Sunday, March 30, 2008

ஆங்கில ஆய்வகம் அமைக்க ரூ. 54.75 லட்சம் கூடுதல் நிதி

சென்னை, மார்ச் 29: பள்ளிக ளில் ஆங்கில மொழி ஆய்வ கம் அமைக்க, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ. 54.75 லட்சத்தை கூடுதலாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வழங்கியுள்ளார்.

திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை தொகுதி யில் இரண்டு பள்ளிகளிலும், தி.நகர் தொகுதியில் நான்கு பள்ளிகளிலும், மயிலாப்பூர் தொகுதியில் ஒரு பள்ளியிலும், ஆலந்தூர் தொகுதியில் 10 பள்ளிகளிலும், தாம்பரம் தொகுதியில் 13 பள்ளிகளிலும் ஆங்கில மொழி ஆய்வகம் அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டி.ஆர். பாலு ரூ.2.40 கோடி வழங்கினார்.

இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று சென்னை மாநக ராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்று தற்போது, கூடுதலாக ரூ. 54.75 லட்சம் வழங்கியுள் ளார். ரூ. 7.50 லட்சம் வீதம் 32 அரசு பள்ளிகளுக்கு இந்த நிதி வழங் கப்படும்.அரசு பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம் அமைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் எளிதாக வேலை பெற முடியும்.

No comments: