சென்னை, ஏப். 27: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறந்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிராம சுகாதார செவிலியரின் சஸ்பெண்ட் உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா ஞாயிற்றுக்கி ழமை வெளியிட்ட அறிக்கை:
தட்டம்மை தடுப்பூசி போடுவது ஒரு குழுப் பொறுப்பு. இந்நிலையில் கிராம சுகாதார செவிலியரை சஸ்பெண்ட் செய்திருப்பது வருந்தத்தக்கது.தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்ட விதத்திலும், போடப்பட்ட முறையி லும் தவறில்லை என்று இது குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதனை ஏற்று சஸ் பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி மருந்துகளைப் பாரம ரிக்க குளர் சாதனப் பெட்டி இருப்பது போல, மற்ற ஊசி மருந்துகளையும் பராமரிக்க தனியாக குளிர் சாதனப் பெட்டி வழங்க வேண்டும்.அத்தியாவசியப் பணியில் முழுமை யாக கவனம் செலுத்த வேண்டியிருப்ப தால், உணவு மேளா, வீடுவீடாகச் சென்று கர்ப்பிணிகளைப் பரிசோதிப் பது போன்ற பணிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களை விடு விக்க வேண்டும்.
No comments:
Post a Comment