Saturday, March 29, 2008

கர்நாடகத்தின் எதிர்ப்பை தடுத்து நிறுத்துங்கள்

சென்னை, மார்ச் 27: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியு றுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியா ழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக ளின் ஏற்போடு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவி யோடு ரூ. 1,334 கோடி செலவில் ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது.இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து கர்நாடக மாநில பா.ஜ.க.வும், கன் னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. திட்டத்தை எதிர்த்து நீதிமன் றத்தில் வழக்குப் போடப் போவதாகவும் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூ ரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவி வரும் இந்த எதிர்ப் புப் போக்கைக் கண்டித்து, ஒகேனக்கல் லில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.அதிமுக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டது.

பேரவையில் ஒருமனதாக தீர்மானம்:

இச்சூழ்நிலையில் தமிழக சட்டப் பேர வையில் மத்திய அரசை வலியுறுத்தி வியா ழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.பேரவையில் கேள்வி நேரம் முடிந்த தும், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தானாக முன் வந்து இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தின் வறண்ட பகுதிகளான தர் மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நீண்ட காலமாக அரசின் பரிசீலினையில் இருந்து வருகிறது.1997 - ல் இருந்த வாஜ்பாய் அரசும், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும், தற்போதுள்ள மன்மோகன் சிங் அரசும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

கர்நாடகத்துக்கு பாதிப்பில்லை...

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்தத் திட்டத்துக்கு திடீரென எதிர்ப்பு கள் வருவது நமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தருகிறது.தமிழக எல்லைக்குள் ஒடிக்கொண்டி ருக்கும் காவிரி நீரை எடுத்து, குடிநீர் தேவையினால் தவித்துக் கொண்டிருக் கும் மக்களுக்கு வழங்கும் திட்டமே ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இத னால் கர்நாடக மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் திட் டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை வழங்கும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இந் தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறை யாண்மைக்கும் எதிரானது.

மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகியவற் றின் அனுமதியை 1998 - ல் பெற்று, ஜப் பான் நாட்டு வங்கியின் நிதி உதவியோடு நிறைவேற்றப்பட உள்ள இந்தத் திட்டத் துக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிரதமருக்கு கருணாநிதி கடிதம்:

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இருக்கும்படி கர்நாடக அரசை வலியுறுத்துமாறு, மார்ச் 17-ம் தேதி எழுதிய கடிதத்தில், பிரதமர் மன் மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.தமிழகம் எப்போதும் பக்கத்து மாநி லங்களுடனும், அந்த மாநில மக்களுட னும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற மத் திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் எதிர்ப்புப் போக் கினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுமா றும் இந்தப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

No comments: