சென்னை, மார்ச் 25:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும், கர்நா டக பாஜக தலைவர் எடியூரப்பா வுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள் ளார்.மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றி தழை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார் ஜி.கே.வாசன்.மாநிலங்களவைத் தேர்தல் அதி காரியும், சட்டப் பேரவைச் செயல ருமான மா. செல்வராஜ் அவ ருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாஜக தலைவர் எடியூரப்பாவின் செயல் கண்டனத்துக்குரியது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள் ளது.
நேரில் பார்த்தேன்:
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை யின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல், உளுந்து போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிக ளுக்கு ஏற்பட்டுள்ள அவலநி லையை நேரில் பார்த்தேன்.
சோனியாவின் கவனத் துக்கு...:
நிவாரணப் பணிக ளில் அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்க ளும் அந்தந்தப் பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி வரு கின்றனர். தமிழக வெள்ளச் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து எடுத்துக் கூற இருக்கிறேன்.
மழையால் விவசாயிகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் பற்றி காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் பேசுவார்கள். நிவார ணப் பணிகளில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றார் ஜி.கே. வாசன்.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment