Wednesday, April 30, 2008

கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறார் கருணாநிதி

சென்னை, ஏப். 27: ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கரு ணாநிதி தூண்டிவிடுகிறார் என்று அதிமுக தலைமை நிலையச் செயலா ளர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஞாயிற்றுக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும், அதனை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தி வரும் அதிமுக பொதுச்செய லாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கருணாநிதி தூண்டிவிடுகிறார்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற தொழிலா ளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம், "1997-ல் வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் தினக் கூலி ரூ. 77 ஆக இருந்தது என் றும், 2001-ம் ஆண்டு ஐந்து ரூபாய் குறைப்பதற்கு அதிமுக ஆதரவாக இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட கூலி உயர்த்தப்பட வில்லை என்றும்' தெரிவித்தார்.

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 100 வழங்க வேண்டும் என்று அதி முக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குறிப் பிட்டு, முன்னாள் முதல்வருக்கு சொந் தமான கொடநாடு எஸ்டேட்டில் ரூ.100 தினக் கூலி தரப்படுகிறதா?' என்று கோவை தங்கம் கேள்வி எழுப்பினார்.தேயிலைக்கு நியாயமான விலை கேட்டு போராட்டம் நடத்திய விவசா யிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு பொய்வழக்கு போட்டது. அதிமுக ஆட்சியில் அந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.ஊதியத்தைக் குறைக்க ஒப்பந்தம்: 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், 25 ஏக்கருக்கு குறைவாக உள்ள தேயி லைத் தோட்ட விவசாயிகளுக்கு ரூ.2,800 மானியம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அனைத்துத் தோட்ட தொழிலாளர் சங்கத்துக்கும், தோட் டத் தொழிலதிபர்கள் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த் தையில் தொழிலாளர்களின் ஊதி யத்தை குறைக்க தொழில் தகராறு சட் டம் 18 (1)-ன் கீழ் ஒப்பந்தம் ஏற்பட் டது.இந் ஒப்பந்தத்துக்கும் அதிமுக அர சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் பதை கோவை தங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த உடன்படிக்கையின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம் அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்க ளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொடநாடு எஸ்டேட்டில் தினக்கூலியாக ரூ. 90 வழங்கப்படுகி றது. பொதுவாக நிரந்தரத் தொழிலா ளர்களுக்கு மட்டுமே ரூ. 90 வழங்கப்ப டும். ஆனால் கொடநாடு எஸ்டேட் டில் தாற்காலிக தொழிலாளர்களுக் கும் ரூ. 90 வழங்கப்படுகிறது. அதனால் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிய தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.சட்டத்தில் கூறப்பட்டதைவிட அதி கமாக கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிபவர்களுக்கு போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.

எனவே கொடநாடு எஸ்டேட் தொழி லாளர்கள் பற்றி கோவை தங்கம் கவ லைப்பட வேண்டிய அவசியம் இல்லை.தைரியம் உண்டா?: கொடநாடு பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு, கரு ணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பி னர்களுக்கும், திமுகவினருக்கும் எத் தனை எஸ்டேட்டுகள், நிறுவனங்கள் உள்ளன? அதில் என்ன சம்பளம் வழங் கப்படுகிறது என்று கேட்கும் தைரியம் கோவை தங்கத்துக்கு உண்டா?

தமிழ் பற்றி வாய்கிழிய பேசும் கரு ணாநிதியின் குடும்பத்தில் எத்தனை பேர் தமிழ் வழியில் படிக்கின்றனர்? எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்? கரு ணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள்? அவர்களின் வருமானம் எவ்வளவு? கோடானு கோடி சொத்துக்களை கரு ணாநிதியின் குடும்பத்தினர் எப்படி சம்பாதித்தனர்? மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு செய்த ஊழல் என்ன? தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று பேர் மரணமடைய யார் கார ணம்? முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் எப்படி கொல்லப்பட் டார்? என்பதைப் பற்றியெல்லாம் கோவை தங்கம் கேள்வி எழுப்ப தயாரா? தத்துவம் பேசுவதா? "

"கொடநாடு எஸ்டேட்டில் ரூ. 100 சம்பளம் தருகி றீர்களா? என்று கேட்டால் ஆமாம் அல்லது இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்'' என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசி னார்.தமிழகத்தில் மின்சார வெட்டு உண்டா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசு வது வேடிக்கையாக உள்ளது.

இது போன்ற தேவையற்ற விவகா ரங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு, மின்சார விநியோகம் பற்றி தீவி ரமாக சிந்திக்க வேண்டும் என்று அவ ரைக் கேட்டுக் கொள்கிறேன்.முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் மனம்போன போக்கில் பேசுவதை கோவை தங்கம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.ஏ. செங்கோட்டையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: