Sunday, March 30, 2008

திமுக - வுடன் கூட்டணி தொடரும் - ஜெயந்தி நடராஜன்

சென்னை, மார்ச் 24: நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று நம்புவதாக காங்கி ரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பா ளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவித்தார்.மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட ஜெயந்தி நடராஜன் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கான சான் றிதழை அவர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கி ழமை பெற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலரு மான மா.செல்வராஜ் அவருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயந்தி நடராஜன் கூறியது:

காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க இந் திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருவது பற்றி நான் எதுவும் கூற விரும்ப வில்லை. ஜனநாயகத்தில் இது போன்ற பேச்சுகள் நடப்பது சகஜம்.

மன்மோகன்சிங் அரசு முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக உள்ளிட்ட கட்சி கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடரும் என்று நம்புகிறேன்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற் றியைப் பெரும் என்றார் ஜெயந்தி நடராஜன்.

மாநிலங்களவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேர வைச் செயலர் கடந்த சில தினங்களுக்கு முன் முறைப்படி அறிவித் தார்.இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட் சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கடந்த வாரம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். மத்திய மைச்சர் ஜி.கே. வாசன் ஓரிரு தினங்களில் சான்றிதழை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: