சென்னை, மார்ச் 27: மனித உரிமைக் கல் வியை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரி வுபடுத்த வேண்டும் என்று ரவிக்குமார் எம்.எல்.ஏ. சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இது குறித்து நடந்த விவாதம்:
ரவிக்குமார்:
ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் 385 பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மனித உரிமைக் கல்வி நடத்தப் படுகிறது. மதுரையில் உள்ள "மனித உரிமைக் கல்வி நிறுவனம்' என்ற அமைப்பு, மனித உரிமை பாடத்தை நடத்துகிறது.இந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் பள்ளி களில் 9, 10-ம் வகுப்புகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையால் நடத் தப்படும் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சர் தமிழரசி:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் மனித உரிமைப் பாடத்தை 9, 10 வகுப்பு மாணவர்களும், ஆசிரியர் களும் விரும்பவில்லை. அதனால் இந்தத் திட்டத்தை விரிவுப்ப டுத்தும் திட்டம் இல்லை. இந்தத் திட்டத்தை மற்ற பள்ளிகளுக் கும் விரிவுபடுத்துவது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்லப்படும்.
No comments:
Post a Comment