சென்னை, ஏப். 29: 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண் ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு சட்டப் பேரவை யில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதா வது:
இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி9 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உலக சாதனைப் படைத்துள்ளனர்.இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் விஞ்ஞானிக ளுக்கு முதல்வர் சார்பிலும், எனது சார்பிலும், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.
அப்போது அனைத் துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment