Wednesday, April 30, 2008

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி

சென்னை, ஏப். 27: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர் ஜென்சி நடைமுறையில் இருப்ப தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சியை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்து உரிமை மறுக்கப்ப டுகிறது. ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி காட்டுதல் என்று ஜனநா யக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை சர்வசாதாரண மாக திமுக அரசு கைது செய்து வருகிறது. ஏப்ரல் 26-ம் தேதி மதுரை வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட் டப் போவதாக அறிவித்த அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுரா மன் உள்ளிட்ட 200 பேரை ஏப்ரல் 25-ம் தேதி இரவே கைது செய்து மறுநாள் இரவு வரை மண்டபத் தில் அடைத்து வைத்துவிட்டு, கரு ணாநிதி மதுரையில் இருந்து திரும் பியதும் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது திமுக அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.

இனி எதிர்காலத்திலும் கருப்புக் கொடி காட்ட நினைத்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப் பேன் என்று கருணாநிதி மிரட்டுகி றார். கடந்த இரண்டு ஆண்டுக ளாக ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்க முற்பட்டு அடக்குமுறையை ஏவியதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.தில்லியில் தடை இல்லை: ஈழ தமிழர் பிரச்னையில் இலங்கை அர சைக் கண்டித்து தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தில்லி அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் எதிரே ஆர்ப்பாட் டம் நடத்த திமுக அரசு தடை விதிக்கிறது.

ஈழத்தில் தமிழ்ச்செல்வன் கொல் லப்பட்டதற்கு இரங்கல் தெரி வித்து ஊர்வலம் செல்ல முயன்ற பழ. நெடுமாறனும், நானும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம்.கடந்த மார்ச் 21-ம் தேதி ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த "தமிழ் ஈழ விடுதலை ஒருங்கி ணைப்புக் குழு' வைச் சேர்ந் தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது.மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்த புரட்சிகர பெண் கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப் பட்டது.

ஜனநாய உரிமைகளை அழிக்க காவல்துறையை முதல்வர் கருணாநிதி பயன்படுத்தி வருகி றார்.அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதை உணர்ந்து, ஜனநாயகத்தில் நம் பிக்கை உள்ள அனைவரும் திமுக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரை உட னடியாக விடுதலை செய்ய வேண் டும் என்று வைகோ தனது அறிக் கையில் கூறியுள்ளார்.

No comments: