Saturday, March 29, 2008

வைப்பாறு தடுப்பணை பிரச்னை: திமுக - அதிமுக வாக்குவாதம்

சென்னை, மார்ச் 27: தூத்துக் குடி மாவட் டம் வைப்பாற் றில் கட்டப் பட்டுள்ள தடுப்பணை குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்க ளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடந்த விவாதம்:

போ. சின்னப்பன் (அ.தி.மு.க.):

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் வைப்பாற்றின் குறுக்கே கடலுக்கு அருகில் தடுப் பணை கட்ட அதிமுக ஆட்சியில் ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கப்பட் டது.அந்தத் தடுப்பணையை கட லுக்கு அருகில் கட்டாமல் ஒன் றரை கி.மீ. தூரத்தில் திமுக அரசு கட்டியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி யில் திட்டமிடப்பட்ட இடத்தில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

துரைமுருகன்:

சுனாமி அவசர கால நிதி திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், கடல் நீர் உட்புகாமல் இருக்க வைப்பாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.சுனாமி அவசரகால திட்ட மான, இந்த அணைகட்ட கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பணி தொடங்கப்படவில்லை.ஆனால் திமுக ஆட்சியில் 16 மாதத்தில் கட்ட வேண்டிய அணை ஏழு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. (அப் போது துரைமுருகன் ஜெயல லிதா பெயரை குறிப்பிட்டு ஒரு கருத்தைச் சொன்னதால் பேர வையில் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது.)

முதல்வர் கருணாநிதி:

அம்மா ஆட்சி என்று அதிமுக உறுப்பி னர்கள் குறிப்பிடுவது புதிதல்ல.இது இன்று அதிகமாகிவிட்டது.இருந்தாலும் துரைமுருகன் கூறிய வற்றை அவை குறிப்பிலிருந்து நீக் குமாறு கேட்டுக் கொள்கிறேன்.உடனே துரைமுருகன் கூறி யதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தர விட்டார்.

போ. சின்னப்பன்:

கடல்நீர் உட் புகாமல் இருக்க கடலுக்கு அரு கில் கட்டப்பட வேண்டிய தடுப்ப ணையை, ஒன்றரை கி.மீ. தூரத் தில் திமுக அரசு கட்டியுள்ளது.

துரைமுருகன்:

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டமிட்ட இடத்தில் தான் தடுப்பு அணை கட்டப்பட் டது. அணை கட்டும் பணி நடக் கும்போது ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் மேற்பார்வையிட்ட னர்.

No comments: