சென்னை, ஏப். 28: சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் பிரதமருக்கு நான் கடி தம் எழுதியதை நிரூ பித்தால்.. என்று விடுத்த சவால் என்ன ஆனது என்று மதி முக பொதுச் செயலா ளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.இது குறித்து கேள்வி- பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடை பெறுவதாக வைகோ கூறியுள்ளார்.பொடா சட்டத்தில், வெளியே வரமுடி யாமல் அவர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார் அல்லவா? சிறையில் உள்ளவ ரைக்கூட நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளது அல்லவா? அதனால் "மினி எமர்ஜென்சி' என்று வைகோ சொல்லத் தான் செய்வார்.
சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதை நிரூபித்தால்... என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல் லுங்கள். பிறகு மெகா எமர்ஜென்சி, மினி எமர்ஜென்சி பற்றி பேசலாம்.விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக் கையின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சலுகை விலையில் சமையல் எண்ணெய் விற்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது.
2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரேஷன் கடைகள் மூலம் சமையல் எண் ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை, அரிசி போன்ற பொருள்களையும் சலுகை விலையில் வழங்கி வருகிறோம். சமீபத்தில் தலை மைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக ளுடன் நீண்ட நேரம் ஆலோசித்து விலைவாசியைக் குறைக்க சில நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.
உ.வே.சா. நினைவு இல்லம்: உ.வே.சா. நினைவு நாளான ஞாயிற்றுக் கிழமை திருவாரூர் மாவட்டம் உத்தமதா னபுரத்தில் அவரது நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை தனி மனிதராக இருந்து நிறைவாக செய்தவர் உ.வே.சாமி நாத அய்யர். அவர் முயற்சி செய்யாவிட் டால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.ஒருவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் அவர் செய்த நல்ல காரியங்களைப் போற்றக் கூடிய அரசு, திமுக அரசு என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment