சென்னை, மார்ச் 25: கிராமங்களில் தண்டோரா அடிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.அரசு அறிவிப்புகள், கோயில் திருவிழா அறிவிப்புகளை தண் டோரா அடித்துச் சொல்லும் முறை கிராமங்களில் உள்ளது.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்து வரும் தண் டோரா முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.
மேலும் இரட்டை தம்ளர் முறை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய வற்றை முழுமையாக ஒழிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.""2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் தலை மையில் சமூக சீர்திருத்த துறை என்ற புதிய துறை உருவாக்கப் பட்டது. இந்தத் துறைக்கு ஆலோசனை வழங்க பேராசிரியர் நன்னன் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சமூக சீர்திருத்தக் குழுவை அரசு அமைத்தது.
அரசுக்கு பரிந்துரை:
இந்தக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் தண்டோரா முறை ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டன'' என்றார் சமூக சீர்திருத்தக் குழுவின் உறுப் பினரும், எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார்.
இந்த பரிந்துரைகளின்படி தண்டோரா அடிக்கும் முறையை தடை செய்ய அரசு ஆலோசனை செய்து வருவ தாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment