சென்னை, ஏப். 29: கருணை அடிப்படையில் பால்வளத் துறை மற்றும் ஆவின் நிறு வன ஊழியர்களின் 21 வாரி சுகளுக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது.இது குறித்து செவ்வாய்க் கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பால்வளத் துறை ஊழி யர்களின் 9 வாரிசுகளுக்கும், ஆவின் நிறுவன ஊழியர்க ளின் 12 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை அவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.
அவர்களில் இளநிலை உதவியாளர்களாக நான்கு பேரும், கால அளவை மஸ் தூர்களாக 5 பேரும், ஆவின் சென்னை நிறுவ னத்தில் தொழிற்சாலை உத வியாளர்களாக 12 பேரும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.
பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயர், பால்வள மேம்பாட்டு ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment