சென்னை, ஏப். 28: அரசு விழா அழைப்பிதழ்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று அ.தி.மு.க., ம.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டிய தால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மானி யக் கோரிக்கை மீதான விவாத் தில் பேசிய மதிமுக எம்.எல்.ஏ.வீர இளவரசன்,
""மார்ச் 26-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங் கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், விமான நிலைய விரிவாக்கம், தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட அந்த விழாவுக்கான அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ.வான எனது பெயர் இல்லை.இது குறித்து ஏப்ரல் 25-ம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கடி தம் கொடுத்திருந்தேன். அது கண்டு கொள்ளப்படவில்லை.இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. ஜனநாயகத் துக்கு இழைக்கப்பட்ட அவமா னம்'' என்றார்.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
வேண்டும் என்றே அரசு அவ்வாறு செய்யவில்லை. அரசு விழாக்களில் சில நேரங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் கலந்து கொள்வ தில்லை. எம்.எல்.ஏ.க்கள் விரும் பினால் அவர்களின் அனுமதி பெற்று எதிர்காலத்தில் அழைப் பிதழில் பெயர் அச்சிடப்படும்.
அமைச்சர் எ.வ. வேலு:
அதி முக ஆட்சியில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசு விழா அழைப்பிதழில் இடம் பெற்றதே இல்லை. தற் போது அரசு விழா அழைப்பிதழ் களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்க ளின் பெயர்கள் அச்சிடப்படுகி றது.
கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):
எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுமே அழைப்பிதழில் பெயர் இடம் பெறும் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சொல்கி றார். எம்.எல்.ஏக்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றே விதிமுறைகளில் உள்ளது. விழா வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் எம்.எல்.ஏ.க்க ளின் உரிமை. விதிமுறைகளுக்கு மாறாக அமைச்சர் பேசக் கூடாது.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
விதிமுறைகளின்படிதான் எம்.எல்.ஏக்களின் பெயர்களை அழைப்பிதழில் போடுகிறோம்.ஆனால் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில்லை. அத னால் அரசுக்குதான் அவமானம் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவை யில் நான் கலந்து கொண்ட விழா வில் அழைப்பிதழில் பெயர் இருந்தும் அதிமுக எம்.எல்.ஏக் கள் கலந்து கொள்ளவில்லை.இனி அரசு விழா அழைப்பிதழ்க ளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்க ளின் பெயர் இடம்பெறும்.அவர்கள் கலந்து கொண்டா லும், இல்லாவிட்டாலும் எங்க ளுக்கு கவலை இல்லை.
No comments:
Post a Comment