Wednesday, April 30, 2008

ஈரோட்டுக்கு புதிய ஆட்சியர்

சென்னை, ஏப். 27: ஈரோடு மாவட்ட ஆட்சியராக மகேசன் காசிராஜன் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத் தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல ரும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, ஞாயிற் றுக்கிழமை பிறப்பித்தார்.இடமாற்றம் செய்துள்ள அதிகாரிக ளின் விவரம்: (ஏற்கெனவே வகித்த பொறுப்பு அடைப்புக் குறிக்குள்)

மகேசன் காசிராஜன், ஈரோடு மாவட்ட ஆட்சியர். (முதல்வர் அலுவ லக கண்காணிப்பு பிரிவு துணை செய லாளர்). டாக்டர் அனுராதா காத்தி ராஜீவன், மாநில திட்டக் குழு உறுப்பி னர் செயலாளர். (விடுமுறையில் இருந் தவர்).

கிரிஜா வைத்தியநாதன், குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு துறை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர். (மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர்).

எஸ்.கே. பிரபாகர், எரிசக்தி துறை செயலாளர். (தமிழ்நாடு தொழில் முத லீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர்)

தயானந்த் கட்டாரியா, வேளாண்மை துறை சிறப்பு செயலா ளர் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகள் திட்ட ஆணையர், (கலால் மற்றும் அம லாக்கம் துறை ஆணையர்). தற்போது இப்பொறுப்பில் இருக்கும் பிரதீப் யாதவ் மாநில அரசுப் பொறுப்புக்குச் செல்கிறார்.

யு. சகாயம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையர். (மாநில தேர்தல் ஆணைய செயலாளர்).

பி. சீதாராமன், டாஸ்மாக், நிர்வாக இயக்குநர். (காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர்).டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த மங்கத்ராம் சர்மா மத்திய அர சின் வணிகத் துறை செயலாளராக நிய மிக்கப்பட உள்ளார். எனவே மாநில அரசுப் பணியில் இருந்து அவர் விடு விக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: