறை மட்டுமே முதல்வராகவோ, அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இருக்க முடியும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.எனது குடும்பத்தினர் எக்காரணத்தை முன்னிட்டும் பதவிக்கு வரமாட்டார்கள். இதை கபாலீஸ்வரர் மேல் சத்தியமாகக் கூறுகி றேன் என்றார் சரத்குமார்.

அவைத்தலைவர் என்.முருகன்:

தமிழகத்தில் அவலமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை செய்திகளை படித்து பார்த்தாலே ஆட்சியின் அலங்கோலத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முத லிடத்தில் உள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். மத்திய அரசின் பட்ஜெட்டில், விவசாயக் கடன் 60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி செயல்படுத்தப்படும் என் பதைப் பற்றி நிதியமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

கூட்டத் தில் துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஊனமுற் றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை, சரத்குமார் வழங்கினார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னைமைலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார்அக்கட்சி தலைவர் ஆர். சரத்குமார். உடன் (இடமிருந்து) கட்சிநிர்வாகிகள் என். முருகன், கே.ஜே. நாதன்.

No comments: