Saturday, March 29, 2008

ஒகேனக்கல் நீர்மின் திட்டத்துக்கு கர்நாடகம் தடையாக உள்ளது

சென்னை, மார்ச் 28: ஒகேனக்கல் நீர்மின் திட்டத்துக்கு கர்நாடக அரசு தடையாக இருப்பதாக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை, சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் எழுப்பிய கேள்விக் குப் பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசியதாவது:

ஒகேனக்கல் நீர்மின் திட் டத்தை நிறைவேற்றினால் தமிழகத்துக்கு 150 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், கர்நாடகத்துக் கும், தமிழகத்துக்கும் இடையே தண்ணீர் பிரச்னை இருப்பதால் இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது.இரண்டு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் நீர் மின் நிலையத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஷிண்டே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. காவிரி நீர் முழுவதும் கர்நாடகத்துக்கே சொந்தம். எனவே உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எங்களுக்கே வேண்டும் என்று கர்நாடகம் கூறி யது. தமிழகத்தில் கிடைக்கும் மின்சாரத்தைச் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என்றோம். அதற்கு இசையவில்லை. இல்லையென்றால், 60 சதவீதத்தைக் கர்நாடகம் வைத்துக் கொண்டு, 40 சதவீதத்தைத் தமிழ கத்துக்கு அளிக்கலாம் என்று கேட்டுக் கொண் டோம்.

தற்போது, காவரிப் பிரச்னை தீர்க்கப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கர்நாடகம் கூறு கிறது. அதனால் ஒகேனக்கல் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்றார் ஆர்க்காடு வீராசாமி.

No comments: