சென்னை, மார்ச் 28: குடிபோதை யில் வேலை க்கு வரும் அரசு அதிகாரிகள் மீது ந ட வ டி க் û க எடுக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ கி.ஆறுமுகம் கோரி க்கை விடுத்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை இதுகுறித்து நடந்த விவாதம்:
கி. ஆறுமுகம் (பாமக):
காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் குடிபோதையில் வேலைக்கு வருகின்றனர். எனது தொகுதியில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் குடித்துவிட்டு பணிக்கு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே நடத்த வேண்டும். செய்யூரில் அறிவிக்கப் பட்ட அனல் மின்நிலையத்தை உடனே தொடங்க வேண்டும்.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
செய்யூரில் நிலத்தின் விலை அதிக மாக இருந்தாலும் அங்கு அனல் மின்நிலையம் அமைக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகி றது. ஒரு ஏக்கர் ரூ. 6 லட்சத்துக்கு வாங்கித் தருமாறு கேட்டுள்ளார் கள்.
கி. ஆறுமுகம்:
பிளாஸ்டிக் பொருட்களுக்கு 100 சதவீத தடை விதிக்க வேண்டும். வேலை கேட்டு போராடி வரும் 30,000 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.செங்கல்பட்டுக்கு அறிவிக்கப் பட்ட பாதாளச் சாக்கடை திட் டத்தை உடனே நிறைவேற்ற வேண் டும். செங்கல்பட்டில் சட்டக் கல் லூரி மாணவர்களுக்காக விடுதி கட்ட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment