Sunday, March 30, 2008

இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

சென்னை, மார்ச் 29: இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷை தாக்கியவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத் துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களி டம் கூறியதாவது:

இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷ் சில அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய -இலங்கை நல்லுறவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.முதல்வருடன் தங்களுக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சில அமைப்பினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தேச விரோதச் செயலாகும்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது.

தேர்தல் ஸ்டண்ட்:

தேர்தல் ஆதாயத்துக்காக ஓகேனக்கல் கர்நாட கவுக்கே சொந்தம் என்று பா.ஜ.க. பிரச்னை கிளப்புகிறது. ஒகேனக் கல் தமிழகத்துக்கு சொந்தமானது. ரேஷன் விநியோகத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments: