மழை வெள்ளத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந்தனர் என்று ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.மழை வெள்ளச் சேதம் குறித்து பேரவை யில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை வெள்ளத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந் தனர். 804 ஆடு, மாடு போன்ற கால்நடை கள் உயிரிழந்தன. மொத்தம் 5,782 குடிசை கள் சேதமடைந்துள்ளன. மாவட்ட ஆட்சி யர்களிடம் இருந்து வந்த தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் 47,257 ஹெக்டேர் நெல் பயிர்களும், 2,79,143 ஹெக்டேர் தானியங்கள், பருப்பு வகை பயிர்களும், 62,882 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும், 41,068 ஹெக்டேர் இதர பயிர்களும் ஆக மொத்தம் 10,62,965 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மாநிலம் முழுவதும் 9,863 கி.மீ. சாலை களும், 945 பாலங்களும், 747 குளங்கள், வாய்க்கால்களும் சேதமடைந்துள்ளன.விருதுநகர், தூத்துக்குடி, திரு நெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்க ளில் வெள்ளப் பாதிப்புகளை நான் நேரில் பார்வையிட்டேன். மக்களின் துயரத்தில் இந்த அரசு பங்கு கொள்ளும் என்றார் மு.க. ஸ்டாலின்.
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment