சென்னை, மார்ச் 24: மாதவரம் நகராட்சியைக் கண் டித்து, புதன்கிழமை (மார்ச் 26) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி யின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:
மாதவரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க, அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆனால், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.மாதவரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கூடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.வீட்டுவரியை உயர்த்த மாதவரம் நகராட்சி முடிவு செய்திருப்பதாக வும் செய்திகள் வருகின்றன.
மாதவரம் நகராட்சி நிர்வாகத் தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) காலை 10 மணிக்கு நகராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Sunday, March 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment