சென்னை, ஏப். 29: முதல்வர் மீது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் கொடுத்துள்ள உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் மீது உரிமை மீறல் கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.செங்கோட்டையன் கொடுத்த உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலை வர் தெரிவித்தார்.
பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடை பெற்ற விவாதம் குறித்து வெளியில் அறிக்கை விட்டத தற்காக செங்கோட்டையன் மீது அமைச்சர் துரைமுரு கன், திங்கள்கிழமை (ஏப். 28) உரிமை மீறல் கொண்டு வந்தார்.அதனை ஏற்று செங்கோட்டையன் மீதான பிரச் னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப பேரவைத் தலைவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment