சென்னை, மார்ச் 29: தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பாமக நிறுவனர் ராமதா ஸýக்கு, முதல்வர் கருணாநிதி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கேள்வி -பதில் வடிவில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவோம் என்று ஒருவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்."காலையில் கைது, மாலையில் விடு தலை' என்ற நிலை தொடரும் வரை எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இலவச வீடு கட்டும் திட்டம்:
ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கள் கட்டும் திட்டம் 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தைதான் "இந்திரா வீட்டு வசதி திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசு விரிவுபடுத்தியது.
சொத்துவரி உயர்வு கட்டாய மில்லை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டுள் ளதை ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் சொத்து வரியை சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குடியி ருப்பு வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழில் கட்டடங்களுக்கு 100 சதவீத மும், வணிக நிறுவனங்களின் கட்டடங் களுக்கு 150 சதவீதம் வரையும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாட் டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டு மானால் போதிய நிதி தேவை. அதற்கு சொத்து வரியை சீரமைக்க வேண்டி யது அவசியமாகும்.1993-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி யில் குடியிருப்பு வீடுகளுக்கு 100 சதவீத மும், தொழில், வணிக கட்டடங்க ளுக்கு 150 சதவீதத்திலிருந்து 200 சதவீ தம் வரையும் உயர்த்தப்பட்டது.
ஏ.பி. பரதனுக்கு வாழ்த்து:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நான்காவது முறையாக ஏ.பி. பரதன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 82 வயதான அவருக்கு, 84 வயதான நான் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.கோவையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டுக்கான அழைப்பிதழ் கிடைத் தது. மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கி றேன்.
நாட்டிலேயே முதன்முறையாக தமி ழக அரசு அளித்த ரூ. ஒரு கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள் ளது.தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை திறந்து வைத்த நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற் றுச் சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே.பச்சௌரி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) என்னை சந்தித்துப் பேசினார் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment