Wednesday, April 30, 2008

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு குடியரசில் வேலை

சென்னை, ஏப். 29: ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், ஐக் கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பா னிய நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித் துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவம் பெற்ற பைப் பிட்டர் கள், ஏர் கண்டிசன் பைப்பினை பொருத்த அனுபவம் பெற்ற பிட்டர்கள், ஏர் கண்டி சன் மற்றும் டக் இன்சுலேஷன் பிரிவில் அனுபவம் பெற்ற இன்சுலேட்டர்கள், டிப் ளமோ தேர்ச்சி பெற்று எச்.வி.ஏ.சி. பைப் லைன் மற்றும் டக்ட் இன்சுலேஷன் பிரி வில் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டு நிறுவனத்துக்கு உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச விமா னப் பயணச் சீட்டு மற்றும் இதர சலுகை கள் வழங்கப்படும்.இந்தப் பணிகளுக்கு தகுதி பெற்றவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் மே 2 மற்றும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அடை யாறில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேர்முக தேர் வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

மேலும் விவரங்களுக்கு: 044 2446 4268, 2446 4269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: